Skip to main content

Posts

Showing posts from September, 2016

ராஜவிருட்சம் - அரச மரமும் அதன் மருத்துவ குணங்களும்...

பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர்.  இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு.  அனைத்து மரங்களையும் விட அரசமரத்திற்கு தன் சிறப்பு அதிகம் ராஜவிருட்சம் : அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன அதனாலேயே அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. ‘மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்’ என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறான்.  புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் இந்தியாதான் என்பதற்கு சான்றுகள் உள்ளன. போதிமரம் : அரசமரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான். அரசுநீழலிருந்தோன் என சூடாமணி நிகண்டு கடவுட் பெயர் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டு ந...

பாட்டி வைத்தியம்

இங்கே நான் கொடுக்கும் குறிப்புகள் அனைத்தும் நான் பயன்படுத்தும் குறிப்புகள். இதுவரை உபயோகப்படுத்திய அனைவருக்கும் நல்ல பலன்களை தந்துள்ளது. இவை எல்லாம் வெளிநாட்டில் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அப்படி கிடைக்காதவர்கள் கிடைக்கும் பொருட்களை வைத்து தயாரித்து கொள்ளலாம். 1)எப்போதும் போல் சோப் போட்டு குளித்த பிறகு இந்த பொடியை முகம்,உடம்பில் தேய்த்து குளித்தால் பரு,கரும்புள்ளி,ஸ்ட்ரெட்ச் மார்க் எதுவும் வராது. இதற்கு தேவையானது: பன்னீர் ரோஜா - 200 (காய வைத்தது)- நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அல்லது பூக்கடையிலிருந்து வாங்கி வந்து காய வைத்து கொள்ளவும். Light Rose not Dark Rose. வசம்பு - 100 கிராம்- தழும்பு,கரும்புள்ளிக்கு உகந்த மருந்து கஸ்தூரி மஞ்சள் - 200 கிராம் புனுகுப்பட்டை - 50 கிராம் (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) கடலைப்பருப்பு -100 கிராம் பாசிப்பருப்பு - 100 கிராம் இவை அனைத்தையும் வெயிலில் 2-3 நாட்கள் காய வைத்து மாவு அரைத்துக் கொடுக்கும் இடத்தில் கொடுத்து சீயக்காய் அரைக்கும் மிஷினில் அரைத்துக் கொடுக்க சொல்லி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். எங்கள் வீட்டில் பிறந்த குழந்த...

இஞ்சி ஒரு காயகற்பம் - GINGER KAYA KALPHA

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க. ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி? ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும்.  தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும். அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் [img]தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும். அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்? 1. நுரையீரல் சுத்தமாகும். 2. சளியை ஒழுச்சு கட்டிடும். 3. வாயுத் தொல்லை என்பதே வராது. 4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும். 5....

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?

புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து  மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள். இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும். துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர். பலரை சென்றடைய தயவுசெய்து பகிருங்கள் உறவுகளே...

மன்னிக்க வேண்டும் நண்பர்களே....

எனது கைபேசி பழுது அடைந்து விட்டது அதனால்தான் பதிவுகள் போடவில்லை... அப்போதும் எனது கைப்பேசி சரியாகவில்லை... அதாலால் நண்பனின் மடிகணினி மூலம் தெரிவிக்கிறேன்.... மன்னிக்கவும் நண்பர்களே... இது நாள் வரையில் உங்கள் ஆதரவுகள் என்னை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது.... மேலும் இந்த ஆதரவை தர உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.... இனி தடை இல்லாமல் பதிவுகளை பதகனிவிடுகிறேன் நன்றி வணக்கம்.... ஸ்ரீ கிருஷ்ணாய நம!!! ஓம் அகத்தீசாய நம!!!

தூக்கணாங்குருவி கூடு...

ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஸ்யங்களின் பெட்டகம்.. அவைதான் தூக்கணங் குருவிகள்,.. தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம். இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,.. தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்கும், உள்ளே இருக்கும் அந்த வடிவமைப்பையும், மிருதுவையும் பார்க்கும் போது நாம் கூட்டிற்குள் போய் தூங்கி கொள்ளலாமா என ஆசை வருவது தவிர்க்கமுடியாது. கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை...

தொப்பையை குறைக்க இதை 10 நாட்கள் சாப்பிடுங்க!! Follow this trick to reduce your belly fat in 10 days!!!

 கண்டதையும் சாப்பிட்டு தொப்பையை வளர்த்தாச்சு.  ஆனால் எதை சாப்பிட்டா வளர்ந்த தொப்பை கரையும் என தேடி தேடி பல பரிசோதனைகள் செய்து பாத்திருப்பீங்க.  அப்படியும் தொப்பை குறையாமல் அடம் பிடிக்கிறதா? அதற்கு மிக எளிதான ஒரு ட்ரிக் உண்டு. அதாவது தொப்பையை குறைக்க அன்னாசி.  அன்னாசி இதயத்தை வலுப்படுத்தும் :  அன்னாசிப் பழம் சுவை யாருக்கும் பிடிக்கும். அன்னாசியில் பல நன்மைகள் உண்டு. அதிலுள்ள தாது பொருட்கள் உடலுக்கு மிகவும் நன்மைகளை தருகின்றன.  இதயத்திற்கு நல்லது. தொப்பையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் வெறும் 10 நாட்கள் தொடர்ந்து இங்கே சொல்லப்பட்டிருக்கும் முறைப்படி அன்னாசியை சாப்பிட்டால் கண்டிப்பாக குறைந்துவிடும்.  அன்னாசியில் உள்ள சத்துக்கள் :  பொட்டாசியம், கால்சியம் மாங்கனீஸ் போன்ற முக்கிய மினரல் உடல் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கின்றது.  அவை இதய நலனுக்கு இன்றியமையாத சத்துக்கள். இவை அன்னாசியில் அதிகம் உள்ளது. ஒரு நாளைக்கு நம் உடலுக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் அண்ணாசிப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும். ...

