ரசாயனம் தவிர்
ஷாம்பு
ஒரு காலத்தில் பணக்காரரின் அழகுச் சாதனம். ஒரு ரூபாய் பாக்கெட்டில் விற்கப்படத் தொடங்கியதும் ஷாம்புவின் பயன்பாடு இப்போது தினசரி பல லட்சம் லிட்டர்கள். `அடிக்கடி ஷாம்பு போடாதேன்னா, அப்போ தலைக்கு என்ன போடுறது?' எனக் கேட்கும் அளவுக்கு ஷாம்பு பல வீடுகளில் தினசரி சங்கதியாகிவிட்டது. `நல்லா புசுபுசுனு நுரைக்கிற மாதிரி நம் ஊர் சங்கதி வேற எதுவும் இல்லையா?' என்போருக்கு ஒரு செய்தி.
பூவந்திக்கொட்டை - சோப்புக்காய் என வெகுஜன மொழியில் பேசப்படும் மூலிகைக்கொட்டை. நகைகளைக் கழுவ இதைப் பயன்படுத்தும் பழக்கம் உண்டு. சீகைக்காய், பாசிப்பயறுடன் இந்தக் கொட்டையைச் சேர்த்து அரைத்துவைத்துக்கொண்டு ஷாம்புக்குப் பதில் பயன்படுத்தலாம். கொஞ்சமாக நுரைக்கும் இந்த மூலிகை, அழுக்கை நீககி முடியை பலமாக்கும்.
கண்டிஷனர் என சந்தையில் கிடைக்கும் அத்தனையும் எண்ணெயோடு சேர்த்து பல ரசாயனங்களின் கலவையே. தலைக்கு அடிக்கடி தினசரி தேங்காய் எண்ணெய் தேய்த்தாலே போதும், கண்டிஷனர் அவசியம் இல்லை. வாரம் ஒருமுறை மட்டும் எண்ணெய்க் குளியலுக்கு என நல்லெண்ணெய் தேய்க்கலாம்.
ரசாயனம் இல்லா முகப்பேணலுக்கு இன்னும் வழி உண்டு. பிளீச்சிங் செய்து பொலிவைப் பெற முல்தானிமட்டியோடு ஆவாரை, ரோஜா இதழ் பயன்படுத்தலாம். ஸ்க்ரப் மாதிரி பயன்படுத்த தோசைமாவு பயன்படுத்தலாம். அது ஒரு புரோபயோடிக் நேச்சுரல் ஸ்க்ரப்பும்கூட.
முகப்பருவுக்கு - திருநீற்றுப் பச்சிலை
மருவுக்கு - அம்மான் பச்சரிசி
தேமலுக்கு - சீமையகத்தி இலை
கரும்படைக்கு - பூவரசம் பூ எண்ணெய்
எனப் பல மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உண்டு. `எல்லாவற்றிலும் கொஞ்சம் போட்டு, அஞ்சே நாளில் அழகாயிடலாம்!' என முயற்சிக்க வேண்டாம்.
முறையாக பயன்படுத்தி வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்
ஷாம்பு
ஒரு காலத்தில் பணக்காரரின் அழகுச் சாதனம். ஒரு ரூபாய் பாக்கெட்டில் விற்கப்படத் தொடங்கியதும் ஷாம்புவின் பயன்பாடு இப்போது தினசரி பல லட்சம் லிட்டர்கள். `அடிக்கடி ஷாம்பு போடாதேன்னா, அப்போ தலைக்கு என்ன போடுறது?' எனக் கேட்கும் அளவுக்கு ஷாம்பு பல வீடுகளில் தினசரி சங்கதியாகிவிட்டது. `நல்லா புசுபுசுனு நுரைக்கிற மாதிரி நம் ஊர் சங்கதி வேற எதுவும் இல்லையா?' என்போருக்கு ஒரு செய்தி.
பூவந்திக்கொட்டை - சோப்புக்காய் என வெகுஜன மொழியில் பேசப்படும் மூலிகைக்கொட்டை. நகைகளைக் கழுவ இதைப் பயன்படுத்தும் பழக்கம் உண்டு. சீகைக்காய், பாசிப்பயறுடன் இந்தக் கொட்டையைச் சேர்த்து அரைத்துவைத்துக்கொண்டு ஷாம்புக்குப் பதில் பயன்படுத்தலாம். கொஞ்சமாக நுரைக்கும் இந்த மூலிகை, அழுக்கை நீககி முடியை பலமாக்கும்.
கண்டிஷனர் என சந்தையில் கிடைக்கும் அத்தனையும் எண்ணெயோடு சேர்த்து பல ரசாயனங்களின் கலவையே. தலைக்கு அடிக்கடி தினசரி தேங்காய் எண்ணெய் தேய்த்தாலே போதும், கண்டிஷனர் அவசியம் இல்லை. வாரம் ஒருமுறை மட்டும் எண்ணெய்க் குளியலுக்கு என நல்லெண்ணெய் தேய்க்கலாம்.
ரசாயனம் இல்லா முகப்பேணலுக்கு இன்னும் வழி உண்டு. பிளீச்சிங் செய்து பொலிவைப் பெற முல்தானிமட்டியோடு ஆவாரை, ரோஜா இதழ் பயன்படுத்தலாம். ஸ்க்ரப் மாதிரி பயன்படுத்த தோசைமாவு பயன்படுத்தலாம். அது ஒரு புரோபயோடிக் நேச்சுரல் ஸ்க்ரப்பும்கூட.
முகப்பருவுக்கு - திருநீற்றுப் பச்சிலை
மருவுக்கு - அம்மான் பச்சரிசி
தேமலுக்கு - சீமையகத்தி இலை
கரும்படைக்கு - பூவரசம் பூ எண்ணெய்
எனப் பல மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உண்டு. `எல்லாவற்றிலும் கொஞ்சம் போட்டு, அஞ்சே நாளில் அழகாயிடலாம்!' என முயற்சிக்க வேண்டாம்.
முறையாக பயன்படுத்தி வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்
Comments
Post a Comment