சத்தற்ற உணவு, சாப்பிட்ட பிறகு வாய்சுத்தியில் கவனக்குறைவு, வாயில் தங்கிவிடும் உணவுப் பகுதிகள் புளித்து சுரப்பிகளை புண்ணாக்கி கொப்பளங்கள் ஏற்படுதல், தேவையில்லாமலேயே வீர்யமுள்ள மருந்துகளை அதிகம் சாப்பிடுதல்
தாம்பூலம் போடுபவர்கள் பாக்கும் சுண்ணாம்பும் அதிகமாகச் சேர்ப்பது, பழக்கமில்லாத சுண்ணாம்பை உபயோகிப்பது, காரமுள்ள வெற்றிலை, பச்சைப்பாக்கு முதலிய காரணங்களால் வாய்ப்புண் மற்றும் கொப்பளங்கள் ஏற்படுகின்றன.
கருங்காலிக் கட்டையை வெட்டிப் பெருந்தூளாக இடித்து தண்ணீரில் போட்டு (60 கிராம் கட்டைக்கு 1 லிட்டர் தண்ணீர் கஷாயமாக்கி (250 ml) கஷாயத்தை வடிகட்டி மறுபடியும் இறுகித் திரளும் வரை காய்ச்சி இறக்கி நிழலில் காய வைத்துக் கொள்ளவும். நல்ல துவர்ப்புச் சுவையுள்ள இது காசுக் கட்டி என்று பெயர். வாய்ப்புண், அஜீர்ணபேதி, மலத்துடன் ரத்தப்போக்கு, ஈறுகரைந்து பல்வேர் தெரிதல், பற்களிலிருந்து ரத்தம் கசிதல், கூச்சம், வாய்க்கொப்பளம் முதலியவைகளில் இதன் தூளை 2-6 டெஸிக்ராம் அளவில் தேனில் குழைத்து வாயில் சிறிது நேரம் வைத்திருந்து விழுங்க குணம் தெரியும்.
வெளுப்பு கத்தக்காம்பு ஒதலை மரத்தின் இலைகளிலிருந்து எடுக்கப்பெறம் சத்து (white catechu) கசப்பும் துவர்ப்புள்ள இது எகிறுகளில் வீக்கம், பல்வலி, வாய்க்கொப்பளம், எரிச்சல், தொண்டைப்புண், தொண்டைக் கம்மல் இவைகளில் காசுக்கட்டிக்குக் குறிப்பிட்டது போல சாப்பிட மிகவும் சிறந்தது.
பால்வடியும் மரங்களாகிய ஆல், அரசு, அத்தி மற்றும் இத்திமரப்பட்டைகளுடன் கருங்காலிக் கட்டை மற்றும் வேலம்பட்டையும் சேர்த்து கஷாயம் காய்ச்சி வாய் கொப்பளிக்க எப்பேர்ப்பட்ட வாய்க்கொப்பளமும், வாய் வேக்காளமும் குணமாகிவிடுகின்றன.
அதிமதுரத்தூள் 20 கிராம், காசுக்கட்டி 10 கிராம், கத்தக்காம்பு 10 கிராம், நெய்யில் பொரித்த வால் - மிளகுத்தூள் 5 கிராம் சேர்த்துத் தண்ணீர் விட்டறைத்து சிறிய மாத்திரைகளாகச் செய்து வாயிலடக்கிக் கொள்ள வாய்ப்புண், தொண்டைப்புண், வாய்க்கொப்பளம் நீங்கி விடும்.
திரிபலா எனும் கடுக்காய், நெல்லிக்காய், தானிக்காய்ச் சூர்ணத்துடன் அதி மதுரத்தூள் சீமமாக 5 கிராம் வீதமெடுத்து தேன் மற்றும் நெய் 1 ஸ்பூன் (5ml) அளவில் குழைத்து வாய்க்கொப்பளத்தில் பூச அவை நீங்கி விடும்.
Comments
Post a Comment