- மனைக்கு ஆகா விருட்சங்கள்
"பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு
வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு
கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும்
பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும்
வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர
வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும்
நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே
குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும்
குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி
குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி
ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு
இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு
குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே
பரதேசியாயிருப்பார் பாரே"
அகத்தியர் புனசுருட்டு - 500
இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில்
பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர்.
மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள்
வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி
நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு , கடன் தொல்லை , மனக்குழப்பம் போன்றவற்றிக்கு ஆட்பட்டு தனது வீட்டையே இழக்கும் சூழல் உருவாகும்.
இதுபோன்ற சூழ்நிலை களில் பாதிப்படைவோர் தனதுகிரகம் சரியில்லை, வீட்டின் வாஸ்து சரியில்லை என குழம்பிக் கொண்டிருப்பார்கள்.
எனவே இதில் கண்ட செடி,மரங்களை உடனே
அகற்றி நலம் பெறுங்கள்.
மேற்கண்ட செடி , மரங்களின் வகைகள் :
"1.பருத்தி,
2.அகத்தி,
3.பனை,
4.நாவல்,
5.அத்தி,
6.எருக்கு,
7.வெள்ளெருக்கு
8.புளியமரம்,
9.கருவேலன்,
10.முருங்கை,
11,கல்யாண முருங்கை,
12.கள்ளி
13.கருவூமத்தை,
14.இலவம்,
15.வில்வம்,
16.உருத்திராட்சம்,
17.உதிரவேங்கை"
இந்த 17,வகைகளை வீட்டில் வளர்க்கவே கூடாது.
"பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு
வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு
கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும்
பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும்
வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர
வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும்
நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே
குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும்
குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி
குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி
ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு
இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு
குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே
பரதேசியாயிருப்பார் பாரே"
அகத்தியர் புனசுருட்டு - 500
இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில்
பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர்.
மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள்
வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி
நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு , கடன் தொல்லை , மனக்குழப்பம் போன்றவற்றிக்கு ஆட்பட்டு தனது வீட்டையே இழக்கும் சூழல் உருவாகும்.
இதுபோன்ற சூழ்நிலை களில் பாதிப்படைவோர் தனதுகிரகம் சரியில்லை, வீட்டின் வாஸ்து சரியில்லை என குழம்பிக் கொண்டிருப்பார்கள்.
எனவே இதில் கண்ட செடி,மரங்களை உடனே
அகற்றி நலம் பெறுங்கள்.
மேற்கண்ட செடி , மரங்களின் வகைகள் :
"1.பருத்தி,
2.அகத்தி,
3.பனை,
4.நாவல்,
5.அத்தி,
6.எருக்கு,
7.வெள்ளெருக்கு
8.புளியமரம்,
9.கருவேலன்,
10.முருங்கை,
11,கல்யாண முருங்கை,
12.கள்ளி
13.கருவூமத்தை,
14.இலவம்,
15.வில்வம்,
16.உருத்திராட்சம்,
17.உதிரவேங்கை"
இந்த 17,வகைகளை வீட்டில் வளர்க்கவே கூடாது.
வாழ்க
ReplyDeleteஏன் வளர்த்தகூடாது என்று பதிந்திருந்தால் இன்னும் பயனாக இருக்குமே...ஏனென்றால் முருங்கை மற்றும் கல்யான முருங்கை இரண்டுமே உடலை வலிமை படுத்த கூடியது..மற்றும் நாவல் மரம் நீரிழிவுக்கு உகந்தது
ReplyDeleteஐயா மரங்கள் மிக நல்லதுதான்,அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் ஆனால் வீட்டில் வளர்க்க கூடாது அவ்வளவே
Deleteமுருங்கை மரம் இருந்தால் கம்பளி பூச்சிகள் வரும். நாவல் மரம் இருந்தால் பாம்புகள், வண்டுகள் வரும். அதனால் வீட்டில் வளர்க்க கூடாது. ஆனால் தோட்டத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய மரங்கள்.
Deleteமனிதனுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தற்பொழுது கிடைக்கிறது...உபயோகபடுத்தினால் நோய்களிலிருந்து தற்காத்து கொள்ளலாம்..
ReplyDeleteசில பழைமை கூற்றுகளை சரிசெய்து கொள்ளலாம்
மழைக்காலத்தில் முருங்கை மரத்தில் இருந்து வரும் கம்பளி பூச்சிகளை கட்டுப்படுத்த முடியாது.
Deleteஎங்கள் தோட்டத்தில் சாலை போட்டுளோம் அதற்கு அருகில் பனை,நாவல் மரங்கள் உள்ளது.இதில் ஏதேனும் வாஸ்து பிரச்சனை உள்ளதா?
ReplyDeleteஇல்லை ஐயா
ReplyDeleteவீட்டின் எதிரில் பனை மரம்கள் உள்ளது. வேறு ஒருவர் இடத்தில்.. இருக்கலாமா ஐயா
ReplyDeleteஇருக்கலாம் தவறில்லை, நம் சொந்த வீட்டில் தான் இருக்க கூடாது என்பது என் கருத்து
Deleteபேரிச்சை மரம் valarkalaaama
ReplyDeleteவளர்க்கலாம், தென்னைமரம் அருகில் வளர்க்க வேண்டாம், இதன் இலைகள் தென்னை மரத்தை வளரவிடாது
Deleteநன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
ReplyDeleteமுருங்கையில் கம்பளி பூச்சி வந்தால் பெருங்காயத்தை நீரில் கரைத்து தெளித்தால் போய்விடும்.இது நான் கண்ட அனுபவம்.
ReplyDeleteNaval maram yen veetil valarkka koodathu
ReplyDeleteஇதில் பரதேசி என்ற சொல் வடமொழியில் இருந்து தமிழுக்கு வந்த சொல். இதை அகத்தியர் எப்படி எழுதியிருக்க முடியும் என்று புரியவில்லை.
ReplyDeleteVengai Maram Veetil vaikalama
ReplyDelete