*ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு
கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
*உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில்
போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து
வந்தால் போதும்.
*அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி
வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.
*பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு
சரியாகும்.
*சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம்
குறையும்.
*மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை
கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம்
கிடைக்கும்.
*துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி
மூளை பலம் பெறும்.
*மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி
சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.
*வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து
வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி
நீங்கும்.
*பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று
முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய்
துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.
*வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல
வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால்
வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.
*உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன்
சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.
*வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும்
காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச்
சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.
*அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர்
மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.
*அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி
மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு
ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்
கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
*உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில்
போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து
வந்தால் போதும்.
*அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி
வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.
*பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு
சரியாகும்.
*சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம்
குறையும்.
*மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை
கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம்
கிடைக்கும்.
*துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி
மூளை பலம் பெறும்.
*மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி
சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.
*வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து
வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி
நீங்கும்.
*பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று
முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய்
துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.
*வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல
வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால்
வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.
*உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன்
சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.
*வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும்
காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச்
சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.
*அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர்
மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.
*அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி
மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு
ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்
Comments
Post a Comment