Skip to main content

Posts

Showing posts from 2017

பெரும்பாடு நீங்க

பெரும்பாடு என்று சொல்லக்கூடிய அதாவது தொடர்ந்து அதிகமாக ரத்தம் வெளியேறினால்  முருங்கைப் பட்டை, மருதம் பட்டை சம அளவு எடுத்து இடித்து கஷாயமாக காலை,மாலை அரை டம்ளர் கஷாயமாகக் கொடுக்கவும்.  ஒவ்வொரு மாதமும் அதிக ரத்தப்போக்கு இருக்குமானால்  அச் சமயத்தில் இக் கஷாயத்தை மூன்று நாட்கள் சாப்பிட நிரந்தரமாக இப்பிரச்சனை நிவர்த்தியாகும்.

மூட்டு வலி முழுமையான நிவாரணம் வேண்டுமா ?

மூட்டு வலி முழுமையான நிவாரணம் வேண்டுமா ?   இதை முயற்சி செய்து பாருங்கள்.   முடக்கற்றான் இலை ஒரு கைப்பிடி கொத்தமல்லி 50 கிராம் கருஞ்சீரகம் 30கிராம் சுக்கு 10கிராம் சித்தரத்தை 10கிராம் மிளகு 10 கிராம் கொடம்புளி இரண்டு துண்டுகள் பெருங்காயம் சிறிதளவு பூனைக்காலி விதை - பத்து எல்லாவற்றையும் நன்றாக தட்டி ஒரு பானையிலிட்டு 8 கோப்பை நீர்விட்டு  பாதியாக வற்றவைத்து காலை மாலை விதம்  ஒரு கோப்பை சாப்பிட்டுவர இழந்த சக்திகள திரும்ப பெற்று கை கால் அசதி,மூட்டுவலி,உடல் பலவினம்,பாலியல் பலவினம்,உடல்நடுக்கம் போன்றைவை  குணமாகி வலிமையும் இளமையும் உண்டாகும்.... இந்த பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

அதிக உதிரப்போக்கு குணமாக

*அத்திப்பட்டை* *நாவற்பட்டை* *நறுவிலி பட்டை* *கருவேலம் பட்டை* இவற்றை சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து கஷாயம் அல்லது தேனில் குழைத்து சாப்பிட அதிக உதிரப்போக்கு குணமாகும்.... தொடர்ந்து அருந்தி வர கருப்பை நன்கு வலு பெறும்... இந்த கஷாயம் துவர்ப்பு சுவை உடையது *தேவை என்றால் செய்து தரப்படும்...* உங்கள் நலனில் அக்கறையுடன் - *அகத்தியம்*

உதடுகளின் கருமை நிறத்தை சிகப்பாக மாற்ற

கேள்வி: உதடு கருமை நீங்க ஏதேனும் இயற்கை மருத்துவம் உள்ளதா (புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது)  அவர் வயது 25 பதில் : 1. ஆண்கள் ஒரு துண்டு பீட்ரூட்டை எடுத்து, அதனைக் கொண்டு உதடுகளில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், உதடுகளில் உள்ள கருமை மறைந்து, உதடுகள் இயற்கையான நிறத்தைப் பெறும் 2. கற்றாழை உள்ளே உள்ள ஜெல்லை உதடுகள் மீது தடவி மசாஜ் செய்து காலையில் வெந்நீரில் கழுவ வேண்டும் 3. சுத்தமான தேன் ( *பாட்டிலில் விற்கப்படும் சக்கரை பாகு அல்ல*) உதட்டில் தடவினால் கருமை மாறும் 4. சுத்தமான செக்கில் ஆட்டிய விளக்கெண்ணெயை இரவு உதடுகள் மீதும் தடவலாம்... *தேன் மற்றும் சுத்தமான விளக்கெண்ணெய் கிடைக்கும்* Www.chakraayudham.blogspot.com

மருக்கள் அல்லது பாலுண்ணிகள் குணமாக

1. அம்மான் பச்சரிசி செடியை உடைத்தால் பால் வரும் அதை மருவின் மீது தடவலாம்.... 2. புற்று மணலை வெந்நீரில் குழைத்து போடவும்... 3. சுண்ணாம்பு மற்றும் நவச்சாரம் கலந்து மரு மீது தடவினால் விழும் *இஞ்சி* தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும். *அன்னாசி* இது மருக்களைப் போக்க உதவும் மற்றொரு வழியாகும். அதற்கு அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை பரு உள்ள இடத்தில் தேய்த்து 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். *வெங்காய சாறு* வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்தாலும் மருக்கள் மறையும். அதிலும் இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். வேண்டுமானால் இந்த கலவையை இரவில் படுக்கும் போது தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கலாம். *எலுமிச்சை சாறு* எலுமிச்சை சாற்றினைக் கொண்டு மரு உள்ள இட...

உடல் சூடு குறைய

உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கிறதா?   சிலரது உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல தெரியும் தண்ணீர் தினமும் 3- 4 லிட்டர் குடிங்க. குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாம். சாதாரண நீரே போதும் சீரகத்தை நீரிலிட்டுகொதிக்க வைத்து, அந்த சீரக நீரைக், குடித்தால் உட‌ல் சூடு த‌ணியு‌ம். மருதாணி தேய்த்து குளிப்பதனால் நல்ல குளிர்ச்சி ஏற்பட்டு உடல் சூட்டை தணித்து குளு குளுன்னு வைக்கும் வெள்ளரியை அறுத்து கண்களில் வைங்க..நிறைய பழங்கள் சாப்பிடுங்க.. வாரத்திற்கு இரண்டு நாள் நல்லா நல்லெண்ணைய் தேய்த்து தலைக்கு குளிங்க. நிறைய மோர் குடிங்க. வெந்தயத்தை இரவே ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். தினமும் தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள். மாங்காய், மாம்பழம் சேர்க்க வேண்டாம். இளநீர் அதிகம் அருந்துங்கள். குளிர் பானங்கள் அருந்த வேண்டாம் வாரத்தில் ஒரு நாள் வெந்தயக்களி சாப்பிடலாம். நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம். ஒரு கைப்பிடியளவு முருங்கைப் பூக்களை 2 தேக்கரண்டி அளவு பசு நெய் விட்டு வதக்கி, அதோடு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்ற...

ஒரு தோசையில் இவ்வளவு தத்துவமா*

அன்றாட உண்ணும் தோசையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மிகமும், ஜோதிடமும்... தோசை செய்ய உபயோகிக்கும் பொருட்களுள் நவ கிரகங்கள் அடக்கம். *அக்னி  = சூரியன்* *அரிசி    = சந்திரன்* *உளுந்து = ராகு-கேது* *வெந்தயம்  = புதன்* *தோசை கல் (இரும்பு) = சனி* *தோசையின் நிறம்  = செவ்வாய்* அதை உண்பவர்கள் *குரு (ஆண்)* *சுக்கிரன் (பெண்)* இதன் உருவம் (Galaxy) பிரபஞ்சமே தோசையை Clockwise சுட்டால் தான் வரும், பிரபஞ்சம் சுற்றுவதும் அப்படித்தானே. இந்த தோசையை ஒரு ஜோதிட பரிகாரமாக இருந்திருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் விஷேச நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படையலாக படைத்தது பின் உண்டு வந்தார்கள். ஏன் இன்றும் பெருமாளுக்கு தோசையை படையலாக படைத்து பிரசாதமாக கோவிலில் வழங்குகிறார். அப்போது இருந்த நம் முன்னோர்களுக்கு தோசை பலகார வகையாகத்தான் இருந்தது. பின் நாளில் மக்களுக்கு வசதி வந்த பிறகு அன்றாட உணவு வகையாக மாறி விட்டது. தோசை இந்தச் சொல் எப்படி வந்தது என்பதற்கு மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், (கல்லில்) தோய்த்துச் செய்வது என்னும் பொருளில் *தோய் + செய் என்னும் சொற்கள் இணைந்து உருவான இச்சொல்,* மக்க...

தமிழர்கள் அறிவு தான் கெத்து...

தலையாட்டி பொம்மையும்..!! தஞ்சை பெரியகோவிலும்..!! தலையாட்டி பொம்மைக்கும் தஞ்சை பெரியகோவிலுக்கும், தஞ்சாவூர்ல அந்த பொம்மை தயாரிக்கப்படுதுங்குறத விட வேற என்ன தொடர்பு ?? இருக்கு... இந்த சாதாரண தலையாட்டி பொம்மைக்குள்ள ஒரு தத்துவத்தையே ஒளிச்சு வச்சிருக்காங்க ! களிமண்ணை வைத்து செய்யப்படும் இந்த தஞ்சாவூர் பொம்மைகள் மிகவும் பாரம்பரியமானவை ! கொட்டங்கச்சி  எனப்படும் தேங்காயின் பாதி சிரட்டையின் மேல் களிமண்ணால் செய்யப்பட்ட ராஜா ராணியின் உருவ பொம்மைகளை வைத்து செய்யப்படுகிறது அந்த பொம்மையோட அடிப்பகுதி கொட்டாங்கச்சியால் செய்யப்பட்டு களிமண்ணால் நிரப்பியிருப்பார்கள் அப்படி செய்யப்பட்டுள்ள பொம்மையை தரையில் வைத்து எந்த பக்கம் சாய்த்தாலும் அது திரும்பவும் ஆடி ஆடி கடைசியாக நேராகிவிடும். ! இதுக்கும் பெரிய கோவிலுக்கும் என்ன சம்மந்தம் தெரியுமா.! நம்ம பெரிய கோவிலில் சமீபத்தில் தண்ணீர் பற்றாக்குறைக்காக போர் போடுவதற்க்க்காக ஆழ்துளை கிணறு தோண்டிருக்காங்க...!  தோண்ட தோண்ட களிமண்ணோ, செம்மண்னோ வரவில்லை ஒருவகையான மணல் வந்திருக்கிறது. அந்த மணல் காட்டாறுகளில் காணப்பட கூடிய மணல். சாதரண ஆற்று மணலுக்கும் அந்த மணல...

உடலில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்றும் - வாழை இலை குளியல்

*உடலுக்கு புத்துணர்வையும் புதுப்பொலிவையும் தரும் வாழை இலை குளியல் !!* வாழைமரம் மட்டுமே கரியமிலா வாயுவை உட்கொண்டு சுத்தமான பிராணவாயுவை மட்டுமே வெளிவிடுகிறது. மற்ற தாவரங்களிலிருந்து பெறப்படும் ஆக்ஸிஜனில் இருப்பதை விட பலமடங்கு பிராணசக்தி வாழையிலையில் நிறைந்துள்ளது. அதனால்தான் உடலில் பல்வேறு வழிகளில் தேங்கியுள்ள கரியமிலா வாய்வை வெளியேற்றி உடலில் உள்ள கெட்ட காற்றையும் நீரையும் வெளியேற்ற வாழையிலை குளியல் ஒரு உபாயமாக இருக்கிறது. *வாழை இலை குளியலின் பலன்கள் :* 1. உடலில் தேவையற்ற எடையை குறைக்கும். 2. உடல் வீக்கம், கை, கால்வீக்கத்தைப்போக்கும். 3. சிறுநீரக செயலிழப்பை தடுக்கும். 4.அலர்ஜி, மற்றும் தோல்வியாதிகள் குணமாகும். 5.வியர்வை சுரபிகளில் ஏற்பட்டுள்ள தடையை போக்கும். 6.உடலில் பல்வேறு உறுப்புகளில் தேங்கியுள்ள கெட்ட காற்றை வெளியேற்றும். 7. உடலுக்கு புத்துணர்வையும், புதுப்பொலிவையும் தரும். 8. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும். 9.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்பட்டுள்ள மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும். 10. அழகான தோற்றத்தை தரும். *வாழை இலை குளியல் செய்வது எப்படி ?* 1.வாழை குளியலுக்கு முதல் நாள் நிறைய நீர்...

வெண்புள்ளிக்கு தீர்வு

வெண்புள்ளிக்கு சித்த மருத்துவம்!!! நம் உடலைப் போர்த்தியிருக்கும் சருமத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயல்பான நிறம் மாறி, வெள்ளை நிறம் தோன்றுவதை வெண்புள்ளி என்கிறோம். இது மெலனின் என்ற நிறமிக் குறைபாட்டால் ஏற்படுகிறது. வெவ்வேறு அளவுகள், வடிவங்களில் இருக்கும். இந்தப் புள்ளிகள் முதலில் ஓர் இடத்தில் தோன்றி, உடல் முழுவதும் பரவும்.  நிச்சயமாக, இது தொற்று நோய் அல்ல. காரணங்கள் : உணவில் புரதம் மற்றும் வைட்டமின் குறைபாடு வயிற்றில் உள்ள கிருமிகள் நாட்பட்ட வயிற்றுக் கோளாறுகள் ஹார்மோன் பாதிப்பு மன அழுத்தம் நோய்வாய்ப்பட்ட நிலை அமீபியாசிஸ் சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்: கார்போக அரிசியைப் பொடித்து, கால் ஸ்பூன் எடுத்து உண்ணலாம். காட்டுச் சீரகப் பொடி, மிளகுத் தூள் சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிடலாம். நுணா இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் சாப்பிடலாம். அரை ஸ்பூன் கடுக்காய்ப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம். அதிமதுரப் பொடி, மிளகுப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம். வல்லாரை இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு காலையில் உண்ணலாம். அரை ஸ்பூன் செங்கொ...

ஹீமோகிளோபின் அதிகரிக்க - ரத்தம் ஊற

ரத்தம் அதிகரிக்க - To increase Hemoglobin Count அத்திப்பழம் 250கி கருப்பு பேரீச்சம்பழம் 250கி தேன் 500கி அத்தியையும் பேரீச்சையையும் ஓன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்... அதில் அரைக் கிலோ தேனை ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்... இந்த கலவையை காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் ரத்தம் அதிகரிக்கும்.... 2. நாட்டு கொத்தமல்லியை நாட்டு பசு நெயில் வதக்கி சுடு சோற்றில் பிசைந்து சாப்பிடவும் 3. அன்னபேதி செந்தூரம் அல்லது பாவனக் கடுக்காய் மாத்திரை உணவிற்கு பின் சாப்பிட்டாலும் ரத்தம் ஊறும்.... தேவைப்பட்டால் தொடர்புக்கு: 9841168598

தமிழனின் அறிவுத்திறன் கண்டு உலகமே வியக்கும்!!!

மழை பற்றிய சகுனங்கள்...!!! *******************************************************   மலைக்க வைக்கும்  நம் முன்னோர்களின் சாதனை!!! கீழ்கண்ட சகுனங்கள் தோன்றினால் மழை வரும். 1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை 2. தட்டான் தாழப் பறந்தால் மழை 3. அந்தி ஈசல் அடை மழை 4. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால்     மழை. 5. தவளை கத்தினால் மழை 6. மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை 7. கொக்கு மேடேறினால் மழை 8. பகற்பொழுதில் சேவல் கூவி வானத்தைப்     பார்த்தால் மழை 9. கழுதை காதை உயர்த்தினால் மழை 10. ஈசல் பறந்தால் மழை 11. புற்றிலே ஈசல் பறந்தாலும், மண்ணிலே கரையான் கூடினாலும் மழை 12. பாம்புகள் மரத்தில் ஏறினாலோ அல்லது        திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டாலோ மழை 13. பசு மாடுகள் கன்றைத் தேடி வீட்டிற்கு ஓடினால் மழை. 14. பூனைகள் நிலத்தை பிராண்டினால் மழை 15. குழந்தைகள் அணைக்கட்டி விளையாடினால் மழை 16. மலைகள் நீல நிறமாக காட்சியளித்தால் மழை 17. குகைகள் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தால் மழை 18. ஓணான்கள் வானத்தைப் பார்த்தால், மரத்தில் ஏறி வி...

ரசாயனம் தவிர்....

ரசாயனம் தவிர் ஷாம்பு   ஒரு காலத்தில் பணக்காரரின் அழகுச் சாதனம். ஒரு ரூபாய் பாக்கெட்டில் விற்கப்படத் தொடங்கியதும் ஷாம்புவின் பயன்பாடு இப்போது தினசரி பல லட்சம் லிட்டர்கள். `அடிக்கடி ஷாம்பு போடாதேன்னா, அப்போ தலைக்கு என்ன போடுறது?' எனக் கேட்கும் அளவுக்கு ஷாம்பு பல வீடுகளில் தினசரி சங்கதியாகிவிட்டது. `நல்லா புசுபுசுனு நுரைக்கிற மாதிரி நம் ஊர் சங்கதி வேற எதுவும் இல்லையா?' என்போருக்கு ஒரு செய்தி. பூவந்திக்கொட்டை - சோப்புக்காய் என வெகுஜன மொழியில் பேசப்படும் மூலிகைக்கொட்டை. நகைகளைக் கழுவ இதைப் பயன்படுத்தும் பழக்கம் உண்டு. சீகைக்காய், பாசிப்பயறுடன் இந்தக் கொட்டையைச் சேர்த்து அரைத்துவைத்துக்கொண்டு ஷாம்புக்குப் பதில் பயன்படுத்தலாம். கொஞ்சமாக நுரைக்கும் இந்த மூலிகை, அழுக்கை நீககி முடியை பலமாக்கும். கண்டிஷனர் என சந்தையில் கிடைக்கும் அத்தனையும் எண்ணெயோடு சேர்த்து பல ரசாயனங்களின் கலவையே. தலைக்கு அடிக்கடி தினசரி தேங்காய் எண்ணெய் தேய்த்தாலே போதும், கண்டிஷனர் அவசியம் இல்லை. வாரம் ஒருமுறை மட்டும் எண்ணெய்க் குளியலுக்கு என நல்லெண்ணெய் தேய்க்கலாம். ரசாயனம் இல்லா முகப்பேணலுக்கு இன்னும் வழி உண்டு....

குழந்தைகளுக்கு சளி, கபம், இருமல், தீர எளிய சித்த மருத்துவம்

குழந்தைகளுக்கு சளி, கபம், இருமல், தீர எளிய சித்த மருத்துவம் எனக்கு இரண்டு குழந்தைகள் . அவர்கள் இருவருக்கும்  அடிக்கடி சளி மற்றும் இருமல் வருகிறது . வயது 4 & 2. இங்கிலீஷ் மருந்து என் 2 , வயது பெண்ணுக்கு கேக்கவில்லை. நாங்கள் துளசி & கற்பூரவள்ளி இரண்டும் சேர்த்து கொடுத்தால் சளி போகிறது . இதை அடிக்கடி கொடுக்கலாமா . இல்லை வேற எதாவது இருந்தால் கூறவும். மேற்கண்ட கேள்விக்கான விளக்கம் : பொதுவாக சளி ,கபம் என்பது உடலில் மூன்று நிலைகளில் நோய் களாக தாக்குகின்றது . 1 - மூக்கு மற்றும் நெற்றி பகுதிகள் 2 - தொண்டை பகுதிகள் 3 - நுரையீரல் பகுதிகள் முதலில் மூக்கு மற்றும் வாய் பகுதிகளில் தான் வைரஸ் கிருமிகள் தாக்கும். பின்பு பரவி சில நாட்களில் நெஞ்சு மற்றும் நுரையீரல் பகுதி களில் பரவி விடும். சித்த மருத்துவ முறையினில் மேற்கண்ட மூன்று நிலைகளிலும் உள்ள சளி ,கபம் நோய்களுக்கு தனித்தனியாக மருந்துகள் உள்ளன. மூக்கு பகுதிகளின் சளியினைப் போக்க சிறு குழந்தைகளுக்கு துளசி , மற்றும் கற்பூர வள்ளி இலைச் சாறுகள் ஒரு சங்கு அளவு எடுத்து முறித்து தேன் சேர்த்து காலை,மாலை என இரண்டு வேளை கொடுக் கலாம். ...

வறட்டு இருமலை வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டு விரட்டலாம்.

வறட்டு இருமல் என்றால் என்ன? வறட்டு இருமல் என்பது ஒரு வைரஸ் தொற்று. இது அதிகமாக குழந்தைகளை பாதிக்கிறது. இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சற்று அதிக சத்தத்துடன் இருமுவார்கள். இருமும் பொழுது தொண்டையில் எரிச்சல் அதிகமாக ஏற்படும். குறிப்பாக படுத்தவுடன் இருமல் அதிகமாக ஏற்படும். தொண்டை கட்டினாற்போல் பேசுவார்கள். வறட்டு இருமல் வரக்காரணம்??? வறட்டு இருமல் வர முக்கியமான காரணமாக கருதப்படுவது தூசு மற்றும் புகை. புகை பிடிப்பவகளை மட்டுமின்றி அவர்கள் அருகில் இருப்பவர்களையும் இது பாதிக்கிறது. அசுத்தமான தண்ணீரினால் கூட இந்த நோய் ஏற்படலாம். வறட்டு இருமலின் பெயருக்கு ஏற்றார் போல் இந்த வறட்டு இருமல் சளி இல்லாமல் நம்மை தாக்கும். இதன் மற்றொரு காரணமாக ஒவ்வாமை கூறப்படுகிறது. சிலருக்கு விலங்குகளின் முடியினாலும் வறட்டு இருமல் ஏற்படலாம். சினிமா தியேட்டரில் விற்கும் நாள்பட்ட ஐஸ்கிரீம் சாப்பிட்டாலும் வறட்டு இருமல் வரும். வறட்டு இருமலை வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டு விரட்டலாம். வறட்டு இருமலுக்கு கொள்ளுப்பொடி,மிளகு, சுக்கு, பூண்டு  கசாயம் மருந்து கொள்ளுப்பயிறு 50கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து கொண்டு...

மூக்கடைப்பு குணமாக

ஒருவருக்கு சளி ஏற்படும் போது கூடவே மூக்கடைப்பும் தொற்றிக் கொள்கிறது. மூக்கடைப்பு ஏற்படும் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அது எரிச்சலை உண்டாகும். சளியிலிருந்து விடுபட்டால் மூக்கடைப்பு தானாக சரியாகிவிடும். மூக்கடைப்பிற்கு வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே நிவாரணம் பெறலாம். மூக்கடைப்பு குணமாக வேப்ப இலை, தேன் மருந்து வேப்ப இலையை மையாக அரைத்துக் கொண்டு அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு சிறு உருண்டை உண்டு வர வேண்டும். இதனை உண்ட பின்பு ஒரு மணி நேரத்திற்கு வேறு எந்த உணவையும் எடுத்துக் கொள்ள கூடாது. வேப்ப இலை செரிக்க ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இதனை வாழ் நாள் முழுதும் பின்பற்றலாம். இதனால் மூக்கடைபை உண்டாகும் அலர்ஜி மட்டுமல்லாமல் எல்லா விதமான அலர்ஜியும் சரியாகி விடும். வயிற்றில் உள்ள கிருமிகளையும் நீக்கும். மூக்கடைப்பு நீங்க மிளகு, தேன் மருந்து 10 அல்லது 12 மிளகாய் இரவில் இரண்டு ஸ்பூன் தேனில் ஊற வைக்க வேண்டும். காலையில் அதை சாப்பிட வேண்டும். மிளகை நன்கு மென்று சாப்பிடுவது நலம். இதன் மூலம் மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் பெறலாம்.   மூக்கடைப்பு குணமாக இஞ...
தைராய்டு குணமாக முள் முருங்கை பத்து இலைகளை எடுத்து இலைகளின் பின்னே உள்ள நரம்புகளை நீக்கிவிடவும்.... 50மி.லி தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து சாறு எடுக்க வேண்டும்... இந்த சாறை காலையில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வந்தால் போதும் தைராய்டு குறையும்....

மாதவிடாய் வலியை போக்க எளிய வழிகள்

மாதவிடாய்  வலியை போக்க 1. வெந்தயத்தை முதல் நாள் ஊற வைத்து மறு நாள் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் மாதவிடாயின் போது இறுக்கமான தசைகள் தளர்வாகி வலி குறையும்... 2. இஞ்சி  கருமிளகு தேநீர் சிறிது அளவு தண்ணீர் கொதிக்க வைத்து அதனுடன் இஞ்சி  தட்டிபோட்டு மிளகு பொடியை போட்டு கொதிக்க வைத்து  வெறும் வயிற்றில் குடித்தால் வலி குறையும்.. 3. நல்லெண்ணெயை சூடுபடுத்தி மிதமான சூட்டில் அடிவயிற்றில் மசாஜ் போல தேய்த்தால் கர்ப்பபை சுற்றி இருக்கும் சூடு குறைந்து குளிர்ச்சியைத்தரும்.. 4. சீரகம் 20நிமிடம் கொதிக்க வைத்து அதையும் அருந்தாலாம்... 5.சீமைசாமந்தி தேநீர் அருந்தலாம்

காய்ச்சல் குணமாக

காய்ச்சலுக்கு நம் வீட்டிலேயே உள்ள பொருட்களைக் கொண்டு இயற்கை மருந்துகள் செய்து கொடுக்கலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும். காய்ச்சல் குணமாக மிளகு மருந்து காய்ச்சல் குணமாக மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதை வாணலியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு நன்கு வறுபட்டு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் இறக்கி மத்தை வைத்து முடிந்த அளவு கடைந்து மீண்டும் அடுப்பில் வைத்து அதில் இரண்டு டம்ளர் குடிநீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வற்றி பாதியானது இறக்கி விடலாம். இந்த மிளகு கஷாய நீரை ஆற வைத்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கால் டம்ளர் குடித்தால் காய்ச்சல் குணமாகும். ஒவ்வொரு முறை குடிக்கும் முன் லேசாக சுட வைத்து இளஞ்சூட்டில் குடித்தல் நல்லது. இந்த மருத்துவத்தை மொத்தமாக செய்து வைத்துக் குடிக்காமல் தினம் தினம் புதிதாக தயார் செய்து குடித்து வந்தால் நலம். இரண்டே நாட்களில் காய்ச்சல் குணமாகும். மிளகின் காரம் அதிகம் இருந்தால் அதில் சிறிது சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். காய்ச்சல் குணமாக சீரகம், மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை மருந்து காய்ச்சல் குணமாக சீரகம் அரைத் தேக்கரண்டி, மி...

எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடலாம்

உணவு நாம் தினமும் சாப்பிடுவது இயல்பான ஒன்று. நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவும் சாப்பிடுகிறோம். ஆனால் எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது? இப்படி ஒரு சுவாரசியமான விசியத்தை படித்தேன். உண்மையிலே  அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று. 1. ஞாயிறு ---  சூரியன் கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம், சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா, மாதுளை ஜூஸ்,   கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார். சிம்ம ராசியினருக்கு  நலம் உண்டாகும். 2. திங்கள் --- சந்திரன் பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி, பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல், தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம். கடக  ராசியினருக்கு  நலம் உண்டாகும். 3. செவ்வாய் --- செவ்வாய் துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை, பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம்,,தர்பூசணி ஜூஸ்,, தேன் கலந்த செவ்வாழை ,ஆப்பிள்,ஆரஞ்சு பழக்கலவை. மேஷ, விருச்சிக   ராசியினருக்கு  நலம் உண்டாகும். 4. புதன் ---  புதன் கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம், பாவக்காய் கொத்சு,  முருங்கைக் காய் சூப், பாசிப்பயறு ...

நாம் துளசி செடியை ஏன் சுற்றி வருகிறோம்????

நாம் இந்தியாவில் பாரம்பரியமாக செய்து வரும் சில தெய்வ சடங்குகள் அதிக நன்மைகளை தருவதாக இருக்கின்றன. இவை நமது ஒழுக்கத்தை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கின்றன. இதில் நாம் காலம் காலமாக துளசி செடியை சுற்றி வந்து வணங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அதற்கு என்ன காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?    இந்த பகுதியில் நாம் துளசி செடியை ஏன் சுற்றி வருகிறோம் என்பதற்கான காரணங்களையும், அதன் பின் உள்ள அறிவியல் உண்மைகளையும் பற்றி தெரிந்து கொள்வோம். மருத்துவ குணம் : செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோவில் பூசைகளில்அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் பெருமாள் கோயில்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசி செடி பலரது வீடுகளில் துளசி செடி வளர்க்கப்படுகிறது. துளசி செடிக்கு விளக்கேற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யும் வழக்கம் உள்ளது. வீடுகள் மற்றும் கோவில்களின் முற்றங்களில் துளசி செடி வளர்க்கப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா என கேட...

பத்து மிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும் பயமின்றி உண்ணலாம்....

மிளகு. ஒரு மிளகை சேர்த்தால் போதும். உண்ணும் உணவு சுவையாகிப்போகும். இரண்டு மிளகோடு இரண்டொரு ஆடாதோடை இலையைச் சேர்த்தால் போதும். இருமல் சளி இருக்கும் இடம் தெரியாமல் போகும். மூன்று மிளகோடு வெங்காயம் சேர்த்தால் முசு முசு வென முடியும் முளைக்குமே. நான்கு மிளகோடு சுக்கு சேர்த்தால் நெஞ்சுவலி கொஞ்சமும் இல்லாமல் போகும். ஐந்து மிளகோடு சுக்கும் திப்பிலியும் சேர்ந்தால் நாள்பட்ட கோளையும் அகன்றிடுமே. ஆறு மிளகோடு பெருஞ்சீரகம் சேர்த்தால் ஆறிடும் பலநாள் மூலமும்.  ஏழு மிளகைத் தூள் செய்து உண்டால் தொண்டைப்புண்ணும் ஆறிடுமே. பசிக்காத வயிறும் பசிக்கும். எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்தால் எடுக்கும் வாந்தியும் உடனே நிற்கும். ஒன்பது மிளகோடு துளசி சேர்ந்தால் ஒவ்வாமை உடனே அகன்றிடுமே. பத்து மிளகு சேர்த்த உணவை பகைவன் வீட்டிலும் பயமின்றி உண்ணலாம்.

மண்ணுளி பாம்பு நமது நண்பன்....

மண்ணுளி பாம்பு நம்மை நாக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப் பட்டது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால் தான் நமது மக்கள் அந்த பாம்பினை தொட மாட்டார்கள் என்பதற்காக நமது முன்னோர்கள் காரணத்துடன் சொல்லி வைத்த பொய் அதுவாகும். SAND BOA என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நிலங்களில் மட்டுமே வாழும் சூழ்நிலை உள்ளன.  இவை பாம்பு இனமா என்று பார்த்தால், அது பாம்பே அல்ல, அது மண்புழு குடும்பத்தை சேர்ந்த ஒரு பெரிய அளவிலான புழு மட்டுமே. மண்ணில் வாழும் இது பாம்பு அல்ல என்கிறது அறிவியல். எனவே இனிமேல் மண்ணுளி புழு என்றழைப்போம். இந்த மண்ணுளி மிகுந்த கூச்ச சுபாவம் மற்றும் பயந்த சுபாவம் கொண்டதாகும். இந்த பாம்பினால் மரணம் நிகழ்த்தாக இதுவரை எந்த பதிவும் இல்லை. திடீரென இந்த பாம்புகளை லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது? இந்தக் கேள்விக்கான பதில் எங்கும் கிடைக்காது.  ஏனெனில் இதற்கான உண்மையான பதில் திட்டமிட்டு மறைக்கப் படுகிறது என்பது தான் உண்மை....

துளசி ரசம் - Basil leaves Rasam

* துளசி ரசம்* * தேவையான பொருட்கள் :* துளசி இலை - ஒரு கப், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம், துவரம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. * செய்முறை :* முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம்பருப்பை ஊற வைக்கவும். துளசியை தனியாக அரைத்து கொள்ளவும். புளியை நன்றாக கரைத்து உப்பு, பெருங்காயத்தூள் போட்டு கொதிக்கவிடவும். ஊற வைத்த பொருட்களை மிக்சியில் போட்டு கொதிக்கும் கரைசலில் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் அரைத்த துளசியை சேர்த்து, நுரைத்ததும் இறக்கவும்... கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சூப்பரான துளசி ரசம் தயார் * மருத்துவ குணம்* சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு துளசி ரசம் அருமையான மருந்தாகும்.

குடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்!!!

தொடர்ந்து மது அருந்தும் பழக்கத்தால் கல்லீரலின் மெல்லிய செல்கள் அழிய ஆரம்பிக்கின்றன. கல்லீரலில் அழற்சி தோன்ற ஆரம்பிக்கிறது ஆனாலும் அதன் அறிகுறிகள் உடனே தொிவதில்லை, மதுவை தண்ணீரையோ அல்லது சோடாவையோ ஊற்றி அதை “டைலூய்ட்”  செய்யாமல் ஒரே மூச்சில் குடிப்பதால் கல்லீரல் அழற்சி வேகமாகிறது. இதனால் கல்லீரலின் திறன் குறைகிறது உடன் சிறுநீரக பாதிப்பும் ஏற்படுகிறது. மெல்ல மெல்ல இரத்தத்தில் மதுவின் ஆதிக்கம் அதிகமாகிறது, ஆல்கஹால் லெவல் அதிகமானால் இரத்தம் தன் வேலையை ஒழுங்காய் செய்யாது.                  கல்லீரலின் மேல் பாகத்தில் உள்ள நுண்ணிய செல்கள் வயிற்றுக்குள் வரும் விஷங்களை தடுத்து அழிக்க வல்லது, மது இந்த நுண்ணிய தடுப்புச்சுவரை மெதுவாக கரைத்துவிடுவதால் கல்லீரல் திசுக்களை பல்வேறு விஷப்பொருள்கள் நேரடியாகத் தாக்க ஆரம்பிக்கின்றன. மதுப்பழக்கமுடையவா்கள் சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட முடியாது, அதனால் மஞ்சள் காமாலை, கல்லீரல் பெருக்க நோய், வயிற்று வலி, பசியின்மை, உடல் எடை குறைதல்,ஆண்மை குறைவு முதலிய நோய்கள் தாக்க ஆரம்பிக்கின்றன...

அக்கி நோய்

*அக்கி நோய் குணமாக சித்த மருத்துவம்!* வெயில் காலங்களில் தாக்கும் நோய்களில் ஒன்றுதான் அக்கி நோய் ஆகும்.இதுவும் அம்மை நோயினைப் போன்று வைரஸ் கிருமிகளால் வருவதுதான். ஆனால் அக்கிநோய் என்பது புதிதாக வருவதல்ல அம்மை நோய் முன்பு தாக்கியவர்களிடம்தான் இந்நோய் வருகின்றது. அம்மை நோய் வந்து போன பிறகு இந்த வைரஸ் கிருமிகள் முழுமையாக நீங்கி விடுவதில்லை. சில அம்மை வைரஸ் கிருமிகள் உடலில் தங்கி விடும். இவை பல வருடங்க ளுக்குப் பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது வெளி வந்து அக்கி நோய் ஆக தோன்றும். இந்த நோய்க்கு கிராமங்களில் மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் செல்வார்கள். அவர்கள் காவி மண்ணினால் அக்கி நோய் கண்டவரின் காளி அம்மன் போன்று உருவம் உடலில் வரைந்து மந்திரம் செபித்து அனுப்பி விடுவார்கள். வலியும்,வேதனையும் நீங்கி குணமடைவர். அக்கி நோய்க்கு சித்த மருத்துவ முறையில் அனுபவ முறை தீர்வுகள். மருந்து - 1 நாட்டு மருந்து கடைகளில் பூங்காவி எனக் கேட்டால் கொடுப்பார்கள். அதனுடன் பன்னீர் வாங்கி வந்து பூங்காவி பொடியை துணியில் வைத்து சளித்து எடுத்து பன்னீர் சேர்த்து குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூசவும். எரிச...

நோய்கள் எதனால்????

*நோய்கள் உருவாகும் இடங்கள் !* -------------------------------------------- *நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, ஈயோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.* *இதோ* *1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்* *2 - டீ* *3 - காபி* *4 - வெள்ளை சர்க்கரை* *5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.* *6 - பாக்கெட் பால்.* *7 - பாக்கெட் தயிர்* *8 - பாட்டில் நெய்* *9 - சீமை மாட்டு பால்* *10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.* *11 - பொடி உப்பு* *12 - ஐயோடின் உப்பு* *13 - அனைத்து ரீப்பயின்டு ஆயில்* *14 - பிராய்லர் கோழி* *15 - பிராய்லர் கோழி முட்டை* *16 - பட்டை தீட்டிய அரிசி* *17 - குக்கர் சோறு* *18 - பில்டர் தண்ணீர்* *19 - கொதிக்க வைத்த தண்ணீர்* *20 - மினரல் வாட்டர்* *21 - RO தண்ணீர்* *22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்* *23 - Non Stick பாத்திரங்கள்* *24 - மைக்ரோ ஓவன் அடுப்பு* *25 - மின் அடுப்பு* *26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்* *27 - சோப்பு* *28 - ஷாம்பு* *29 - பற்பசை* *30 - Foam படுக்கை மற்றும் இருக்கை* *31 - குளிர்பானங்கள்* *32 - ஜஸ் கீரீம்கள்* *33 - அனைத்து மைதா பொருட்கள்* *34 - பேக்கரி பொருட்கள்* *...

வீட்டில் இருக்கும் பொருட்களும் அதன் மருத்துவ பயன்களும்

பட்டை :  செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது. இதில் உள்ள சின்னமிக் அமிலம் உணவை பதப்படுத்த உதவுகிறது. ஜாதிக்காய் :  பல்வலி, தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, ஆண்மையின்மை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. ரத்த ஓட்டம், ஒருமனப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. கிராம்பு :  நுரையீரல் தொடர்பான நோய், காயங்களினால் திசுக்களில் ஏற்படும் வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. குடலில் உள்ள ஒட்டுண்ணி, பூஞ்சை, பாக்டீரியாக்களை அழிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இஞ்சி :  மலச்சிக்கல், வயிற்று கோளாறு ஆகியவற்றை போக்குகிறது. நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் காயங்கள் ஆறும் தன்மையை அதிகரிக்கும் தன்மை இஞ்சியில் ள்ளது. குமட்டலை தவிர்க்க உதவும். புதினா :  ஜீரண உற...

சக்கரை நோயா... இன்சுலின் வேணாமே....

*இயற்கையாகவே இன்சுலின் சுரக்கனுமா?* நாட்டு நாவல் பழக் கொட்டையை நன்றாகக் காயவைத்துப் பொடி செய்து தேனில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்து, சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் அளவுக்குத் தினமும் மதியச் சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்பாகச் சாப்பிட்டு வர வேண்டும். இப்படி 48 நாட்களுக்குச் சாப்பிட்டுவர, இன்சுலின் சுரப்பு அதிகரித்து சர்க்கரை நோய் கட்டுப்படும்.

உடல் சோர்வா???? அப்போ இதை பின்பற்றவும்

*சோர்வு நீங்க* வெங்காயத்தை இரண்டாக அறுத்து பாதங்களில் சேர்த்து கட்டவும்.... *ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோ ர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம்.* *ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது ஆண்டாண்டு காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பழக்கம்.* காய்ச்ச்ல் கண்டவர்களுக்கு இது தான் சாப்பாடு. *ஓமத்தின் விசேஷம்* சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்!.

பாத எரிச்சல் குணமாக

*பாத எரிச்சலை குணப்படுத்த :* 1. மருதாணி இலைகளை பறித்து அரைத்து அதனுடன் எழுமிச்சை சாற்றை பிழிந்து கலந்து கால் பாதங்களில் பூசவும்... Collect mehandhi leaves grind it add lemon juice in that paste and apply on ur foot... 2. சிறிது நல்லெண்ணெயில் மிளகு பூண்டு ஒரு மிளகாய் வற்றல் இஞ்சி (நநசுக்கயது) சீரகம் போட்டு சிறு தீயில் காய்சவும்.. சூடு ஆறியவுடன் கை விரலால் பூண்டு மிளகாய் எல்லாவற்றையும் நசுக்கி தலையில் தேய்து... வெதுவெதுப்பான சுடு நீரில் குளிக்கவும்... In a pan add Gingelly oil 1red chilli Black Pepper Cumin seeds Ginger (make it as paste) Garlic Heat it in low flame after 5 mins leave it to cool.. Then with ur fingers mash the above ingredients apply on ur head... After few minutes, Take bath in Mild hot water... 3. விளக்கெண்ணெய் கீழே குறிப்பிட்ட இடங்களில் தடவலாம் கால் பாதம் கால் கட்டை விரல் தொப்புள் தலை உச்சி Apply castor oil in the following parts of ur body 1. Foot 2. Thumb fingers in ur legs 3. Navel 4. Head (top) 4. முட்டையின் வெள்ளையை கா...

புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையை போல.... நாமும்....

*தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்* *மேல்நாட்டு நாகரீகம் என்ற ஒரு மோகத்தில் தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்.* 1. *மண்பானை சமையல்.* மண்பானை சமையல் ஆரோக்கியமானது. *நீண்ட ஆயுள் தரக்கூடியது.* மண் பானையில் சமைத்து உண்டவர்கள்100 வயது வாழ்ந்தது சாதாரண விஷயம். ஆனால் இன்று 60 வயதை தாண்டுவது பெரிய விஷயம்.  2. *ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.* வேப்பங்குச்சியில் பல் துலக்கி கொண்டு இருந்த போது ஆரோக்கியமான பல் இருந்தது. *இன்று பிரஷ் மூலம் பல் துலக்க வைத்து ஆரோக்கியம் இல்லாத பல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பல் மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.* 3. *இயற்க்கை மருத்துவ முறை* *ஆங்கிலேய ஆளுமை காலத்தில் தமிழர்களின் பல நூற்றாண்டு பெருமை பெற்ற மருத்துவ முறைகள் அழிக்கப்பட்டன.* *அதற்க்கு பதிலாக அவர்கள் கொண்டு வந்த அலோபதி மருத்துவ முறை அதிகமான பக்க விளைவுகள் கொண்டது.* 4. *இயற்கை வாசனை திரவியங்கள்* *இயற்கையான வாசனை திரவியங்களை தயார் செய்து உலகின் பல நாடுகளுக்கும் கொண்டு சென்று வணிகம் செய்தார்கள் தமிழர்கள்.* ஆனால் இன்று ரசாயன வாசனை திரவியங்களை வாங்கி உபயோகிக்கிறார்...

சான்றோர்களின் மதிப்பு மிக்க அறிவுரைகள்

இன்று வீட்டில் பொருளாதார நிலை கட்டுக்குள் அடங்காமல் நிலை குலைந்து போகக் காரணம் மருத்துவச் செலவுகளும் ஒன்று என்று சொல்லத்தான் வேண்டும் இயற்கைக்கு மாறாக நடக்கும் போது எல்லாம் இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாக தவறியதே இல்லை. இன்று பெண்கள் வலிவந்து குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. இயற்கையாக நடப்பதற்குக் கூட பொறுமை இன்றி கர்ப்பப் பையை எடுத்து விடுகிறார்கள். எல்லாம் அவசரம் எதற்காக இந்த ஓட்டம். ஒரு நிமிடம் சிந்திப்போம்.சந்தோசத்தை தொலைத்து எதைப் பெறப்போகிறோம் .மருந்து வேண்டாம் மாத்திரை வேண்டாம். வீட்டில் இருக்கும் உணவில் உள்ள மருத்துவக் குணத்தை தெரிந்து கொண்டு உண்டாலே போதும். வைத்தியருக்கு கொடுப்பதை வணிகருக்கு கொடு—என்பார்கள் நம் முன்னோர்கள் வணிகப் பொருளை வைத்தியம் ஆக்கிய விதத்தைப் பார்ப்போமா. அதற்கு முன் சில மருத்துவ பாடல்களைப் பார்ப்போம். “வாழ்வதற்காகச் சாப்பிடுங்கள் சாப்பிடுவதற்காக வாழ வேண்டாம்” “உடலுக்கு அழகு உழைப்பு உள்ளத்திற்கு அழகு நல்லுணர்வு” “தவறான ஆசைகள் நோயிற்கு காரணம் ஒழுங்கான வாழ்வே ஆரோக்கியம்” நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் ‘ —பழமொழி. “உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது”–முதுமொழிக் காஞ்சி...

நமது பாரம்பரிய முறையும் அதன் பிண்ணனியும்....

1) *ஏறுதழுவல்* = வீரியமான காளைகளை தேர்வு செய்யும் முறை. 2) *முளைப்பாரி* = வீரியமான விதைகள் தேர்வு செய்யும் முறை. 3) *சேவல் மோத விடும் சண்டை* = வீரியமான கோழிகளை தேர்வு செய்யும் முறை. 4) *கிடாய் ஆடு மோத விடும் சண்டை* = வீரியமான ஆடுகளை தேர்வு செய்யும் முறை. *அனைத்திற்கும் தடை காரணம் யார்?* *சேவல் சண்டைக்கு தடை* = அன்னிய பாய்லர் கோழி+உற்பத்தி கருவி+சீராய்டு ஊசி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம். *நாட்டு நாய் மையம் தடை+கருத்தடை* = அன்னிய நாய்+உணவு+மருத்துவம் அன்னியனின் வர்த்தகம். *பசுமைப் புரட்சி  நம் நாட்டு விதைகள் அழிப்பு* = விதையில்லாத விவசாயம்+நெல்+செயற்கை இரசாயன உரம்+ உற்பத்தி கருவி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம். *தென்னை, பனை மரங்கள் கல் இறக்க தடை+ அழிப்பு* = கோக்+ பெப்சி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம். *ஏறு தழுவுதல் தடை* = சினை ஊசி+பால்+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம். *பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி* என்று பல போலி புரட்சிகள் செய்து நமது தற்சார்பு முறைகள் அனைத்தையும் அழித்து அன்னிய கார்பெட் நிறுவனத்திற்கு நம்மை அடிமை படு...

பிண்ணிய பாம்பு குறியீடு - ஆங்கில மருத்துவ ரகசியம்

நோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்  இரண்டு பாம்புகள் (சர்ப்பங்கள்) ஒரு தடியை பிண்ணிக்கொண்டிருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட குறியீட்டை மருத்துவ மனைகளிலும், மருத்துவர்களின் வாகனம் மற்றும் அவர்களின் அறிமுக அட்டைகளிலும்(Visiting Card),முகவரியுடன் கூடிய கடித ஏட்டிலும்(Letter pad) காணலாம். அந்த குறியீடு மருத்துவ துறையின் குறியீடாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது போன்ற குறியீடு சிவன் கோயில் மற்றும் அம்மன் கோயில் வளாகங்களிலும்,அரச மரங்களின் அடியிலும் கற்சிலைகளாக நிறுவப்பட்டிருப்பதை காணலாம். ஆலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் இத்தகைய சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் ஒரு முறை தரிசித்து வந்தால் அன்றைய தினம் நாம் செய்த கர்மங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும். இந்த கற்சிலைகளைப்பார்த்துதான் மருத்துவத்துறை தங்கள் குறியீட்டை அமைத்துக்கொண்டுள்ளது. இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் தரிசித்து வந்தால் தீராத வியாதிகள் எல்லாம் தீரும் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம். நம் முன்னோர்கள் தினமும் இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை (இரண்டு பாம்புகள் பிண்ணிக்கொண்டிருப்பது போன்ற கற்சிலைகள்) கோயில்களில் ...

தமிழர்களின் அறிவுத் திறனுக்கு இதுவும் ஒரு சான்றாகும்

*ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா ?* *தமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு:* ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ? *முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.* "கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல் "கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும் பூசணிக்காய் தோறும் புகல்" ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும். ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க. பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பத...

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

கண் பார்வையைத் தெளிவாக்கும் எள்ளுப் பூக்கள்..

உடலுக்கு சக்தி தரும் எள் போல எள்ளுச்செடியின் மலர்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. தூய வெண்மை நிறம் கொண்ட எள்ளுப்பூக்கள் அழகிய வடிவம் கொண்டவை. சங்க காலம் முதல் தற்கால கவிஞர்கள் வரை எள்ளுப்பூக்களை பெண்களின் நாசிக்கு ஒப்பிடுகின்றனர். எள்ளுச்செடிகளில் புதிதாக பூக்கும் பூக்களை தினமும் பறித்து பச்சையாக சாப்பிட்டு மோர் பருகிவர கண் தொடர்பான நோய்கள் நீங்கும். மங்கலான பார்வை தெளிவடையும் எள் செடியில் இருந்து பூவைப் பறித்து பற்களில் படாமல் விழுங்கிவிட வேண்டும். ஒவ்வொன்றாக விழுங்க முயற்சி செய்ய வேண்டும். மொத்தமாக அள்ளிப் போடக்கூடாது. ஒரே நேரத்தில் ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக எத்தனை பூக்கள் விழுங்குகிறோமோ அத்தனை வருடங்களுக்கு கண் வலி வராது. மங்கலான பார்வை தெளிவடையும். கண்களில் பூ விழுந்தவர்களுக்கு பேரிச்சம்பழக்கொட்டையும், மான் கொம்பின் ஒரு பகுதியையும், தாய்பாலில் இழைத்து அத்துடன் எள் பூவையும் கசக்கி இழைத்து சேர்த்து கண்களில் மை போல போட்டு வர, பூ விழுந்ததால் பார்வைக்குறைவு வந்தவர்கள் குணம் பெறுவார்கள். கண் எரிச்சல், கண் பார்வை மந்தம் உள்ளவர்கள் கைப்பிடியளவு எள்ளுப்பூவை ஒரு சட்டியில் போட்டு பதமாக வத...

சிறுவர்கள் படுக்கையில் ஈரம் செய்வதை தடுக்க

படுக்கையில் ஈரம் செய்வதை தடுக்க தேன் பயன் படுத்தப்படுகிறது  படுக்கைக்கு செல்லும்முன் ஒரு தேக்கரண்டி தேன் குடிப்பது நம்பமுடியாத மாற்றத்தைக் கொடுக்கும். காலை உணவில் ஒரு குவளை பாலுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொடுக்கலாம். தேன் சுவையாக இருப்பதால் குழந்தைகள் பிரியத்துடன் பருகிக் கொள்வர்

முகத்தில் முடி அகற்ற

1. கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். 2. கஸ்தூரி மஞ்சள் தூள் 1 ஸ்பூன், காய்ச்சாத பால் 2 ஸ்பூன் ஆகியவை சேர்த்து முகத்தில் தடவ நாளடைவில் முடி உதிர்வதுடன், முடியின் வளர்ச்சி குறையும். மேலும் சருமம் அழகு பெறும். 3. சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேன் சேர்த்து நன்றாக குழைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர் நீரில் கழுவ சருமம் சுத்தமடைவதோடு, தேவையற்ற ரோமங்கள் குறைய்யும்.

அருகம்புல் மருத்துவ குணங்கள்

1. அருகம்புல் பசையை வெட்டுக் காயங்களின் மீது பூசிவர அவை விரைவில் குணமாகும். 2. அருகம்புல் சாறு சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாவதுடன் கண் பார்வையும் தெளிவடையும். 3. அருகம்புல், சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து, உடலில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சொறி, சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு குணமாகும். 4. அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு அரைத்து, 200 மி.லி. காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து, காலை வேளையில் மட்டும் இரண்டு வாரங்கள் ‍தொடர்ந்து குடித்துவர மூலம், இரத்த மூலம் ஆகியவை கட்டுப்படும். 5. எலுமிச்சம்பழ அளவு அருகம்புல் பசையை 1 டம்ளர் பசுந்தயிரில் கலந்து, காலை வேளையில் 10 நாட்கள் வரை தொடர்ந்து குடித்துவர வெட்டை நோய் குணமாகும்.

கொத்தமல்லி ஜூஸ் தயாரிக்கும் முறை:

கொத்தமல்லியை நீரில் நன்கு கழுவி, சிறிதாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் அதனைப் போட்டு, நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்த பின் வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால், கொத்தமல்லி ஜூஸ் ரெடி. கொத்தமல்லி ஜூஸ் பயன்கள்: 1. கொத்தமல்லி ஜூஸ் சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. 2. இதயத்தின் செயல்பாடு மேம்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும். 3. ஹீமோகுளோபின் உற்பத்திக்குத் தேவையான இரும்புச்சத்து அதிகம் உள்ளது. 4. ஜூஸை ஒருவர் தினமும் சிறிது குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். 5. கொத்தமல்லியில் உள்ள கால்சியம், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் 6. தினமும் காலையில் சிறிது கொத்தமல்லி ஜூஸைக் குடித்தால், அடிக்கடி வரும் பசி உணர்வைத் தடுத்து, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும்.

பல நன்மைகள் தரும் பனைமரம் மற்றும் பதநீர்...

வாங்க பதநீர் குடிக்கலாம் யார் கிட்டயும் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்கலாம்  நமக்கு தெரியும் நாம் உண்ணும் உணவு 70% அதிகமாக மூளையின் செயல்பாட்டிற்கு தான் செலவாகிறது என்று,நவீன அறிவியலும் இதை தான் சொல்கிறது பதநீரில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள் அமினோ அமிலங்கள் நமது மூளைக்கு தேவையான ஊட்டங்களை வழங்கி நம்மை சாந்தபடுத்தி சந்தோசமாக வைத்து கொள்வதால் நாமும் நமது சுற்றமும் சந்தோசமாக இருக்கலாம் .... பதநீர் குடிக்க  மறந்ததால் தமிழக மக்கள் இன்று நோயின் பிடியில் பன்னாட்டு மருந்து உற்பத்தி கம்பெனிகளின் சோதனை எலிகள் பதநீர் குடிப்பதால் நரம்பு மண்டலம் பலப்படுகிறது அதனால் தமிழன் ஆண்மை குறைவிற்காக  லேகியம் வாங்கி சாப்பிடும் நிலமைகள் வந்திருக்காது. 40% மேலுள்ள சர்க்கரை நோயாளிகள் தமிழகத்தில் உருவாக காரணமாக இருந்த பனைவெல்லம் மறக்கடிக்கபட்டு கரும்புசர்கரை புகுத்தபட்டதனால் என்பதையும் உணரமுடிகிறதா? சில பணக்காரர்களின் வியாதியாக இருந்த சர்க்கரை நோயை அனைவருக்கும் பொதுவுடமை ஆக்கியது எது..... பதநீர் அருந்திய பெண்களுக்கு மூட்டுவலி,மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தொந்தரவு அரவே இருக்காது, மகப்பேறு காலங்களில் ப...

வீக்கம் வலி சுளுக்கு குறைய

ஊமத்தை இலை 10 கடுகு 2 தேக்கரண்டி உப்பு அரை தேக்கரண்டி மஞ்சள் அரை தேக்கரண்டி இஞ்சி ஆள்காட்டி விரல் அளவு இவை அனைத்தையும் மையாக அரைத்து வீக்கம் வலி சுளுக்கு இருக்கும் இடத்தில் வைத்து கட்ட வேண்டும்... ஒரே நாளில் வீக்கம் குறைந்து இருப்பதை காணலாம்

கீரைகளின் தலைவன் - பொன்னாங்கண்ணி

கீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கும் கீரை பொன்னாங்கண்ணி அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது இக்கீரை … சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை இது. இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய கீரை. பொன்னாங்கண்ணியை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப்பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும் கீரை. பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி என்றும், நாட்டுப் பொன்னாங்காணி எனவும் இருவகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல அருங்குணங்கள் கொண்டது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. பொன்னாங்கண்ணியின் பயன்கள் : இக்கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். கீழா நெல்லிச்சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி தலைக்குத் தே...

தேள் விஷம் இறங்க.

30 கிராம் நவச்சாரத்தை தண்ணீரில் கரைத்து சட்டியில் காய்ச்ச வெள்ளைப் பொடியாகும்.காற்றுப்புகாத கண்ணாடி டப்பியில் அடைக்கவும்.   இதில் ஒரு சிட்டிகை எடுத்து, சிறிதளவு அதாவது குன்றிடை வெற்றிலை போடும் சுண்ணாம்பு கலந்தால் நெடி வரும்.அந்த நெடியை மூக்கில் இழுத்தால்,அந்த நிமிடமே விஷமிங்கிவிடும்.கொட்டிய இடத்தில் மேற்படி மருந்தை தடவி விடவும்.

நாம் இவற்றை பின்பற்றினால் நம் இந்தியா முன்னிலை பெறும்

1.இளநீர் நுங்கு சாப்பிடுவோம் 2.வாழை இலையிலேயே உணவகத்தில் சாப்பிடுவோம் 3.கோக் பெப்சியே தவிர்த்து இயற்கை பானங்களை மட்டும் குடிப்போம் 4.தினமும் ஒரு நாட்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிடுவோம் 5.அவர்அவர் வீட்டில் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டுவோம் அதனை பயன்படுத்துவோம் 6.பாக்கெட் பாலை பயன்படுத்தாமல் நாட்டுப் பசும்பால் கொண்டு வருவோர்களிடம் வாங்குவோம் (நெய்.வெண்ணையையும்,தயிர்,மோர்) 7.செயற்க்கை உரத்தின் மூலம் விளைந்த காய்கறிகளை, பழங்களை, தானிய வகைகளை தவிர்ப்போம் 8.வீட்டில் கழிவுநீர் குறைத்து ரசாயன பொருட்கள் பயன்படுத்துவதை குறைப்போம் 9.தனி தனி நபராக ஆள் ஒன்றுக்கு ஆண்டு ஒன்றுக்கு குறைவாக பத்து நாட்டு மரம் வைத்து அதனை பராமரிக்க வேண்டும் 10.மின்சாதன பொருட்கள் பயன்பாட்டினை குறைத்து கொள்ள வேண்டும் 11.ஆர் ஓ வாட்டர் பயன்படுத்தாமல் செப்பு பாத்திரத்தில் வைத்து நீரை குடிக்கவும் 12.நம் அருகில் இருக்கும் ஏரி குளம் குட்டை ஆறுகளை தூர்வாருவோம் 13.பாலிதீனை முழுமையா தவிர்ப்போம் பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக தவிர்ப்போம் 14.காட்டு கருவேல மரம் அழகு செடி மரங்கள் வளர்ப்பதை தவிர்ப்போம் 15.அன்னிய மோகத்தை தவிர்த்...

தமிழர்கள் தான் கெத்து!!! மெய்ஞானம் தான் பெரியது...

ஆரத்தி எடுப்பது ஏன்? நம் முன்னோர்கள் கடைபிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை. தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம் அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது. தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள் மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தபட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதைய...

தினம் ஒரு சித்த மருத்துவக் குறிப்பு

காட்டு சீரகம் ஒரு சிறிய பார்வை :- ➖ ➖ ➖ ➖ ➖ ➖ ➖ ➖ பாடல் :- “கைகறுப்பு மாறும்கடிய மேகம் போகும் மெய்குளிரும் பித்தம் விளையுமோ _ மெய்யகரி கெட்டு பனைமுலையாய் குன்மவாதம் தொலையும் காட்டு நற்சீரகத்தைக் காண்.”        -அகத்தியர் குணபாடம்- காட்டு சீரகத்துக்கு ‘வன சீரகா’ என்ற வடமொழி பெயர் உண்டு. "சிற்றிலை" எனவும்  தமிழில் அழைக்கின்றனர். காட்டு சீரகம் நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்க கூடியது. விஷ காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கக்கூடியயது. அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், மற்றும் வயிற்று வலியை போக்கும் தன்மை உடையது. வயிற்று பூச்சிகளை வெளியேற்றும். தோல் நோய்களுக்கு அற்புத மருந்து. அரை ஸ்பூன் காட்டு சீரகப் பொடி, ஒரு ஸ்பூன் சமையலுக்கு பயன்படும் சீரகம், சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்தால், வைரஸ் உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும். மேலும். ... விஷக் காய்ச்சல், மலேரியா காய்ச்சல், ஒவ்வாமையினால் ஏற்படும் காய்ச்சலை தணிக்க கூடியது. அஜீரணத்துக்கு நல்லது. நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். ஒரு பாத்திரத்தில் ...