Skip to main content

ஜல்லிகட்டும்!!! பீட்டாவின் சதிகளும் சூழ்ச்சிகளும்!!!

நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் பாலில் நிறைய கேல்ஷியம் இருக்கிறதென்று...

நம் முன்னோர்கள் சொல்லி விட்டு போன எல்லாமே நமக்கு நல்ல வாழ்க்கை அமைய மற்றும் எதிர்காலம் சிறப்பாக அமைய உதவும்...

ஆனால் நாம் அன்னிய கலாச்சாரத்தை சிறப்பாக எண்ணி அதன் பிடியில் சிக்கியுள்ளோம்.. நம் கலாச்சாரத்தை கீழாக நினைக்கிறோம்... 
ஆனால் அது உண்மை அல்ல...

நம் முன்னோர்கள் நாட்டு பசுக்கள் வளர்த்தனர்...
நாட்டு பசுவின் பால் பல நோய்கள் வராமல் தடுக்கும் பல நோய்களுக்கு இயற்கை மருந்தாக அமையும்...

ராபர்ட் க்லைவ், இந்திய வணிகத்தில் நுழைந்த ஆங்கிலேயன் நம் கலாச்சாரத்தை பார்த்து வியந்து அதை அழிக்க நினைத்தான்...

அவன் வியந்த சிறப்பானவற்றில் முக்கிய இரண்டு, குருகுல கல்வி மற்றும் விவசாயம்..

நாம், மாட்டு சாணம், கோமியம் போன்ற இயற்கை உரங்களை உபயோகித்தோம் ஆனால் அன்னியர்கள் ரசாயன உரங்கள் எல்லாம் உபயோகித்தனர் அது உடம்புக்கு கேடு விளைவிக்கும்...

நம் விவசாய சிறப்பை கெடுக்க வேண்டும் என்று 1910ஆம் ஆண்டு பசுவதைக்கூடம்  ஆரம்பித்தான்... விடுதலைக்கு முன் 350 பசுவதைக்கூடங்கள்(இன்று 3500 பசுவதைக்கூடங்கள்), 90% நாட்டு பசுக்கள் கொல்லப்பட்டன.......

 நாள் ஒன்றிற்கு பத்தாயிரம் முதல் முப்பதாயிரம் பசுக்களும் இறைச்சிக்காகவும் தோலுக்காவும் வெட்டியும்
அடித்தும் கொல்லபடுகிறது

நம் விவசாயி முதன்முறையாக தடுமாறினான்.. வேறு வழியின்றி ரசாயன உரங்களை உபயோகிக்க ஆரம்பித்தான்..
இப்படி நம் நாட்டு பசுக்கள் மற்றும் காளைகளை இழந்தோம்...

மறுபக்கம் நூறு காளைகளின் விந்து எடுத்து அவன் நாட்டை வளர்த்தான்...

அவ்வாறு கடத்தப்பட்ட நூறு காளைகளின் விந்தின் மூலம் இன்று ஒரு நாடே பால் பொருட்கள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது, அந்த நாடு தான் பிரேசில்...


அவர்களின் ஜெர்சி மாடுகளையும் நம் நாட்டு பசுக்களையும் கலப்பினம் செய்து அந்த கலப்பின பசுக்களை இங்கே விட்டு சென்றனர்... 

ஜெர்சி மாடுகள் நாட்டு பசுவை விட குறைந்த அளவு பால் தான் தரும்..

நாட்டு பசுக்களுக்கு வியர்வை நாளங்கள் (அல்லது வியர்வை சுரப்பிகள்) இருக்கும் ஆனால் ஜெர்சி மாடுகளுக்கு அது இல்லை, இதனால் பாலில் வியர்வை கலந்துவிடும்...

நாட்டு பசுவின் பாலில் பல சத்துக்கள் உள்ளன அவை BP சக்கரை நோய் வாதம் என பல நோய்களுக்கு இயற்கை மருந்தாக அமையும் ஆனால் ஜெர்சி மாட்டின் பால் இந்த நோய்களுக்கு காரணமாக அமைந்தது...


நம் நாட்டு பசுக்கள் மற்றும் காளைகளின் பெருமைக்கு அளவே இல்லை... 

சமீபத்தில் இந்தியாவில் ஒரே ஒரு  காங்கேயம் என்ற இனக்காளை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது நம்மில் எத்தனை பேர் அறிவார்கள் ????

அத்தனை சிறப்பு மிக்க பசுக்களும் காளைகளும் நம்மிடம் மட்டுமே இருந்தது...


ராபர்ட் க்ளைவ் போலவே நம் கலாச்சாரம் மற்றும் வளத்தையும் அழிக்க நினைக்கும்   PETA  ஜல்லிக்கட்டை நிறுத்த அவ்வளவு ஆர்வம் காட்டினர்.... 

PETA ராபர்ட் க்ளைவ்வை விட ஒரு படி மேலே, தமிழர்களையே அழிக்க நினைக்கிறது...

நம் காளைகளை வேறோடு அழித்தால் நாம் அவர்களிடம் தான் கையேந்த வேண்டிய நிலை வரும், அவர்களின் ஊசிகளை கொண்டு தான் நம் பசுக்களை இனப்பெருக்கம் செய்ய முடியும்...

ஏன் ஜல்லிக்கட்டு விளையாடுகிறோம் என்று நமக்கே தெரியாத நிலையில் நாமே அதை நிறுத்த ஆதரவு தருகிறோம்...

ஆடை அலங்காரத்தில் ஆங்கில கலாச்சாரத்தை பார்த்து மயங்கி இன்று அதை தான் பின்பற்றி கொண்டிருக்கிறோம்...

ஆண்கள் அன்னிய வகை உள்ளாடைகளை அணிவதால் விந்தணுக்கள் உற்பத்தி குறையும்...

பெண்கள் இன்று அணியும் லெக்கின்ஸ் மற்றும் நாப்கின்ஸ்(napkins)  உபயோகித்தல் புற்றுநோய்,  மாதவிலக்கு பிரச்சினைகள், கருத்தரிக்காமல் போவதற்கும் முக்கிய காரணமாக  உள்ளது...


இவ்வளவு ஏன் நாம் மருந்தாக உண்ணும் அலோபதி மாத்திரைகள் சிரப் எல்லாமே கேடு விளைவிக்கும் என்பதை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

 உடம்பு சரியில்லை என்று மருத்துவமனை சென்றால் அங்கும் விஷம் தான் தரப்படுகிறது....


அதிலும் 6 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளிக்கான மருந்துகளை கொடுத்தால் அபாயகரமான பக்க விளைவுகள் ஏற்படும் என அமெரிக்கன் அகாடெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிவுறுத்துவதால், இயற்கை வழிமுறைகளை பின்பற்றுவதே நல்லது. வீட்டு சிகிச்சைகள் இந்த அறிகுறிகளை குறைத்து, நோய் எதிர்ப்பு அமைப்பை வலு பெறச் செய்யும்.

குருகுல கல்வி அழிந்து இன்று கல்வி பயில்விக்கிறோம் என்ற பெயரில் பல  பள்ளிகள் கல்வியை பணத்திற்காக மட்டுமே கற்றுத் தருகிறார்கள்... 

இவ்வாறு,

விவசாயம்

கல்வி

சித்த மருந்து

கலாச்சாரம்

உணவு

உடை

மொழி

என்று பல மாறிவிட்டது...

இன்னும் எஞ்சி இருக்கும் எல்லாமே அழிக்கப்பட்டு ஒரு நாள் தமிழர்களும் அழிக்கப்படும் நிலை வெகு தொலைவில் இல்லை...


சிந்திக்க வேண்டிய நேரத்தை கடந்துவிட்டோம்... ஆனால் செயல்பட்டால் நம்மை(தமிழர்களை) நாமே காப்பாற்றிக் கொள்ளலாம்.....



ஒன்று சேர்வோம்

செயல்படுவோம்...

நமது தமிழ் இனத்தையும்

தமிழ்த்தாய் மண்ணையும் , 

மண்ணின் வளத்தையும்

 உயிர்களையும் காப்போம்....


ஜெய் ஹிந்த்.....

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...

தூக்கணாங்குருவி கூடு...

ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஸ்யங்களின் பெட்டகம்.. அவைதான் தூக்கணங் குருவிகள்,.. தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம். இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,.. தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்கும், உள்ளே இருக்கும் அந்த வடிவமைப்பையும், மிருதுவையும் பார்க்கும் போது நாம் கூட்டிற்குள் போய் தூங்கி கொள்ளலாமா என ஆசை வருவது தவிர்க்கமுடியாது. கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை...