Skip to main content

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள்


"பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு
வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு
கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும்
பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும்
வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர
வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும்
நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே
குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும்
குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி
குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி
ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு
இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு
குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே
பரதேசியாயிருப்பார் பாரே"

அகத்தியர் புனசுருட்டு - 500

இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில்
பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர்.

மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள்
வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி
நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு , கடன் தொல்லை , மனக்குழப்பம் போன்றவற்றிக்கு ஆட்பட்டு தனது வீட்டையே இழக்கும் சூழல் உருவாகும்.

இதுபோன்ற சூழ்நிலை களில் பாதிப்படைவோர் தனதுகிரகம் சரியில்லை, வீட்டின் வாஸ்து சரியில்லை என குழம்பிக் கொண்டிருப்பார்கள்.

எனவே இதில் கண்ட செடி,மரங்களை உடனே
அகற்றி நலம் பெறுங்கள்.

மேற்கண்ட செடி , மரங்களின் வகைகள் :

"1.பருத்தி,
2.அகத்தி,
3.பனை,
4.நாவல்,
5.அத்தி,
6.எருக்கு,
7.வெள்ளெருக்கு
8.புளியமரம்,
9.கருவேலன்,
10.முருங்கை,
11,கல்யாண முருங்கை,
12.கள்ளி
13.கருவூமத்தை,
14.இலவம்,
15.வில்வம்,
16.உருத்திராட்சம்,
17.உதிரவேங்கை"

இந்த 17,வகைகளை வீட்டில் வளர்க்கவே கூடாது.

Comments

  1. ஏன் வளர்த்தகூடாது என்று பதிந்திருந்தால் இன்னும் பயனாக இருக்குமே...ஏனென்றால் முருங்கை மற்றும் கல்யான முருங்கை இரண்டுமே உடலை வலிமை படுத்த கூடியது..மற்றும் நாவல் மரம் நீரிழிவுக்கு உகந்தது

    ReplyDelete
    Replies
    1. ஐயா மரங்கள் மிக நல்லதுதான்,அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் ஆனால் வீட்டில் வளர்க்க கூடாது அவ்வளவே

      Delete
    2. முருங்கை மரம் இருந்தால் கம்பளி பூச்சிகள் வரும். நாவல் மரம் இருந்தால் பாம்புகள், வண்டுகள் வரும். அதனால் வீட்டில் வளர்க்க கூடாது. ஆனால் தோட்டத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய மரங்கள்.

      Delete
  2. மனிதனுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தற்பொழுது கிடைக்கிறது...உபயோகபடுத்தினால் நோய்களிலிருந்து தற்காத்து கொள்ளலாம்..
    சில பழைமை கூற்றுகளை சரிசெய்து கொள்ளலாம்

    ReplyDelete
    Replies
    1. மழைக்காலத்தில் முருங்கை மரத்தில் இருந்து வரும் கம்பளி பூச்சிகளை கட்டுப்படுத்த முடியாது.

      Delete
  3. எங்கள் தோட்டத்தில் சாலை போட்டுளோம் அதற்கு அருகில் பனை,நாவல் மரங்கள் உள்ளது.இதில் ஏதேனும் வாஸ்து பிரச்சனை உள்ளதா?

    ReplyDelete
  4. வீட்டின் எதிரில் பனை மரம்கள் உள்ளது. வேறு ஒருவர் இடத்தில்.. இருக்கலாமா ஐயா

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம் தவறில்லை, நம் சொந்த வீட்டில் தான் இருக்க கூடாது என்பது என் கருத்து

      Delete
  5. பேரிச்சை மரம் valarkalaaama

    ReplyDelete
    Replies
    1. வளர்க்கலாம், தென்னைமரம் அருகில் வளர்க்க வேண்டாம், இதன் இலைகள் தென்னை மரத்தை வளரவிடாது

      Delete
  6. நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

    ReplyDelete
  7. முருங்கையில் கம்பளி பூச்சி வந்தால் பெருங்காயத்தை நீரில் கரைத்து தெளித்தால் போய்விடும்.இது நான் கண்ட அனுபவம்.

    ReplyDelete
  8. Naval maram yen veetil valarkka koodathu

    ReplyDelete
  9. இதில் பரதேசி என்ற சொல் வடமொழியில் இருந்து தமிழுக்கு வந்த சொல். இதை அகத்தியர் எப்படி எழுதியிருக்க முடியும் என்று புரியவில்லை.

    ReplyDelete
  10. Vengai Maram Veetil vaikalama

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...

தூக்கணாங்குருவி கூடு...

ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஸ்யங்களின் பெட்டகம்.. அவைதான் தூக்கணங் குருவிகள்,.. தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம். இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,.. தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்கும், உள்ளே இருக்கும் அந்த வடிவமைப்பையும், மிருதுவையும் பார்க்கும் போது நாம் கூட்டிற்குள் போய் தூங்கி கொள்ளலாமா என ஆசை வருவது தவிர்க்கமுடியாது. கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை...