Skip to main content

Posts

Showing posts from July, 2017

நோய்கள் எதனால்????

*நோய்கள் உருவாகும் இடங்கள் !* -------------------------------------------- *நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, ஈயோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.* *இதோ* *1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்* *2 - டீ* *3 - காபி* *4 - வெள்ளை சர்க்கரை* *5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.* *6 - பாக்கெட் பால்.* *7 - பாக்கெட் தயிர்* *8 - பாட்டில் நெய்* *9 - சீமை மாட்டு பால்* *10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.* *11 - பொடி உப்பு* *12 - ஐயோடின் உப்பு* *13 - அனைத்து ரீப்பயின்டு ஆயில்* *14 - பிராய்லர் கோழி* *15 - பிராய்லர் கோழி முட்டை* *16 - பட்டை தீட்டிய அரிசி* *17 - குக்கர் சோறு* *18 - பில்டர் தண்ணீர்* *19 - கொதிக்க வைத்த தண்ணீர்* *20 - மினரல் வாட்டர்* *21 - RO தண்ணீர்* *22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்* *23 - Non Stick பாத்திரங்கள்* *24 - மைக்ரோ ஓவன் அடுப்பு* *25 - மின் அடுப்பு* *26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்* *27 - சோப்பு* *28 - ஷாம்பு* *29 - பற்பசை* *30 - Foam படுக்கை மற்றும் இருக்கை* *31 - குளிர்பானங்கள்* *32 - ஜஸ் கீரீம்கள்* *33 - அனைத்து மைதா பொருட்கள்* *34 - பேக்கரி பொருட்கள்* *...

வீட்டில் இருக்கும் பொருட்களும் அதன் மருத்துவ பயன்களும்

பட்டை :  செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது. இதில் உள்ள சின்னமிக் அமிலம் உணவை பதப்படுத்த உதவுகிறது. ஜாதிக்காய் :  பல்வலி, தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, ஆண்மையின்மை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. ரத்த ஓட்டம், ஒருமனப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. கிராம்பு :  நுரையீரல் தொடர்பான நோய், காயங்களினால் திசுக்களில் ஏற்படும் வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. குடலில் உள்ள ஒட்டுண்ணி, பூஞ்சை, பாக்டீரியாக்களை அழிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இஞ்சி :  மலச்சிக்கல், வயிற்று கோளாறு ஆகியவற்றை போக்குகிறது. நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் காயங்கள் ஆறும் தன்மையை அதிகரிக்கும் தன்மை இஞ்சியில் ள்ளது. குமட்டலை தவிர்க்க உதவும். புதினா :  ஜீரண உற...

சக்கரை நோயா... இன்சுலின் வேணாமே....

*இயற்கையாகவே இன்சுலின் சுரக்கனுமா?* நாட்டு நாவல் பழக் கொட்டையை நன்றாகக் காயவைத்துப் பொடி செய்து தேனில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்து, சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் அளவுக்குத் தினமும் மதியச் சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்பாகச் சாப்பிட்டு வர வேண்டும். இப்படி 48 நாட்களுக்குச் சாப்பிட்டுவர, இன்சுலின் சுரப்பு அதிகரித்து சர்க்கரை நோய் கட்டுப்படும்.

உடல் சோர்வா???? அப்போ இதை பின்பற்றவும்

*சோர்வு நீங்க* வெங்காயத்தை இரண்டாக அறுத்து பாதங்களில் சேர்த்து கட்டவும்.... *ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோ ர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம்.* *ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது ஆண்டாண்டு காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பழக்கம்.* காய்ச்ச்ல் கண்டவர்களுக்கு இது தான் சாப்பாடு. *ஓமத்தின் விசேஷம்* சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்!.

பாத எரிச்சல் குணமாக

*பாத எரிச்சலை குணப்படுத்த :* 1. மருதாணி இலைகளை பறித்து அரைத்து அதனுடன் எழுமிச்சை சாற்றை பிழிந்து கலந்து கால் பாதங்களில் பூசவும்... Collect mehandhi leaves grind it add lemon juice in that paste and apply on ur foot... 2. சிறிது நல்லெண்ணெயில் மிளகு பூண்டு ஒரு மிளகாய் வற்றல் இஞ்சி (நநசுக்கயது) சீரகம் போட்டு சிறு தீயில் காய்சவும்.. சூடு ஆறியவுடன் கை விரலால் பூண்டு மிளகாய் எல்லாவற்றையும் நசுக்கி தலையில் தேய்து... வெதுவெதுப்பான சுடு நீரில் குளிக்கவும்... In a pan add Gingelly oil 1red chilli Black Pepper Cumin seeds Ginger (make it as paste) Garlic Heat it in low flame after 5 mins leave it to cool.. Then with ur fingers mash the above ingredients apply on ur head... After few minutes, Take bath in Mild hot water... 3. விளக்கெண்ணெய் கீழே குறிப்பிட்ட இடங்களில் தடவலாம் கால் பாதம் கால் கட்டை விரல் தொப்புள் தலை உச்சி Apply castor oil in the following parts of ur body 1. Foot 2. Thumb fingers in ur legs 3. Navel 4. Head (top) 4. முட்டையின் வெள்ளையை கா...

புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையை போல.... நாமும்....

*தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்* *மேல்நாட்டு நாகரீகம் என்ற ஒரு மோகத்தில் தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்.* 1. *மண்பானை சமையல்.* மண்பானை சமையல் ஆரோக்கியமானது. *நீண்ட ஆயுள் தரக்கூடியது.* மண் பானையில் சமைத்து உண்டவர்கள்100 வயது வாழ்ந்தது சாதாரண விஷயம். ஆனால் இன்று 60 வயதை தாண்டுவது பெரிய விஷயம்.  2. *ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.* வேப்பங்குச்சியில் பல் துலக்கி கொண்டு இருந்த போது ஆரோக்கியமான பல் இருந்தது. *இன்று பிரஷ் மூலம் பல் துலக்க வைத்து ஆரோக்கியம் இல்லாத பல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பல் மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.* 3. *இயற்க்கை மருத்துவ முறை* *ஆங்கிலேய ஆளுமை காலத்தில் தமிழர்களின் பல நூற்றாண்டு பெருமை பெற்ற மருத்துவ முறைகள் அழிக்கப்பட்டன.* *அதற்க்கு பதிலாக அவர்கள் கொண்டு வந்த அலோபதி மருத்துவ முறை அதிகமான பக்க விளைவுகள் கொண்டது.* 4. *இயற்கை வாசனை திரவியங்கள்* *இயற்கையான வாசனை திரவியங்களை தயார் செய்து உலகின் பல நாடுகளுக்கும் கொண்டு சென்று வணிகம் செய்தார்கள் தமிழர்கள்.* ஆனால் இன்று ரசாயன வாசனை திரவியங்களை வாங்கி உபயோகிக்கிறார்...

சான்றோர்களின் மதிப்பு மிக்க அறிவுரைகள்

இன்று வீட்டில் பொருளாதார நிலை கட்டுக்குள் அடங்காமல் நிலை குலைந்து போகக் காரணம் மருத்துவச் செலவுகளும் ஒன்று என்று சொல்லத்தான் வேண்டும் இயற்கைக்கு மாறாக நடக்கும் போது எல்லாம் இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாக தவறியதே இல்லை. இன்று பெண்கள் வலிவந்து குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. இயற்கையாக நடப்பதற்குக் கூட பொறுமை இன்றி கர்ப்பப் பையை எடுத்து விடுகிறார்கள். எல்லாம் அவசரம் எதற்காக இந்த ஓட்டம். ஒரு நிமிடம் சிந்திப்போம்.சந்தோசத்தை தொலைத்து எதைப் பெறப்போகிறோம் .மருந்து வேண்டாம் மாத்திரை வேண்டாம். வீட்டில் இருக்கும் உணவில் உள்ள மருத்துவக் குணத்தை தெரிந்து கொண்டு உண்டாலே போதும். வைத்தியருக்கு கொடுப்பதை வணிகருக்கு கொடு—என்பார்கள் நம் முன்னோர்கள் வணிகப் பொருளை வைத்தியம் ஆக்கிய விதத்தைப் பார்ப்போமா. அதற்கு முன் சில மருத்துவ பாடல்களைப் பார்ப்போம். “வாழ்வதற்காகச் சாப்பிடுங்கள் சாப்பிடுவதற்காக வாழ வேண்டாம்” “உடலுக்கு அழகு உழைப்பு உள்ளத்திற்கு அழகு நல்லுணர்வு” “தவறான ஆசைகள் நோயிற்கு காரணம் ஒழுங்கான வாழ்வே ஆரோக்கியம்” நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் ‘ —பழமொழி. “உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது”–முதுமொழிக் காஞ்சி...

நமது பாரம்பரிய முறையும் அதன் பிண்ணனியும்....

1) *ஏறுதழுவல்* = வீரியமான காளைகளை தேர்வு செய்யும் முறை. 2) *முளைப்பாரி* = வீரியமான விதைகள் தேர்வு செய்யும் முறை. 3) *சேவல் மோத விடும் சண்டை* = வீரியமான கோழிகளை தேர்வு செய்யும் முறை. 4) *கிடாய் ஆடு மோத விடும் சண்டை* = வீரியமான ஆடுகளை தேர்வு செய்யும் முறை. *அனைத்திற்கும் தடை காரணம் யார்?* *சேவல் சண்டைக்கு தடை* = அன்னிய பாய்லர் கோழி+உற்பத்தி கருவி+சீராய்டு ஊசி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம். *நாட்டு நாய் மையம் தடை+கருத்தடை* = அன்னிய நாய்+உணவு+மருத்துவம் அன்னியனின் வர்த்தகம். *பசுமைப் புரட்சி  நம் நாட்டு விதைகள் அழிப்பு* = விதையில்லாத விவசாயம்+நெல்+செயற்கை இரசாயன உரம்+ உற்பத்தி கருவி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம். *தென்னை, பனை மரங்கள் கல் இறக்க தடை+ அழிப்பு* = கோக்+ பெப்சி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம். *ஏறு தழுவுதல் தடை* = சினை ஊசி+பால்+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம். *பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி* என்று பல போலி புரட்சிகள் செய்து நமது தற்சார்பு முறைகள் அனைத்தையும் அழித்து அன்னிய கார்பெட் நிறுவனத்திற்கு நம்மை அடிமை படு...

பிண்ணிய பாம்பு குறியீடு - ஆங்கில மருத்துவ ரகசியம்

நோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்  இரண்டு பாம்புகள் (சர்ப்பங்கள்) ஒரு தடியை பிண்ணிக்கொண்டிருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட குறியீட்டை மருத்துவ மனைகளிலும், மருத்துவர்களின் வாகனம் மற்றும் அவர்களின் அறிமுக அட்டைகளிலும்(Visiting Card),முகவரியுடன் கூடிய கடித ஏட்டிலும்(Letter pad) காணலாம். அந்த குறியீடு மருத்துவ துறையின் குறியீடாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது போன்ற குறியீடு சிவன் கோயில் மற்றும் அம்மன் கோயில் வளாகங்களிலும்,அரச மரங்களின் அடியிலும் கற்சிலைகளாக நிறுவப்பட்டிருப்பதை காணலாம். ஆலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் இத்தகைய சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் ஒரு முறை தரிசித்து வந்தால் அன்றைய தினம் நாம் செய்த கர்மங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும். இந்த கற்சிலைகளைப்பார்த்துதான் மருத்துவத்துறை தங்கள் குறியீட்டை அமைத்துக்கொண்டுள்ளது. இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை தினமும் தரிசித்து வந்தால் தீராத வியாதிகள் எல்லாம் தீரும் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம். நம் முன்னோர்கள் தினமும் இந்த சர்ப்ப பிரதிஷ்டைகளை (இரண்டு பாம்புகள் பிண்ணிக்கொண்டிருப்பது போன்ற கற்சிலைகள்) கோயில்களில் ...

தமிழர்களின் அறிவுத் திறனுக்கு இதுவும் ஒரு சான்றாகும்

*ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா ?* *தமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு:* ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ? *முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.* "கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல் "கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும் பூசணிக்காய் தோறும் புகல்" ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும். ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க. பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பத...

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

கண் பார்வையைத் தெளிவாக்கும் எள்ளுப் பூக்கள்..

உடலுக்கு சக்தி தரும் எள் போல எள்ளுச்செடியின் மலர்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. தூய வெண்மை நிறம் கொண்ட எள்ளுப்பூக்கள் அழகிய வடிவம் கொண்டவை. சங்க காலம் முதல் தற்கால கவிஞர்கள் வரை எள்ளுப்பூக்களை பெண்களின் நாசிக்கு ஒப்பிடுகின்றனர். எள்ளுச்செடிகளில் புதிதாக பூக்கும் பூக்களை தினமும் பறித்து பச்சையாக சாப்பிட்டு மோர் பருகிவர கண் தொடர்பான நோய்கள் நீங்கும். மங்கலான பார்வை தெளிவடையும் எள் செடியில் இருந்து பூவைப் பறித்து பற்களில் படாமல் விழுங்கிவிட வேண்டும். ஒவ்வொன்றாக விழுங்க முயற்சி செய்ய வேண்டும். மொத்தமாக அள்ளிப் போடக்கூடாது. ஒரே நேரத்தில் ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக எத்தனை பூக்கள் விழுங்குகிறோமோ அத்தனை வருடங்களுக்கு கண் வலி வராது. மங்கலான பார்வை தெளிவடையும். கண்களில் பூ விழுந்தவர்களுக்கு பேரிச்சம்பழக்கொட்டையும், மான் கொம்பின் ஒரு பகுதியையும், தாய்பாலில் இழைத்து அத்துடன் எள் பூவையும் கசக்கி இழைத்து சேர்த்து கண்களில் மை போல போட்டு வர, பூ விழுந்ததால் பார்வைக்குறைவு வந்தவர்கள் குணம் பெறுவார்கள். கண் எரிச்சல், கண் பார்வை மந்தம் உள்ளவர்கள் கைப்பிடியளவு எள்ளுப்பூவை ஒரு சட்டியில் போட்டு பதமாக வத...

சிறுவர்கள் படுக்கையில் ஈரம் செய்வதை தடுக்க

படுக்கையில் ஈரம் செய்வதை தடுக்க தேன் பயன் படுத்தப்படுகிறது  படுக்கைக்கு செல்லும்முன் ஒரு தேக்கரண்டி தேன் குடிப்பது நம்பமுடியாத மாற்றத்தைக் கொடுக்கும். காலை உணவில் ஒரு குவளை பாலுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொடுக்கலாம். தேன் சுவையாக இருப்பதால் குழந்தைகள் பிரியத்துடன் பருகிக் கொள்வர்

முகத்தில் முடி அகற்ற

1. கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். 2. கஸ்தூரி மஞ்சள் தூள் 1 ஸ்பூன், காய்ச்சாத பால் 2 ஸ்பூன் ஆகியவை சேர்த்து முகத்தில் தடவ நாளடைவில் முடி உதிர்வதுடன், முடியின் வளர்ச்சி குறையும். மேலும் சருமம் அழகு பெறும். 3. சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேன் சேர்த்து நன்றாக குழைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர் நீரில் கழுவ சருமம் சுத்தமடைவதோடு, தேவையற்ற ரோமங்கள் குறைய்யும்.

அருகம்புல் மருத்துவ குணங்கள்

1. அருகம்புல் பசையை வெட்டுக் காயங்களின் மீது பூசிவர அவை விரைவில் குணமாகும். 2. அருகம்புல் சாறு சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாவதுடன் கண் பார்வையும் தெளிவடையும். 3. அருகம்புல், சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து, உடலில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சொறி, சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு குணமாகும். 4. அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு அரைத்து, 200 மி.லி. காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து, காலை வேளையில் மட்டும் இரண்டு வாரங்கள் ‍தொடர்ந்து குடித்துவர மூலம், இரத்த மூலம் ஆகியவை கட்டுப்படும். 5. எலுமிச்சம்பழ அளவு அருகம்புல் பசையை 1 டம்ளர் பசுந்தயிரில் கலந்து, காலை வேளையில் 10 நாட்கள் வரை தொடர்ந்து குடித்துவர வெட்டை நோய் குணமாகும்.

கொத்தமல்லி ஜூஸ் தயாரிக்கும் முறை:

கொத்தமல்லியை நீரில் நன்கு கழுவி, சிறிதாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் அதனைப் போட்டு, நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்த பின் வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால், கொத்தமல்லி ஜூஸ் ரெடி. கொத்தமல்லி ஜூஸ் பயன்கள்: 1. கொத்தமல்லி ஜூஸ் சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. 2. இதயத்தின் செயல்பாடு மேம்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும். 3. ஹீமோகுளோபின் உற்பத்திக்குத் தேவையான இரும்புச்சத்து அதிகம் உள்ளது. 4. ஜூஸை ஒருவர் தினமும் சிறிது குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். 5. கொத்தமல்லியில் உள்ள கால்சியம், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் 6. தினமும் காலையில் சிறிது கொத்தமல்லி ஜூஸைக் குடித்தால், அடிக்கடி வரும் பசி உணர்வைத் தடுத்து, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும்.

பல நன்மைகள் தரும் பனைமரம் மற்றும் பதநீர்...

வாங்க பதநீர் குடிக்கலாம் யார் கிட்டயும் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்கலாம்  நமக்கு தெரியும் நாம் உண்ணும் உணவு 70% அதிகமாக மூளையின் செயல்பாட்டிற்கு தான் செலவாகிறது என்று,நவீன அறிவியலும் இதை தான் சொல்கிறது பதநீரில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள் அமினோ அமிலங்கள் நமது மூளைக்கு தேவையான ஊட்டங்களை வழங்கி நம்மை சாந்தபடுத்தி சந்தோசமாக வைத்து கொள்வதால் நாமும் நமது சுற்றமும் சந்தோசமாக இருக்கலாம் .... பதநீர் குடிக்க  மறந்ததால் தமிழக மக்கள் இன்று நோயின் பிடியில் பன்னாட்டு மருந்து உற்பத்தி கம்பெனிகளின் சோதனை எலிகள் பதநீர் குடிப்பதால் நரம்பு மண்டலம் பலப்படுகிறது அதனால் தமிழன் ஆண்மை குறைவிற்காக  லேகியம் வாங்கி சாப்பிடும் நிலமைகள் வந்திருக்காது. 40% மேலுள்ள சர்க்கரை நோயாளிகள் தமிழகத்தில் உருவாக காரணமாக இருந்த பனைவெல்லம் மறக்கடிக்கபட்டு கரும்புசர்கரை புகுத்தபட்டதனால் என்பதையும் உணரமுடிகிறதா? சில பணக்காரர்களின் வியாதியாக இருந்த சர்க்கரை நோயை அனைவருக்கும் பொதுவுடமை ஆக்கியது எது..... பதநீர் அருந்திய பெண்களுக்கு மூட்டுவலி,மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தொந்தரவு அரவே இருக்காது, மகப்பேறு காலங்களில் ப...

வீக்கம் வலி சுளுக்கு குறைய

ஊமத்தை இலை 10 கடுகு 2 தேக்கரண்டி உப்பு அரை தேக்கரண்டி மஞ்சள் அரை தேக்கரண்டி இஞ்சி ஆள்காட்டி விரல் அளவு இவை அனைத்தையும் மையாக அரைத்து வீக்கம் வலி சுளுக்கு இருக்கும் இடத்தில் வைத்து கட்ட வேண்டும்... ஒரே நாளில் வீக்கம் குறைந்து இருப்பதை காணலாம்

கீரைகளின் தலைவன் - பொன்னாங்கண்ணி

கீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கும் கீரை பொன்னாங்கண்ணி அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது இக்கீரை … சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை இது. இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய கீரை. பொன்னாங்கண்ணியை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப்பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும் கீரை. பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி என்றும், நாட்டுப் பொன்னாங்காணி எனவும் இருவகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல அருங்குணங்கள் கொண்டது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. பொன்னாங்கண்ணியின் பயன்கள் : இக்கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். கீழா நெல்லிச்சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி தலைக்குத் தே...

தேள் விஷம் இறங்க.

30 கிராம் நவச்சாரத்தை தண்ணீரில் கரைத்து சட்டியில் காய்ச்ச வெள்ளைப் பொடியாகும்.காற்றுப்புகாத கண்ணாடி டப்பியில் அடைக்கவும்.   இதில் ஒரு சிட்டிகை எடுத்து, சிறிதளவு அதாவது குன்றிடை வெற்றிலை போடும் சுண்ணாம்பு கலந்தால் நெடி வரும்.அந்த நெடியை மூக்கில் இழுத்தால்,அந்த நிமிடமே விஷமிங்கிவிடும்.கொட்டிய இடத்தில் மேற்படி மருந்தை தடவி விடவும்.

நாம் இவற்றை பின்பற்றினால் நம் இந்தியா முன்னிலை பெறும்

1.இளநீர் நுங்கு சாப்பிடுவோம் 2.வாழை இலையிலேயே உணவகத்தில் சாப்பிடுவோம் 3.கோக் பெப்சியே தவிர்த்து இயற்கை பானங்களை மட்டும் குடிப்போம் 4.தினமும் ஒரு நாட்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிடுவோம் 5.அவர்அவர் வீட்டில் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டுவோம் அதனை பயன்படுத்துவோம் 6.பாக்கெட் பாலை பயன்படுத்தாமல் நாட்டுப் பசும்பால் கொண்டு வருவோர்களிடம் வாங்குவோம் (நெய்.வெண்ணையையும்,தயிர்,மோர்) 7.செயற்க்கை உரத்தின் மூலம் விளைந்த காய்கறிகளை, பழங்களை, தானிய வகைகளை தவிர்ப்போம் 8.வீட்டில் கழிவுநீர் குறைத்து ரசாயன பொருட்கள் பயன்படுத்துவதை குறைப்போம் 9.தனி தனி நபராக ஆள் ஒன்றுக்கு ஆண்டு ஒன்றுக்கு குறைவாக பத்து நாட்டு மரம் வைத்து அதனை பராமரிக்க வேண்டும் 10.மின்சாதன பொருட்கள் பயன்பாட்டினை குறைத்து கொள்ள வேண்டும் 11.ஆர் ஓ வாட்டர் பயன்படுத்தாமல் செப்பு பாத்திரத்தில் வைத்து நீரை குடிக்கவும் 12.நம் அருகில் இருக்கும் ஏரி குளம் குட்டை ஆறுகளை தூர்வாருவோம் 13.பாலிதீனை முழுமையா தவிர்ப்போம் பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக தவிர்ப்போம் 14.காட்டு கருவேல மரம் அழகு செடி மரங்கள் வளர்ப்பதை தவிர்ப்போம் 15.அன்னிய மோகத்தை தவிர்த்...

தமிழர்கள் தான் கெத்து!!! மெய்ஞானம் தான் பெரியது...

ஆரத்தி எடுப்பது ஏன்? நம் முன்னோர்கள் கடைபிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை. தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம் அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது. தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள் மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தபட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதைய...

தினம் ஒரு சித்த மருத்துவக் குறிப்பு

காட்டு சீரகம் ஒரு சிறிய பார்வை :- ➖ ➖ ➖ ➖ ➖ ➖ ➖ ➖ பாடல் :- “கைகறுப்பு மாறும்கடிய மேகம் போகும் மெய்குளிரும் பித்தம் விளையுமோ _ மெய்யகரி கெட்டு பனைமுலையாய் குன்மவாதம் தொலையும் காட்டு நற்சீரகத்தைக் காண்.”        -அகத்தியர் குணபாடம்- காட்டு சீரகத்துக்கு ‘வன சீரகா’ என்ற வடமொழி பெயர் உண்டு. "சிற்றிலை" எனவும்  தமிழில் அழைக்கின்றனர். காட்டு சீரகம் நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்க கூடியது. விஷ காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கக்கூடியயது. அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், மற்றும் வயிற்று வலியை போக்கும் தன்மை உடையது. வயிற்று பூச்சிகளை வெளியேற்றும். தோல் நோய்களுக்கு அற்புத மருந்து. அரை ஸ்பூன் காட்டு சீரகப் பொடி, ஒரு ஸ்பூன் சமையலுக்கு பயன்படும் சீரகம், சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்தால், வைரஸ் உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும். மேலும். ... விஷக் காய்ச்சல், மலேரியா காய்ச்சல், ஒவ்வாமையினால் ஏற்படும் காய்ச்சலை தணிக்க கூடியது. அஜீரணத்துக்கு நல்லது. நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். ஒரு பாத்திரத்தில் ...

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும். 2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும். 3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும் 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள். ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள். 4. சிறுவர்கள்   1 ஸ்பூன், பெரியவர்கள்   2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும், சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும். வந்தால் கட்டுக்குள் இருக்கும். 5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள். கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும். உணவை நன்றாக மென்று, பொறுமையாக  உண்ணுங்கள். 6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;  புற்றுநோயை உருவாக்...

இடுமருந்து முறிந்து வாந்தியாக!!!

                       இடுமருந்து  வெளியேற்ற                        *********************************                     போமேநீ மருந்தீடு வாந்தியாகப் பொங்கமுடன்                      கரப்பன்சார் தன்னை வாங்கித்             தாமேநீ யிறாப்புடைய படியிலப்பா                      தாழ்வாகக் காற்ப்படிசார் பயில்தானும்             வாமேநீ யெலுமிச்சம் பழச்சார் நேரே    ...

மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவம்..!

உடலில் உஷ்ணம் மிகுந்து இருப்பதாலும், உடலுக்குத் தேவையான புரத சத்துக்கள் கிடைக்காததாலும், உடல் மெலிந்து இருப்பதற்கு காரணங்களாகும். சித்த மருத்துவ முறைகளில் இளைத்த உடல் பருக்கவும், பருத்த உடல் இளைக்கவும் ஏராளமான முறைகள் உண்டு. இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது மருத்துவ பழமொழியாகும். இதன் விளக்கம் என்ன வென்றால் உடலில் சதைப்பிடிப்பு இல்லாமால் மெலிந்து இருப்பவர்கள் தினமும் இரவில் ஒரு கைபிடி அளவு எள்ளு எடுத்து சிறிது,சிறிதாக வாயிலிட்டு நன்கு மென்று தின்று ஒரு தம்ளர் பால் சாப்பிடவும். இது போல் 40 -தினங்கள் தொடர்ந்து உண்டு வரவும். மேலும் காலையில் வெறும் வயிற்றில் வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு உண்ணவும்.இதுவும் 40 -நாள் தொடர்ந்து உண்ணவும். தேறாத பிள்ளையையும் தேற்றி வைக்குமாம் தேற்றான் கொட்டை லேகியம். இதுவும் ஒரு மருத்துவ பழமொழிதான்.அதாவது உடல் இளைத்து மெலிந்து இருக்கும் இளம் வயது பிள்ளைகளை உடல் பருக்க இந்த "தேற்றான் கொட்டை லேகியம்" உதவும்.சாப்பிடும் உணவுகளின் சத்துக்களை முழுமையாய் உடலில் சேர்க்க இந்த லேகியம் உதவும். சித்தா மெடிக்கல் கடைகளில் இந்த லேகியம் கிடைக்கும். வாங்கி...

ஆண்டாள் கிளி உருவாகும் விதம்:(கிளி செய்பவர் எழுதியது)

 காலை 10 மணி வாக்கில் கிளி கட்ட உக்காருவேன். அதுக்கு முன்னாலேயே இலைகள், நார், பூ, மூங்கில் குச்சி எல்லாம்போய் சேகரிச்சுட்டு வந்து, தயாராக வச்சுக்கிட்டுத்தான் உக்காருவேன். நானேதான் போய் அதையெல்லாம் சேகரிச்சுட்டு வருவேன். பிளாஸ்டிக் போன்ற எந்த செயற்கைப் பொருளாகவும் இல்லாமல் ரசாயனம், கோந்து போன்று எதுவும் கலக்காமல் இலை, பூ , நார், மூங்கில் மட்டுமே கொண்டு செய்யப்படும் அற்புதம் அது! "இது ஒரு நுணுக்கமான வேலை. இதை   ஆண்கள்தான் செய்யணும். இதுவரை எந்தப் பெண்ணும் கிளி கட்டித்தந்ததா தகவல் இல்லை. எங்க விட்டுப் பெண்கள் விருப்பப்பட்டு கட்டி தரோம்'னு சொன்னாக்கூட நாங்க அனுமதிக்கிறதில்லை.  ஆண்டாள் அம்மாவுக்காக தினசரி ஒரு புது கிளி செய்வோம். ஒரு கிளி கட்டுறதுக்கு அஞ்சு, ஆறு மணி நேரமாகும். வேறு யார் உதவியும் இல்லாம, நான் ஒருத்தந்தான் செய்வேன். கிளி செய்ய சில இலைகளும், பூக்களும், வாழைநாரும் மட்டும்தான் பயன்படுத்துவேன். முதலில், வாழையிலைச் சருகுகளை வச்சு, கிளி உருவம் வர்ற மாதிரி, நாரால சுத்தி கட்டிப்பேன். கிளி உருவத்துக்கு கொண்டு வந்ததும், மரவள்லிக்கிழங்குச் செடியின் இலைகளை, சருகைச...

குன்மம் என்ற அல்சர் குணமாக எளிய மூலிகை வைத்தியம்

வில்வ இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து செம்பு பாத்திரத்தில்  தண்ணீரில் ஊற்றி அதில் வில்வ இலையை போட்டு இரவில் மாடியில் வைத்து விடுங்கள்.... காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை அருந்துங்கள்.... இப்படி ஒரு வாரம் செய்து வர குன்மம் குணமாகும் செம்பு பாத்திரம் இல்லை என்றால் மண் பாத்திரத்தில் ஊற்றி வையுங்கள்

தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் பறிமாறும் முறை

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது 2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு – மிகவும் அருகாமையில் 3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய் 5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம் 4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள் *பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்:* *பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்* 1. *அருந்துதல்*  மிகச் சிறிய அளவே உட்கொள்ளல். 2. *உண்ணல்*  பசிதீர உட்கொள்ளல். 3. *உறிஞ்சல்*        வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல். 4. *குடித்தல்* நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல். 5. *தின்றல்*  தின்பண்டங்களை உட்கொள்ளல். 6. *துய்த்தல்*  சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல். 7. *நக்கல்*  நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல். 8. *நுங்கல்*  முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல். 9. *பருகல்* நீரியற் பண்டத்தை ச...

சீரகத்தின் மருத்துவ குணங்கள்

1. தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து  சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை நாள் முழுவதும் அவ்வப்போது பருகி வர எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீரின் மூலமாக பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் இந்தச் சீரக நீரூக்கு உண்டு. 2. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். 3. மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும். 4. சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் மொத்தமாகக் குணமாகும். 5. சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே வாரம் ஒருமுறை தடுப்பு முறையாகக் கூட  இதைச் சாப்பிடலாம். 6. உடலுக்கு குளிர்ச்சியும் தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக்...

*தந்தி நாளிதழில் பகிரங்கமாக வெளியான உண்மை செய்தி... நம் நாட்டில் பிறக்கும் குழந்தைகள் எல்லாமே சோதனை எலிகளே... மனிதர்கள் எல்லோரும் ஆங்கில மருத்துவ மருந்துகளை ஆராய்ச்சி செய்வதற்கே.... இது புரியாமல் நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தை தூற்றி ஆங்கில மருத்துவத்தை போற்றி இப்போது விட்டில் பூச்சிகளாய் நாம்☹☹☹*

கணவரை இழந்த பெண்கள் நெற்றி வகுட்டில் பொட்டு வைக்க கூடாது ஏன்...???

ஆண் பெண் எல்லோரும் நெற்றியில் பொட்டு வைப்போம். அதாவது இரண்டு புருவங்களுக்கு மத்தியல் நாம் உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை என்னும் மையம் உள்ளது . அதை தொட்டு தூண்டும் பொருட்டும் அங்கே உருவாகும் வெப்பதை கட்டுபடுத்தும் பொருட்டும் ஆண் பெண் எல்லோரும் அங்கே பொட்டு வைபோம். இது எல்லோரும் கடைபிடிக்கும் சம்ப்பரதாய முறை , ஆனால் திருமணமான பெண்கள் திருமணத்திற்கு பிறகு இரண்டாவதாக ஒரு பொட்டு வைப்பார்கள் அது தான் நடு நெற்றி வகுடு , இந்த இடத்தில தினமும் பெண்கள் தொட்டு பொட்டு வைப்பதால், அவர்களின் உடலில் அவர்களுக்கே தெரியாமல் சில மாறுதல்கள் ஏற்படுகிறது. சில சுரபிகள் தூண்டபடுகிறது. பெண்களுக்கு நெற்றி வகுடுவில் தினமும் தொடுவதால் அவர்களுக்கு அடி வயற்றில் பாலியல் சுரப்பி நன்கு தூண்டபடுகிறது. அதே போல் கர்ப்பபையும் வலு பெறுகிறது திருமணத்திற்கு பின் பெண்களுக்கு உடலுறவில் நல்ல ஆர்வமும் கர்ப்பபை வலு பெறவேண்டும் என்பதற்காக தான் நெற்றி வகுடுவில் பொட்டு வைக்கும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைதுள்ளனர். மேலும் சீமந்தம் , ஐந்து அல்லது எழாவது மாதம் வளைகாப்பு வைத்து செய்யும் போது எல்லோரையும் கூப்பிட்டு நெற்றி வகுடு...

ஆ!!!! பல் வலி!!!

திடீர் என்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம். 1.பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும். 2.கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும். 3.எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம். 4.வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும். 5.அசோக மரப்பட்டையுடன் உப்பு சேர்த்து பொடியாக்கி அதில் பல் துலக்கினால் பல் ஈறுகள் வலுப்படும், பல் நோய்க...

A1 மற்றும் A2 பாலுக்கு என்ன வித்தியாசம்

A 1 பாலுக்கும் சல்லிகட்டுக்கும் சம்பந்தம் இருக்கு... A 2 பாலுக்கும் சல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் இருக்கு... சீதபேதி ...வயிற்று போக்கும் சல்லிகட்டுக்கும் சம்பந்தம் இருக்கு... பெண்கள் சிறு வயதில் பூப்பெய்வதுக்கும் சல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் இருக்கு... உடல் பருமனுக்கும் சல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் இருக்கு... குழந்தையின்மைக்கும் சல்லிகட்டுக்கும் சம்பந்தம் இருக்கு... தூக்கமினமைக்கும்  சல்லிகட்டுக்கும் சம்பாந்தம் இருக்கு... மன அழுத்தத்திற்க்கும் சல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் இருக்கு... பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் சல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் இருக்கு... கேன்சருக்கும் சல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் இருக்கு... இன்னும்.... A 1 - ஜெர்சி மாட்டுப்பால் ( பீட்டா) A 2 - நாட்டு மாட்டுப் பால் தெரியாதவர்கள் ...தெரிந்து கொள்வோம்... புரிந்தவர்கள் ... புரிந்து கொள்வோம்... நாமும் நமது குடும்பத்தாரும் பச்சிளம் குழந்தை செல்வங்களும்....எந்த பால் குடிப்பது  என முடிவு செய்யும் நேரம் இது... சல்லிகட்டு / ஏறுதழுவுதல் நடத்தி தரமான் நாட்டு மாடு காளைகளை தேர்வு செய்து நாட்டுமாடுகளை இன பெருக்கம் செய...

ஆறாத புண்ணும் ஆற

பொடுதலை இலையையும் மஞ்சளும் சேர்த்துஅரைத்து கட்டி வந்தால் ஆறாத புண்ணும் ஆறும். ஒரு கைப்பிடி வேப்பங்கொழுந்தை எள்ளுடன் சேர்த்தரைத்து ஆறாத புண் மேல் போடவும் மருதாணி இலையை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வெந்து வரும்போது இறக்கி ஆறியபின் மை போல அறைத்து வைத்துக்கொண்டு துணியில் தடவி புண் மீது வைத்துக்கட்டி வர ஆறாத புண் ஆறும். புளியிலை வேப்பிலை சம அளவு எடுத்து எட்டு பங்கு தண்ணீர் சேர்த்து காய்ச்சி ஆறாத புண் இருக்கும் இடத்தில் ஊற்றி கழுவினால் குணமாகும்....

குழந்தைகளுக்கான சிறு வைத்தியங்கள்

1) குழந்தைகளுக்கு கற்பூரவல்லி இலையை 5 அல்லது 6 என்ற அளவில் எடுத்து கழுவி ஒரு தவாவில் வைத்து வதக்கி பிறகு சாறு பிழிந்து கொடுத்து வந்தால் சளித்தொல்லை தீரும். 2) குழந்தைகளுக்கு நன்கு காய்ச்சிய பாலில் தேவையான அளவு சர்க்கரை, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கொடுத்து வர சளி குறையும். 3) மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அதிகப்படியான சளியினால் மூச்சு விட கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு குப்பைமேனி இலைகளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் உப்பு அரை தேக்கரண்டி அளவு வைத்து நன்கு கசக்கி சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஊற்றாமல் பால் அல்லது ஏதாவது சாப்பிட கொடுத்து விட்டு பிறகு கொடுக்கவேண்டும். சிறிது நேரத்தில் வாந்தி வரும், இதனுடன் சளியும் சேர்ந்து வெளியே வந்துவிடும். இதனால் சளி குறைவதோடு மூச்சு விட சுலபமாக இருக்கும். 4) பெரியவர்களுக்கு தூதுவளை கீரையை துவையல் செய்து மதிய நேரத்தில் சாப்பிட்டால் சளியினால் ஏற்படும் தொந்தரவு தீரும். 5) சளியினால் ஏற்படும் இருமலை போக்க அடுப்பில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் மிளகு தூள், தேவையான அள...

களி வகைகள்

உடலை வலுவூட்டக் கூடிய 3 வகை களி! நமது பழந்தமிழரின் உணவில் மிக முக்கியமானது களி. பல்வேறு வகையான களிகளை நம் மக்கள் உண்டு வந்தார்கள். நீண்ட நேர பசியைத் தாங்குவதற்கும், உடலை உரமாக்கவும் களி சிறந்த உணவு. இப்போதைய தலைமுறையில் பலர் களி வகைகளை வீட்டில் செய்வது கிடையாது. ஆனால் ஆரோக்கிய வாழ்வை நாடும் மக்கள் மீண்டும் பழந்தமிழர் உணவுமுறையை மீட்டெடுக்க விரும்புகிறார்கள். சிறுதானிய உணவு வகைகளையும், களி வகைகளையும் பலர் பரிமாற  ஆரம்பித்திருக்கிறார்கள்.   மூன்று முக்கியமான களி வகைகளை பற்றி இங்கே பார்ப்போம்: - 1. கேப்பைக் களி  : - ராகி களி, கேப்பைக் களி, கேழ்வரகுக் களி என வெவ்வேறு பெயரில் மக்கள் இதனை அழைக்கிறார்கள். இந்தக் களியை எளிதாக செய்யலாம். முதலில்  ராகியை நன்றாக அரைத்து ராகி மாவைத் தயார் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். ராகி மாவை, கொதி நீரில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பின்னர் உருண்டை வடிவில் வார்த்து எடுத்துச் சாப்பிடலாம். கேப்பைக் களியைப் பொறுத்தவரையில் அதனுடன்  வெல்லம், கருப்பட்டி, தேங்காய் போன்றவற்றைச்...

சித்த மருத்துவ சிறப்புகள்

நோய்!!! நோய்!!! நோய்!!! எங்கும் நோய் எதிலும் நோய்... நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் பல  மருத்துவமனைகள் பெருகிவிட்டன... நோய்களும் பெருகிவிட்டது... அவசர உலகில் இன்று ஆரோக்கியம் குன்றிவிட்டது ஆயுளும் குன்றிவிட்டது... இது எல்லாம் ஏன் என்று பார்த்தால் நாம் தான் காரணம்... என்னது நாமா?? என்று சிந்தித்தால் ஆமா என்று தான் கூற வேண்டும்... நமது மருத்துவம் கலாச்சாரம் பண்பாடு உணவு முறை என்ற பலவற்றை நாம் அனைவரும் மறந்துவிட்டு விஞ்ஞான வளர்ச்சியின் பின் சென்றது தான்... விஞ்ஞானம் பிறந்து கண் விழிக்கும் முன்பே நம் சித்தர்கள் தங்கள் மெய்ஞானம் மூலம் 4448 உடல்பிணியும் உள்ளப்பிணிகளையும் வேர் அறுத்தவர்கள்... அப்பேற்பட்ட சிறந்த சித்த மருத்துவத்தை விட்டு விட்டு அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஓடி ஓடி அவசரமாக மரணத்தை தழுவுகின்றோம்... சித்த மருத்துவம் பின்பற்றி சிறப்பாக வாழ்வோம்.... சித்த மருத்துவம் பின்பற்றி அடுத்த தலைமுறையை ஆரோக்கியத்துடன் வாழ வைப்போம்... சித்த மருத்துவத்தை பின்பற்றி தான் நம் முன்னாடி தலைமுறை நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள் என்று கேள்விப்பட்டோம்.... நம் தலைமுறையில் சிலர் ...

வயிறு உபாதைகளை போக்கும் சுக்கு குழம்பு.

அஜீரணம், வயிற்று கோளாறு, செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த சுக்கு குழம்பு மிகவும் நல்லது. தேவையான பொருட்கள் : சுக்கு - ஒரு சிறிய துண்டு, மிளகு - 2 டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, சின்ன வெங்காயம் - 200 கிராம், தக்காளி - 2, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : புளியை நன்றாக கரைத்து கொள்ளவும். தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம் சிறிது வதங்கியதும் இதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் புளிக்கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு தி...

வணக்கம் தோழர்களே!!!

பல நாட்களுக்கு பிறகு மீண்டும் பதிவுகளை பதிவிடுகிறேன்.... மக்களுக்காக.... மனிதர்களின் ஆரோக்கியத்திற்காக.... நம் சந்ததியினர் நோயின்றி வாழ வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த சிறு முயற்சி.... இதை பலருக்கும் மக்களாகிய நீங்கள் கொண்டு செல்வீர்கள்... நமது குழந்தைகளுக்கு இதைப்பற்றி பகிர்ந்து நல்வழிப்படுத்தி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து மீண்டும் என் சித்த மருத்துவ சேவையை தொடங்குகின்றேன்.... ஓம் அகத்தீசாய நம...!!!