Skip to main content

எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடலாம்



உணவு நாம் தினமும் சாப்பிடுவது இயல்பான ஒன்று.

நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவும் சாப்பிடுகிறோம்.

ஆனால் எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது?

இப்படி ஒரு சுவாரசியமான விசியத்தை படித்தேன்.

உண்மையிலே  அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று.

1. ஞாயிறு ---  சூரியன்

கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம்,

சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா,

மாதுளை ஜூஸ்,   கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார்.

சிம்ம ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

2. திங்கள் --- சந்திரன்

பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி,

பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல்,

தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.

கடக  ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

3. செவ்வாய் --- செவ்வாய்

துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை,

பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம்,,தர்பூசணி ஜூஸ்,,

தேன் கலந்த செவ்வாழை ,ஆப்பிள்,ஆரஞ்சு பழக்கலவை.

மேஷ, விருச்சிக   ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

4. புதன் ---  புதன்

கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம்,

பாவக்காய் கொத்சு,  முருங்கைக் காய் சூப்,

பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி,

வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.

மிதுனம், கன்னி ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

5. வியாழன் --- குரு

சுக்கு காபி,அல்லது கஷாயாம், கார்ன் சூப்,

கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை,

தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல்,

சாத்துக்குடி, மாம்பழஜூஸ்,,பொங்கல்,

கதம்பதயிர் , எலுமிச்சை சாதம்,

மாதுளை, முந்திரி,திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம்.

தனுசு, மீன   ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

6. வெள்ளி --- சுக்கிரன்

பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா,

தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட்,

முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ்,

இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை,

ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ் ,

கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டுபொரியல்,

நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு  சாலட்.

ரிஷபம், துலா ராசியினருக்கு  நலம் உண்டாகும். 

7. சனி --- சனி

ஜிலேபி,எள் உருண்டை, அதிரசம்,

சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல்,

எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம்,

மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம்,

புளியோதரை, எண்ணை கத்தரிக்காய் குழம்பு,

நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ்,

பாதாமி, முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை.

மகரம், கும்ப ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

இதை சொன்னவரும் ஜோதிட கலையில்

முனைவர் பட்டம் பெற்றவர்.

ஜோதிடத்தின் பல பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர்.

அதனால் இதன் நண்பகத்தன்மையும் இருக்கலாம்.

இதை பார்க்கும் போது எனக்கு ஒன்று புரிந்தது.

கூறப்பட்ட பெரும்பாலான பதார்த்தங்கள் செய்யப்படும்

அடிப்படை பொருட்களைப்  பார்த்தால், அவை எல்லமே

அந்ததந்த கிரகங்களுக்கு உரியே தானியங்களே.

நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு அற்புதமாக

ஆன்மீகத்தையும், அறிவியலையும் தொடர்புபடுத்தி

நமக்கு ஒரு அழகான, நலமான  வாழ்வியல் முறையை

 அமைத்து  கொடுத்துள்ளார்கள்???????

ஆனால் இன்றைய தலைமுறையினரின் உணவு

  பழக்கங்கள் நம்மை கவலைப் பட வைக்கிறது,
.
அவர்களையும் முழுமையாக குறை சொல்ல முடியாது.

இன்றைய காலகட்டத்தின் நடைமுறை வாழ்க்கை

அதற்குரிய   வாழ்வியல் முறையை,தெரிந்தோ தெரியாமலோ,

விரும்பியோ,  விரும்பாமலோ பின்பற்ற வேண்டிய

கட்டாயத்தில் கொண்டு விட்டுள்ளது.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களுக்கு

எடுத்துச் சொல்லி , அவர்களால் எந்த அளவிற்கு

 பின்பற்ற முடியுமோ   அந்த அளவிற்கு எடுத்துக்

கொள்ள செய்வதாகும். வாழ்க நலமுடன்.🙏🏻🙏🏻

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...

தூக்கணாங்குருவி கூடு...

ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஸ்யங்களின் பெட்டகம்.. அவைதான் தூக்கணங் குருவிகள்,.. தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம். இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,.. தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்கும், உள்ளே இருக்கும் அந்த வடிவமைப்பையும், மிருதுவையும் பார்க்கும் போது நாம் கூட்டிற்குள் போய் தூங்கி கொள்ளலாமா என ஆசை வருவது தவிர்க்கமுடியாது. கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை...