காட்டு சீரகம் ஒரு சிறிய பார்வை :-
➖ ➖ ➖ ➖ ➖ ➖ ➖ ➖
பாடல் :-
“கைகறுப்பு மாறும்கடிய மேகம் போகும்
மெய்குளிரும் பித்தம் விளையுமோ _ மெய்யகரி
கெட்டு பனைமுலையாய் குன்மவாதம் தொலையும்
காட்டு நற்சீரகத்தைக் காண்.”
-அகத்தியர் குணபாடம்-
காட்டு சீரகத்துக்கு ‘வன சீரகா’ என்ற வடமொழி பெயர் உண்டு.
"சிற்றிலை" எனவும் தமிழில் அழைக்கின்றனர்.
காட்டு சீரகம் நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்க கூடியது. விஷ காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கக்கூடியயது.
அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், மற்றும் வயிற்று வலியை போக்கும் தன்மை உடையது.
வயிற்று பூச்சிகளை வெளியேற்றும்.
தோல் நோய்களுக்கு அற்புத மருந்து.
அரை ஸ்பூன் காட்டு சீரகப் பொடி, ஒரு ஸ்பூன் சமையலுக்கு பயன்படும் சீரகம், சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்தால், வைரஸ் உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும்.
மேலும். ...
விஷக் காய்ச்சல், மலேரியா காய்ச்சல், ஒவ்வாமையினால் ஏற்படும் காய்ச்சலை தணிக்க கூடியது.
அஜீரணத்துக்கு நல்லது.
நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு அதனுடன் சிறிது எழுமிச்சை சாறு, காட்டு சீரகப்பொடி சேர்த்து லேசாக சூடு செய்ய வேண்டும்.இதை தலைக்கு தடவிய பின், சிறிது நேரம் கழித்து குளித்தால் பேன்கள் கொல்லப்படும். முடி பாதுகாக்க படும்.
இதே எண்ணெய் யை சொறி மற்றும் சிரங்கு களுக்கு மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம்.
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் எள்ளுப்பொடி, அரை ஸ்பூன் காட்டு சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனை வடிகட்டி காலை, மாலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால், வெண்புள்ளி, உள்ளங்கையில் ஏற்படும் கரும்புள்ளியை போக்கும். உடலுக்கு குளிர்ச்சி, பலத்தை கொடுக்கும்.
காலில் ஏற்படும் கரப்பான் களுக்கு
செம்பருத்தி இலை சாற்றில், காட்டு சீரகத்தை அரைத்துப் போட குணமாகும்.
குறிப்பு....
காட்டு சீரகத்தை சுண்ணாம்பு நீரில் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்து உலர்த்தி புடைத்து சுத்தப்படுத்தி வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.
➖ ➖ ➖ ➖ ➖ ➖ ➖ ➖
பாடல் :-
“கைகறுப்பு மாறும்கடிய மேகம் போகும்
மெய்குளிரும் பித்தம் விளையுமோ _ மெய்யகரி
கெட்டு பனைமுலையாய் குன்மவாதம் தொலையும்
காட்டு நற்சீரகத்தைக் காண்.”
-அகத்தியர் குணபாடம்-
காட்டு சீரகத்துக்கு ‘வன சீரகா’ என்ற வடமொழி பெயர் உண்டு.
"சிற்றிலை" எனவும் தமிழில் அழைக்கின்றனர்.
காட்டு சீரகம் நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்க கூடியது. விஷ காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கக்கூடியயது.
அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், மற்றும் வயிற்று வலியை போக்கும் தன்மை உடையது.
வயிற்று பூச்சிகளை வெளியேற்றும்.
தோல் நோய்களுக்கு அற்புத மருந்து.
அரை ஸ்பூன் காட்டு சீரகப் பொடி, ஒரு ஸ்பூன் சமையலுக்கு பயன்படும் சீரகம், சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்தால், வைரஸ் உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும்.
மேலும். ...
விஷக் காய்ச்சல், மலேரியா காய்ச்சல், ஒவ்வாமையினால் ஏற்படும் காய்ச்சலை தணிக்க கூடியது.
அஜீரணத்துக்கு நல்லது.
நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு அதனுடன் சிறிது எழுமிச்சை சாறு, காட்டு சீரகப்பொடி சேர்த்து லேசாக சூடு செய்ய வேண்டும்.இதை தலைக்கு தடவிய பின், சிறிது நேரம் கழித்து குளித்தால் பேன்கள் கொல்லப்படும். முடி பாதுகாக்க படும்.
இதே எண்ணெய் யை சொறி மற்றும் சிரங்கு களுக்கு மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம்.
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் எள்ளுப்பொடி, அரை ஸ்பூன் காட்டு சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனை வடிகட்டி காலை, மாலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால், வெண்புள்ளி, உள்ளங்கையில் ஏற்படும் கரும்புள்ளியை போக்கும். உடலுக்கு குளிர்ச்சி, பலத்தை கொடுக்கும்.
காலில் ஏற்படும் கரப்பான் களுக்கு
செம்பருத்தி இலை சாற்றில், காட்டு சீரகத்தை அரைத்துப் போட குணமாகும்.
குறிப்பு....
காட்டு சீரகத்தை சுண்ணாம்பு நீரில் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்து உலர்த்தி புடைத்து சுத்தப்படுத்தி வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.
Comments
Post a Comment