Skip to main content

குடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்!!!



தொடர்ந்து மது அருந்தும் பழக்கத்தால் கல்லீரலின் மெல்லிய செல்கள் அழிய ஆரம்பிக்கின்றன. கல்லீரலில் அழற்சி தோன்ற ஆரம்பிக்கிறது ஆனாலும் அதன் அறிகுறிகள் உடனே தொிவதில்லை, மதுவை தண்ணீரையோ அல்லது சோடாவையோ ஊற்றி அதை “டைலூய்ட்”  செய்யாமல் ஒரே மூச்சில் குடிப்பதால் கல்லீரல் அழற்சி வேகமாகிறது. இதனால் கல்லீரலின் திறன் குறைகிறது உடன் சிறுநீரக பாதிப்பும் ஏற்படுகிறது. மெல்ல மெல்ல இரத்தத்தில் மதுவின் ஆதிக்கம் அதிகமாகிறது, ஆல்கஹால் லெவல் அதிகமானால் இரத்தம் தன் வேலையை ஒழுங்காய் செய்யாது.

                 கல்லீரலின் மேல் பாகத்தில் உள்ள நுண்ணிய செல்கள் வயிற்றுக்குள் வரும் விஷங்களை தடுத்து அழிக்க வல்லது, மது இந்த நுண்ணிய தடுப்புச்சுவரை மெதுவாக கரைத்துவிடுவதால் கல்லீரல் திசுக்களை பல்வேறு விஷப்பொருள்கள் நேரடியாகத் தாக்க ஆரம்பிக்கின்றன. மதுப்பழக்கமுடையவா்கள் சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட முடியாது, அதனால் மஞ்சள் காமாலை, கல்லீரல் பெருக்க நோய், வயிற்று வலி, பசியின்மை, உடல் எடை குறைதல்,ஆண்மை குறைவு முதலிய நோய்கள் தாக்க ஆரம்பிக்கின்றன. மெல்ல மெல்ல கல்லீரல் சுறுங்கி அதன் சக்தி முழுவதையும் இழக்கிறது அதனால் மரணம் நெருங்குகிறது.

                   இந்த மதுப்பழக்கத்தால் மனநலம் பாதிப்பு, ஆண்மை இழப்பு, சிறுநீரக பாதிப்பு, மூளை மற்றும் நரம்புகள் பாதிப்பு முதலியவை ஏற்படுகின்றன. இரத்த வாந்தி ஆரம்பித்தாலே குடிகாரா்கள் சற்று யோசித்து முடிவெடுத்து மதுவை நிறுத்த டாக்டா்களிடம் ஆலோசனை பெறவேண்டும், அந்த பழக்கத்தை மறக்க பல்வேறு மருந்துகள் உள்ளன. படுக்கையிலேயே வைத்து கவுன்சிலிங் செய்து அழிந்த கல்லீரலைப் புதுப்பித்து குடியை மறக்குமாறு செய்து வீட்டுக்கு அனுப்பிவிடுவாா்கள். ஆனால் பல போ் சிகிச்சை முடிந்து சில நாட்கள் ்கப்சிப்“ என்று மது அருந்தாமல் இருப்பாா்கள், ஆனால் நண்பா்களின் சகவாசத்தாலும் வேறு பல காரணங்களாலும் மீண்டும் மதுவுக்கு அடிமையாவாா்கள். இவா்களின் கதி அதோ கதிதான்.

                      சித்த மருத்துவத்தில் ஏதாவது வழி இருந்தால் எழுதுங்கள் என்று சில மருத்துவா்கள் கேட்டதற்கிணங்க ஐயா அவா்கள் கூறிய இந்த முறையை இங்கு எழுதுகிறேன். 




மது அருந்துவதை விடவேண்டும் ஆனால் முடியவில்லையே என்று தவிப்பவா்கள் தாங்களே இம்மருந்தை தயாா் செய்து அருந்தலாம். இதன் பெயா் “கேழ்வரகு பற்பம்”. ஒரு நாட்டுக்கோழியை பிடித்து சுத்தமான இடத்தில் அதை கட்டி வைத்து மூன்று நாளைக்கு வெறும் தண்ணீரை மட்டும் உணவாகத் தரவேண்டும், அப்பொழுது கோழி வெளியேற்றும் மலத்தை அகற்றி அந்த இடத்தை நன்றாகக் கழுவி விடவேண்டும்.

                      நான்காம் நாள் கோழிக்கு வெறும் கேழ்வரகை மட்டும் உணவாகத் தரவேண்டும், மறுநாள் கோழி வெளியேற்றும் மலத்தை சேகாித்து உலா்த்த வேண்டும், அதன் மலம் வெள்ளையாக இருக்கும், அதை பவுடா் செய்தால் பற்பம் போலவே இருக்கும், தேவையான அளவு சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
                           

இந்த பற்பத்தை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அவா் குடிக்கும் மதுவில் கலந்து குடிக்க வேண்டும், குடித்ததும் வாந்தி வரும். மறுபடி மதுவை குடித்தால் வாய் ஒக்காளத்துடன் வாந்தி வரும், மதுவை ஒரு மிடறு கூட குடிக்க முடியாது, மெல்ல மெல்ல மதுவின் வாசனை பட்டாலே தூர ஓடும் நிலைமை ஏற்படும்.


                                குடிகாரா்களுக்குத் தொியாமலும் இதை கொடுப்பாா்கள், சிலா் ஒரு முறை கொடுத்த போதே மதுவிலிருந்து மீண்டாா்கள், வேறு சிலா் இரண்டு மூன்று நாட்கள் பற்பம் அருந்தி மதுவை மறந்தாா்கள், 

                        இந்த மருந்தால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை, மதுவை மறந்ததும் நல்ல சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். கல்லீரல் தேற்றிகளான  முதலியவற்றை தொடா்ந்து சாப்பிட மதுவினால் இழந்த ஆண்மையையும் திரும்பப் பெறலாம், முயன்றால் முடியாதது எதுவுமில்லை, மதுவை மறந்து மறு வாழ்வு பெறலாம். இந்த மருந்தை செய்ய சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம் இருந்தாலும் இது கைமேல் பலனளிக்கக் கூடிய மருந்து, குடி குடியை கெடுக்கும் என்பதை மனதில் கொள்ளவும்.

Comments

  1. அய்யா எனது பெயர் செல்லத்துரை நான் கயத்தார் பகுதியை சேர்ந்தவன் நான் என் வாழ்க்கையில் குடி பழக்கத்தால் என் தொழிலை இழந்து கடனாளி ஆகி இப்போ நான் என் குடும்பத்தை விட்டே பிரிந்து விட்டேன் இவை அனைத்திற்க்கும் இந்த குடிதான் காரனம் நான் இப்போ தனியா வாழ்ந்துகொண்டு இருககேன் எண்னால் இந்த குடியை மறக்க முடியவில்லை குடத்தால்தான் தூக்கம் வரும் என்கிற மனநிலைக்கு வந்துட்டேன் என்னை எப்படியாவது இந்த குடிபழக்கத்தில் இருந்து காப்பாத்துங்கள்

    ReplyDelete
  2. குணப்படுத்த முடியும் நீங்கள் தயாராக இருந்தால்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

தூக்கணாங்குருவி கூடு...

ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஸ்யங்களின் பெட்டகம்.. அவைதான் தூக்கணங் குருவிகள்,.. தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம். இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,.. தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்கும், உள்ளே இருக்கும் அந்த வடிவமைப்பையும், மிருதுவையும் பார்க்கும் போது நாம் கூட்டிற்குள் போய் தூங்கி கொள்ளலாமா என ஆசை வருவது தவிர்க்கமுடியாது. கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...