Skip to main content

வாரந்தோறும் எண்ணெய்க் குளியல் அவசியமா? தேவையற்றதா?

வாரம் இருமுறை - புதன் - சனிக் கிழமைகளில் ஆடவர்களும், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பெண்டிரும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்ற நல்ல பழக்கம் நம்முன் தலைமுறை வரை ஒழுங்காக நடந்துவந்தது. தற்போது சூழ்நிலை, தொழில், ஆகிய காரணங்களைக் காட்டியும், வீண் செலவு என்ற ஆதாரமற்ற கருத்துக்கு ஆட்பட்டும் இந்த நல்ல பழக்கம் புறக்கணிப்பட்டுள்ளது. உடல் உழைப்பு மிகுதி, உணர்ச்சிக் கொந்தளிப்பு இவைகளால் உடல் தசைகளும் மனமும் இறுகி அயர்ச்சியாக இருக்கும். தூக்கத்துக்கப் பிறகும்ட உடல், மனக் களைப்பு நீங்காமல் மறு நாள் விழித்து எழும்போதும் தொடரும். இதைத் தவிர்க்க சிறந்த உபாயம் எண்ணெய் தேய்த்துக் குளித்தல்தான். இப்படிக் குளித்த அன்று மனத்திற்கும் உடலுக்கும் ஒய்வு கிடைக்கிறது. ஆகவே இதைத் தினமும் செய்ய ஆயுர் வேதம் வலியுறுத்துகின்றது.
உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொள்ள முடியாமல் போனாலும் குளிக்கும் முன் தலை, காது, கால் இம்மூன்று இடங்களிலும் எண்ணெய் தேயத்து விடுவது அவசியம். தலைக்கு எண்ணெய் தடவுவதால் தலையில் நீர் கோர்த்துக் கொள்ளாது. சளி, ஜலதோஷம், மண்டைக் கனம், வரட்சி, பொடுகு, மயிர்க்கால்களில் அழுக்கு தங்கல், அதிக உடற்சூடு இவை நீங்கி கண் தெளிவடையும். கேசம் நன்கு வளரும். நல்ல தூக்கம் வரும்.
எண்ணெயைக் காய்ச்சி ஆறவைத்து இளஞ்சூடான நிலையில் காதில் விட்டுக் கொள்ளலாம். பஞ்சில் எண்ணெயை நனைத்து அதிகமான எண்ணெயைப் பிழிந்து விட்டுக் காதில் செருகிக் கொள்வது அதிக நல்லது. குளித்தபிறகு பஞ்சு சுற்றிய குச்சியால் புண்படாதவாறு காதினுள் துடைத்து விடுவது அவசியம்.
குளிக்கும் முன் உள்ளங்கால் கால்விரலிடுக்குகள், நகங்கள், கணுக்கால் பூட்டு, குதிகால் சதை இவற்றில் எண்ணெய் தடவித் தேய்த்துவிடுவது அவசியம். உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும், தசைகளும் உள்ள இடம் இவை. உள்ளங்காலிலிருந்து இரு நரம்புகள் மூளைக்கும் அதிலுள்ள கண்களுக்கான நரம்பு மண்டலத்துடனும் தொடர்பு கொள்பவையாகச் செல்கின்றன. காலில் எண்ணெய் தடவித் தேய்க்க கண்கள் தெளியும்.

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...

தூக்கணாங்குருவி கூடு...

ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஸ்யங்களின் பெட்டகம்.. அவைதான் தூக்கணங் குருவிகள்,.. தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம். இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,.. தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்கும், உள்ளே இருக்கும் அந்த வடிவமைப்பையும், மிருதுவையும் பார்க்கும் போது நாம் கூட்டிற்குள் போய் தூங்கி கொள்ளலாமா என ஆசை வருவது தவிர்க்கமுடியாது. கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை...