Skip to main content

ஆண்டாள் கிளி உருவாகும் விதம்:(கிளி செய்பவர் எழுதியது)

 காலை 10 மணி வாக்கில் கிளி கட்ட உக்காருவேன். அதுக்கு முன்னாலேயே இலைகள், நார், பூ, மூங்கில் குச்சி எல்லாம்போய் சேகரிச்சுட்டு வந்து, தயாராக வச்சுக்கிட்டுத்தான் உக்காருவேன். நானேதான் போய் அதையெல்லாம் சேகரிச்சுட்டு வருவேன். பிளாஸ்டிக் போன்ற எந்த செயற்கைப் பொருளாகவும் இல்லாமல் ரசாயனம், கோந்து போன்று எதுவும் கலக்காமல் இலை, பூ , நார், மூங்கில் மட்டுமே கொண்டு செய்யப்படும் அற்புதம் அது! "இது ஒரு நுணுக்கமான வேலை. இதை 
 ஆண்கள்தான் செய்யணும். இதுவரை எந்தப் பெண்ணும் கிளி கட்டித்தந்ததா தகவல் இல்லை. எங்க விட்டுப் பெண்கள் விருப்பப்பட்டு கட்டி தரோம்'னு சொன்னாக்கூட நாங்க அனுமதிக்கிறதில்லை.



 ஆண்டாள் அம்மாவுக்காக தினசரி ஒரு புது கிளி செய்வோம். ஒரு கிளி கட்டுறதுக்கு அஞ்சு, ஆறு மணி நேரமாகும். வேறு யார் உதவியும் இல்லாம, நான் ஒருத்தந்தான் செய்வேன். கிளி செய்ய சில இலைகளும், பூக்களும், வாழைநாரும் மட்டும்தான் பயன்படுத்துவேன். முதலில், வாழையிலைச் சருகுகளை வச்சு, கிளி உருவம் வர்ற மாதிரி, நாரால சுத்தி கட்டிப்பேன். கிளி உருவத்துக்கு கொண்டு வந்ததும், மரவள்லிக்கிழங்குச் செடியின் இலைகளை, சருகைச் சுத்தி கட்டுவேன். அந்த இலை ரொம்ப மெல்லிசா இருக்கும். நல்லா பதிவாக வச்சுக் கட்ட வரும். கிளி உடல் நிறத்துக்குப் பொருத்தமாக தற்றுபமாக இருக்கும். கிளியோட உடல் முழுமை அடைஞ்சதும், கிளியின் மூக்கு மாதிரி வைப்பேன். செக்கச்செவேல்னு , அச்சு அசல் கிளிமூக்கு மாதிரியே இருக்கும். கண்ணுக்கு, 'காக்காப்பொன்'(மைக்கா) வைப்பேன். அதையும் கடைகள்ல வாங்கமாட்டேன். கிணறு வெட்டறபோது, வெளிய வர்ற கல்லு சில்லுகள்ல 'காக்காப்பொன்' கிடைக்கும். 

அதனால, கிணறு வெட்டும் இடங்க்ளுக்குப் போய், அதைத் தேடி எடுத்து சேகரித்து வெச்சுப்பேன். கிளியின் கண்ணுக்கு அதை வச்சு ஒட்டிவிட்டா, அப்படியே அச்சு அசல் கண் மாதிரியே இருக்கும். 

செயற்க்கைப்பொருளோ, கடையில் வாங்கிய பொருளோ எதுவுமே உபயோகிக்கிறதில்லை. தாயாருக்கு சாத்தறதாச்சே! அதனால, பசை, எச்சில்னு எதுவும் தொடக்கூடாது. லேசா தண்ணி தொட்டு ஒட்டிவிட்டாலே காக்காப்பொன் நல்லா ஒட்டிக்கும். பசை தேவையே இல்லை. அடுத்ததா, றெக்கை. அதுக்குப் பனை ஓலை, நந்தியாவட்டை இலை, செவ்வரலி இலைகளை வச்சுக் கட்டுவோம். வாலுக்கும் அந்த இலைகளும், பனை ஓலையும்தான். இப்போ, கிளியோட முக்கால்வாசி வேலை முடிஞ்சிடும். கடைசியா கால் கட்டணும். சின்னதா ரெண்டு மூங்கில் குச்சிகளை பென்சில் மாதிரி கூர்மையா சீவி, காலுக்கு வச்சுக் கட்டிடுவோம். அதைக் குத்தி வைக்கிறதுக்கு, பூச்செண்டு செய்யணும். அதுக்கு நந்தியாவட்டைப் பூ, செவ்வரளிப்பூ ரெண்டையும் வச்சு செண்டு தயார் பண்ணி, அதுல மூங்கில் கால்களோடு இருக்கும் கிளியைக் குத்தி நிறுத்திட்டோம்னா, தயாருக்கான அன்றைய கிளி ரெடி!" எனபக்திப் பரவசம் பொங்க சொல்கிறார் ராமர். 


இனி ராமர் தரும் • பச்சைக் கிளியை • தினசரி மாலை 6.30. மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையின் போது தாயார் ஆண்டாளின் இடது தோளில் சார்த்துவது வழக்கம். அந்தக் கிளி, இரவு அர்த்தசாமப் பூஜை வரை ஆண்டாளின் தோளில் வீற்றிருக்கும். அதற்குப் பிறகு ஆண்டாளுக்குச் சார்த்தப்பட்ட மாலை முதலானவற்றைக் களையும் 'படி களைதல்' எனும் நிகழ்வின்போது, கிளியும் அகற்றப்படும். முதல் நாள் மலையில் சார்த்தப்பட்டுக் களையப்பட்ட கிளி, மறுநாள் உபயதாரர் அல்லது கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு பிரசாதத்துடன் வைத்து கொடுக்கப்படுகிறது. 

ஆண்டாளின் தோளில் 3 மணி நேரம் இருப்பதால், மிகுந்த புனிதப் பொருளாகக் கருதப்படுகிறது இந்த கிளி. ஆண்டாள் தோளில் இருக்கும் கிளி மிகவும் சக்தி வாய்ந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆண்டாளிடம் வைக்கும் கோரிக்கைகளை கிளி மூலமாகத்தான் பெருமாளிடம் தாயார் சொல்வதாக ஐதீகம். 

ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் தோளில் செல்லமாக, உரிமையோடு தொற்றிக் கதை பேசும் அந்தக் கிளி, கல்லில் செதுக்கப்பட்டதோ, உலோகமோ அல்லது வேறு செயற்கை இழைப் பொருட்களால் ஆனதோ அல்ல. மேலும், எல்லா நாளும் இருப்பதும் ஒரே கிளியும் அல்ல; ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிளி ஆண்டாளின் தோளில் தொற்றிக்கொள்கிறது!

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...

தூக்கணாங்குருவி கூடு...

ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஸ்யங்களின் பெட்டகம்.. அவைதான் தூக்கணங் குருவிகள்,.. தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம். இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,.. தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்கும், உள்ளே இருக்கும் அந்த வடிவமைப்பையும், மிருதுவையும் பார்க்கும் போது நாம் கூட்டிற்குள் போய் தூங்கி கொள்ளலாமா என ஆசை வருவது தவிர்க்கமுடியாது. கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை...