Skip to main content

அலர்ஜி, தும்மல், சளிக்கு நல்ல நிவாரணம் தரக்கூடிய மருந்து என்ன? இவை உள்ளவர்கள் என்ன உணவு சாப்பிடலாம்? எவற்றைச் சாப்பிடக் கூடாது?

ஏலத்தையும் கிராம்பையும் வெற்றிலைச் சாறு விட்டு அரைத்து லேசாகச் சூடாக்கி நெற்றியில் பற்றுப் போடலாம். நீர்க்கோர்வை மிகவும் அதிகமாகித் தலைப் பாரம் மிகுந்திருந்தால் இந்தப் பற்றுப் பொருள்களுடன் புழுங்கலரிசி அல்லது அவலைச் சேர்த்து ஒன்றிரண்டு மிளகு கூட்டியும் பற்றுப் போடலாம்.
ராஸ்னாதி சூர்ணத்தை (ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும்) இஞ்சி அல்லது வெற்றிலைச் சாறுடன் குழைத்துச் சிறிது சூடாக நெற்றியில் பற்று இடலாம். வெறும் பொடியை உச்சந்தலையில் தேய்ப்பதும் நல்லது.
மிளகை ஊசியில் குத்தி அதை நெருப்பில் காட்ட வரும் புகையை மூக்கு வழியாக உறிஞ்சினாலும் தலைக்கனம் குறையும்.
தூங்கும்போது தலையணைக்குப் பதில் புழுங்கலரிசி, துவரம் பருப்பு இவைகளைத் துணிப்பையில் அடைத்து வைத்துக்கொண்டு படுப்பதினால் தலைப் பாரம் குறையும்.
கொம்பரக்கு, தும்பைப் பூ, மஞ்சள், மிளகு, காய்ந்த மிளகாய், ஓமம், வில்வ இலை, வெற்றிலை ஆகியவற்றை ஒன்றாகப் போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணெயை தலைக்குத் தேய்த்துக் கொள்வதும் வெந்நீரில் குளித்து உடன் தலையைத் துவட்டி சாம்பிராணியைத் தணலில் போட்டுப் புகைபிடிப்பதும் நல்லது.
தூதுவளையை, அன்றாடம் உணவில் சேர்க்கவும். தூதுவளை இலையைக் கூட்டு, பச்சடி, துவையல் போன்றவை செய்து சாப்பிடலாம். நெஞ்சு சளி, இருமல், நீர்க் கோர்வை உடல் வலி, புளியேப்பம் முதலியவற்றுக்குத் தூதுவளையை ஒரு பிடி ஆய்ந்து சிறிது பசு நெய்விட்டு வதக்கிச் சாப்பிடலாம். இம் மூலிகையின் முக்கிய குணம் இது. ஷயரோகம், இருமல், ஆஸ்த்துமா, நமைச்சல், மதமதப்பு, சீதளநாடி முதலியவைகளை நீக்கி நுரையிரல்களுக்கு நல்ல பாதுகாப்பும், பலமும் கொடுத்துத் தாதுவைப் பலப்படுத்தும்.
காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை கொண்ட உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். சீரக ரசம், மிளகு ரசம் சூடாக சாதத்துடன் கலந்து உண்ணலாம். மோரைச் சூடாக்கி, மஞ்சள் பொடி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து சாதத்தில் பிசைந்து சூடாகச் சாப்பிடவும். சுக்கு, மிளகு, திப்பிலியை சம அளவில் நன்கு பொடித்து அரை ஸ்பூன் பொடியில் ஒரு ஸ்பூன் தேன் குழைத்துப் படுக்கும்முன் சாப்பிடவும்.
இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையைக் குறைக்கவும். வெண்டை, பூசணி, பரங்கி, புடலை, வெள்ளரி, சுரைக்காய் ஆகிய காய்களைத் தவிர்க்கவும். குளிர்ச்சியான பழ ரசங்களையும் பானங்களையும் தவிர்க்கவும்.

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...

தூக்கணாங்குருவி கூடு...

ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஸ்யங்களின் பெட்டகம்.. அவைதான் தூக்கணங் குருவிகள்,.. தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம். இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,.. தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்கும், உள்ளே இருக்கும் அந்த வடிவமைப்பையும், மிருதுவையும் பார்க்கும் போது நாம் கூட்டிற்குள் போய் தூங்கி கொள்ளலாமா என ஆசை வருவது தவிர்க்கமுடியாது. கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை...