முதலில் நல்ல ஒய்வு, கம்பளி போன்ற உஷ்ணப் பாங்கான விரிப்பு கொண்ட
படுக்கையில் உடலை அசைக்காமல் படுத்திருப்பதும் (மல்லாந்து கால்களை நீட்டி) நல்லது. தசைகள் விறைத்திருப்பதும் தசைகளை இயக்கும் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தமும்தான் இந் நோய்க்குக் காரணம்.
தத்தூராதி தைலம் - மிக எளிய முறை. கருஊமத்தை இலை அல்லது சாதாரண ஊமத்தையை இடித்துப் பிழிந்த சாறு 200 IL. நல்லெண்ணெய் 400 IL ஆகிய இரண்டையும் அடுப்பிலேற்றிச் சாறு சுண்டிக் கசண்டாகும் வரை காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். சற்று ஆறியதும் கட்டிச் சூடம் 10 கிராம்ட தூளாக்கிப் போட்டு கலக்கி விடவும். இந்தத் தைலத்தை வலியுள்ள பகுதிகளில் தடவிக் கோதுமைத் தவிட்டை வறுத்து ஒத்தடம் கொடுக்கவும். தினம் மூன்று வேளை ஒத்தடம் கொடுக்கவும். ஒத்தடம் கொடுத்த பின் ஏற்படும் வியர்வையையும் எண்ணெய் பிசுக்கையும் துணியால் துடைத்துவிட்டு ஓய்வு தரவும். பிறகு மெல்லிய பூச்சாக இம் மருந்தைத் தடவி விடுவதும் நல்லதே. சிலருக்குச் சூடான நமைச்சல் தரும். அவர்களது தேகவாகு அப்படி. அப்போது இதை நிறுத்தவும்.
சசிஸார தைலம் - ஓமம் 400 கிராம், 4 லிட்டர் தண்ணீரில் கஷாயமிட்டு 1 லிட்டர் மிதமாகக் காய்ச்சி முன் போல எண்ணெய்யுடன் காய்ச்சி எடுத்துக் கற்பூரம் கலந்து கொள்ளவும். தத்துராதி தைலம் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு இது நல்லது.
Comments
Post a Comment