ஜல்லிகட்டும்!!! பீட்டாவின் சதிகளும் சூழ்ச்சிகளும்!!!

நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் பாலில் நிறைய கேல்ஷியம் இருக்கிறதென்று... நம் முன்னோர்கள் சொல்லி விட்டு போன எல்லாமே நமக்கு நல்ல வாழ்க்கை அமைய மற்றும் எதிர்காலம் சிறப்பாக அமைய உதவும்... ஆனால் நாம் அன்னிய கலாச்சாரத்தை சிறப்பாக எண்ணி அதன் பிடியில் சிக்கியுள்ளோம்.. நம் கலாச்சாரத்தை கீழாக நினைக்கிறோம்...  ஆனால் அது உண்மை அல்ல... நம் முன்னோர்கள் நாட்டு பசுக்கள் வளர்த்தனர்... நாட்டு பசுவின் பால் பல நோய்கள் வராமல் தடுக்கும் பல நோய்களுக்கு இயற்கை மருந்தாக அமையும்... ராபர்ட் க்லைவ், இந்திய வணிகத்தில் நுழைந்த ஆங்கிலேயன் நம் கலாச்சாரத்தை பார்த்து வியந்து அதை அழிக்க நினைத்தான்... அவன் வியந்த சிறப்பானவற்றில் முக்கிய இரண்டு, குருகுல கல்வி மற்றும் விவசாயம்.. நாம், மாட்டு சாணம், கோமியம் போன்ற இயற்கை உரங்களை உபயோகித்தோம் ஆனால் அன்னியர்கள் ரசாயன உரங்கள் எல்லாம் உபயோகித்தனர் அது உடம்புக்கு கேடு விளைவிக்கும்... நம் விவசாய சிறப்பை கெடுக்க வேண்டும் என்று 1910ஆம் ஆண்டு பசுவதைக்கூடம்  ஆரம்பித்தான்... விடுதலைக்கு முன் 350 பசுவதைக்கூடங்கள்(இன்று 3500 பசுவதைக்கூடங்கள்), 90% நாட...

காய்கறி வாங்குவது எப்படி? அற்புதமான தகவல்.

இன்றைய தலை முறையினருக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.  உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன். என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்? 1. வாழை தண்டு:   மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும்   உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். 2. வெள்ளை வெங்காயம்:  நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும். 3. முருங்கைக்காய்:  முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய். 4. சர்க்கரை வள்ளி கிழங்கு:  உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும். 5.மக்கா சோளம்:  இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம். 6.தக்காளி:   தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்). 7. கோவைக்காய்  :  முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசா...

MEDICAL FITNESS

PREVENTION IS BETTER THAN CURE MEDICAL FITNESS:- ------------------------        *CHOLESTEROL*            ------------------ Cholesterol ---   <  200 HDL  ---  40  ---  60 LDL  ---    <  100 VLDL --     <  30 Triglycerides --   <  150 ----------------------------          *CHOLESTEROL*          ------------------------------ Borderline --200 -- 239 High ----    >  240 V.High --    >  250 ----------------------------             *LDL*            ------ Borderline --130 ---159 High ---  160  ---  189 V.High --  > 190 ----------------------------            *TRIGLYCERIDES*            -----------------...

அந்த காலம் !!! அந்த காலம் தான்!!! இன்று யாருமில்லை இதுபோல தமிழக அரசியலில்...

காமராசர் குடிநீர் பஞ்சம் தீர்க்க வேலூர் சென்றார். ஆம்பூர் அருகே இருந்து தண்ணீர் கொண்டு வர முடிவு செய்தார். ''ஐய்யா, ஆம்பூர் பள்ளம் வேலூர் மேடு. தண்ணீர் வராது'' என்று பொறியாளர் சொன்னார். காமராசர் சொன்னார், பள்ளத்துல இருந்து தண்ணீர் வராதுன்னு சொல்றதுக்கா உன்னையே வச்சிருக்கேன். நீ ஒரு திட்டம் போட்டு என் வீட்டில் கொடுத்துட்டுதான் ஊரை விட்டு கிளம்பணும் அப்படின்னுட்டு அவர் சென்னை போய்ட்டார். நான்கு நாள் கழிச்சி ராத்திரி இரண்டு மணிக்கு அவர் வீட்டிலே திட்ட வரைவை கொடுத்துட்டு ஐயாவை எழுப்ப வேண்டாம். ஐயாவை காலைல வந்து பார்க்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு வீட்டுக்கு போய் நிம்மதியாய் தூங்கினார் பொறியாளர். மறுநாள் காலையில் எட்டு மணிக்கு எழுந்தார். வாசலில் அமர்ந்திருந்தார் காமராசர். பதறி போய் விட்டார் பொறியாளர். என் தூக்கத்தை நீ கொடுக்கல. அதே மாதிரி உன் தூக்கத்தை நானும் கெடுக்கல. என்றவர். அற்புதமான திட்டம், நன்றி பாராட்டுக்கள் என்றார். திட்டத்தை நிறைவேற்றினார். இன்றளவும் திட்டம் செயல்படுகிறது. அந்தப் பொறியாளர் வேறு யாருமல்ல. நமது அப்துல் கலாம் தான் அவர். - மேதைகளில் வ...