Skip to main content

Posts

Showing posts from April, 2020

மருந்துகளை சாப்பிட சிறந்த நாட்கள்

** மருந்து தொடர்ச்சியாய் வெகுகாலம் சாப்பிட வேண்டியதாய் இருந்தால் பின்வரும் நட்சத்திரங்களும் வாரங்களும் அனுசரித்து ஆரம்பிக்க வேண்டியது நமது கடமையாகும் ரேவதி அசுபதி புனர்பூசம் பூசம் அஸ்தம் சித்திரை சுவாதி திருவோணம் அவிட்டம் சதயம் அனுஷம் மூலம் மிருகசீரிஷம் இந்த நட்சத்திரங்களிலும் ஞாயிறு வியாழன் இந்த நாட்களிலும் மருந்தை சாப்பிடுவதற்கு ஆரம்பிக்க வேண்டியது - அகத்தியம் 9841168598

வாழை தண்டு அமிர்தம்

இது 100% சதவீதம் பாரம்பரிய முறையில் வாழை தண்டு சாறு சேகரிக்கும் முறையாகும்... ஆனால் நம் மக்கள் என்றுமே மாற்று வழி என்ன என்று சிந்திப்பார்கள் அது போல இன்று நாம் கட்டும் வீடுகள் செடி மரம் வளர்க்க முடியாத வகையில் கட்டிக் கொள்கிறோம்... அதனால் தான் இந்த மாதிரியான பாரம்பரிய முறைகள் வழக்கொழிந்து போய் விட்டது...

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் குணமாக

சோற்றுக்கற்றாழை மடல் எடுத்து மேல் தோல் நீக்கி அதை ஏழு முறை தண்ணீரில் கழுவி மேல் உள்ள பழுப்பு அல்லது மஞ்சள் நிற திரவம் இல்லாமல் கழுவி விடவும்... இந்த கற்றாழை சதையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பின் வரும் பயன்கள் தரும் பயன்கள் மூலாதாரத்தில் உள்ள சூடு தணியும்... சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் குணமாகும்... சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் கலந்து போவது சிறுநீர் கட்டு உடையும் வெங்கார பற்பம் மற்றும் கடுக்காய் தோல் பொடி கலந்து குடிக்கலாம்...  ( மருத்துவ ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும் ) சிறுநீர் துவார எரிச்சல் குணமாகும் - அகத்தியம் 9841168598 https://www.facebook.com/groups/541186233197447/ http://www.chakraayudham.blogspot.com

இளைப்பு குணமாக

துளசி வேப்பங்கொழுந்து மிளகு இவைகளை 5கி வீதம் எடுத்து மெழுகு பதத்தில் அரைத்து பட்டாணி அளவு உருட்டி நிழலில் காய வைத்து ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு வைத்து கொள்ளவும்....  காலை மாலையாக வேளைக்கு இரண்டு மாத்திரை வீதம் தொடர்ந்து 21 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் *சுவாச காசம் இளைப்பு* குணமாகும்... - அகத்தியம்

கருப்பை பலவீனமான??? இதனாலா?

பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.. இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்... சொல்லிவிட்டு போகட்டும்  ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.. கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால் அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்... இது அவர்களது நன்மைக்காகத்தான்... என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க் கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!! ஆண்களுக்கு ஆண் பெண் உடலமைப்பைப் பார்த்தால் , ஆணுக்குத் தான் உடற்குழிக்கு வெளியே பிரதான இனப்பெருக்க உறுப்பான விதைகள் உள்ளன. அதிகம் சைக்கிள் ஓடும் ஆண்களில் விந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. அப்படியானால் ஆண்கள் தான் தங்கள் விதைகளைக் காக்க கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது! - அகத்தியம் 9841168598

பருக்களை குறைக்க

சிறு சிறு துண்டுகளாக்கி வெட்டிவேர் சிறுதளவையும், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து, அந்த 10 பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும். முகப்பருவை விரட்ட திருநீற்றுப்பச்சிலை சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்துப் பூசினால் பலன் கிடைக்கும். - அகத்தியம்

வாயுத் தொல்லை குணமாக

ஒரு கைப்பிடி வேப்பம்பூ + கைப்பிடி பூங்கம் பூ இரண்டையும் தனித்தனியாக அரைத்து பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்... இதில் 2கி அளவு வெந்நீரில் கலந்து காலை மாலை குடித்து வந்தால் வாயுத் தொல்லை குணமாகும் புங்கம் பூவை பொடி செய்யும் முன் நெயில் லேசாக வறுத்து பின்பு அதை பயன்படுத்த வேண்டும் 2. ஓமம் வறுத்து உமி நீக்கி விட்டு சிறிது கல்லுப்பு சேர்த்து வறுத்து பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும் இதில் சம அளவு பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை 5கி வாயில் போட்டு உமிழ் நீரோடு சுவைத்து சாப்பிட வேண்டும்... 3. அஷ்ட சூரணம் உணவிற்கு பின் வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்... இதில் எது எளிய இருக்கிறதோ அதை பயன்படுத்தி கொள்ளலாம் - அகத்தியம்

பௌத்திரம் எதனால் ஏற்படுகிறது

அதிக உடல் உழைப்பு அதிக கோபம் அதிக காம எண்ணங்கள் அதிக போகம் அதிக உடற்சூடு இரவில் கண்விழிப்பது இந்த நோய் எட்டு வகைப்படும்.. பௌத்திரம் குணமாக தினமும் ஒரு நாட்டு வாழை பழத்தை கால் தேக்கரண்டியளவு விளக்கெண்ணெயில் தோய்துது சாப்பிடவும்... 2. குப்பைமேனி சமூலம் பொடி  150கி ஓமம் பொடி 50கி மிளகு தூள் 25கி நாகபற்பம் - 10கி இதில் வெருகடியளவு தினமும் காலை மாலை 48 நாட்கள் சுத்தமான பசு நெய்யில் கலந்து நக்கி சாப்பிட வேண்டும்... 3. காட்டு கருணைக்கிழங்கு லேகியம் அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம்.. துத்தி கீரை விளக்கெண்ணெயில் வதக்கி பருப்பு சேர்த்து மிளகு தூள் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிடலாம் 4. ஆமணக்கு இலையை சுத்தமான விளக்கெண்ணெயில் வதக்கி ஆசனவாயில் இளஞ்சூடாக இருக்கும் போதே வைத்து கட்டவும் 5. குப்பைமேனி இலை - இரண்டு கைப்பிடி கால் லிட்டர் விளக்கெண்ணெய் விளக்கெண்ணெய் சிறு தீயாக வைத்து காய்க்க வேண்டும் அதில் இந்த குப்பைமேனி இலைகளை போட்டு காய்ச்சி பத்திரப்படுத்தவும்... இதை இரவு உறங்கும் முன் 20மிலி குடித்து விட்டு உறங்க வேண்டும்... பாலில் கலந்தும் குடிக்கலாம்... ...

"பூண்டு எண்ணெய் தயாரிக்கும் முறை"

நூறு கிராம் வெள்ளைப் பூண்டை உடைத்து அம்மியில் வைத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்  நல்லெண்ணெய் ஒரு லிட்டர், கடுகெண்ணெய் அரை லிட்டர் , வேப்பெண்ணெய் கால் லிட்டர் எடுத்து அரைத்த பூண்டைக்கலந்து வெயிலில் பத்து நாள் வைத்து எடுத்துக்கொள்ளவும் பயன்கள் கை கால்களில் ஏற்படும் வலி, குடைச்சலுக்கு தேய்த்து வர குணமாகும் . நன்றி அகத்தியம்

இது குடிநீரா?...H2Oவா?...

நவீன அறிவியல்படி நீரில் 31+ சத்துகள் இருக்கவேன்டுமாம் அதுதான் குடிப்பதற்கான நீர். ஆனால் அதே நவீனத்தை பயன்படுத்தி அந்த 31+ சத்துகளையும் நீக்கிவிட்டு  சோடியம், மக்னீசியத்தை மட்டும் கலந்து (ஏற்கனவே இருந்தது) அதுவும் சோடியம் நீரை இலகுவாக்கவும் மக்னீசு நீரை பளபளபாக்க காட்டவும் கலப்பதுதான்.  சுத்தமான குடிநீரெனவும் கனிமங்கள் நீக்கபட்டதெனவும் கண்முன்னே பொய்சொல்லி விளம்பரபடுத்தி வியாபாரம் செய்கிறார்கள் அதையே கௌரவத்திற்காக மட்டும் வாங்கி குடித்து நாசமாகிறோம் நாம். இதன் விலை ஏழைகளுக்கு எட்டாதென்பது ஒருபுறமிருக்க  இந்தநீரை அடைக்க பயன்படும் ஞெகிழி மக்கி மண்ணாக லட்ச வருசங்களுக்கும் மேலாகுமாம். இரண்டு பங்கு ஹைட்ரஜனும் ஒரு பங்கு ஆக்சிஸனும் சேர்ந்தால் கிடைப்பது வெறும் நீர் மட்டுமே அது குடிநீரல்ல... நம்மை மெல்ல மெல்ல பலவீனமாக்கும் விஷம் - Slow Poison உங்கள் நலங்கருதி வெளியிடப்பட்டது - அகத்தியம்

கைக்குழந்தை காய்ச்சல் குணமாக

1.  வெங்காயத்தை நறுக்கி அதனை குழந்தையின் உள்ளங்காலில் இரண்டு நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இந்த முறையினை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம்,  2. நெற்றியில் அக்குள் பகுதியில் ஈர துணியை பற்றிடவும்... 3.குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக தாய்ப்பாலே சிறந்த மருந்து. குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும்போது திரவ உணவுகளை கொடுக்க வேண்டும். அதுவும் 0-6 மாத குழந்தைகளுக்கு தாய்ப்பாலே சிறந்தது. 4. துளசி இலையை இட்லி கொப்பரையில் அவித்து 10மிலி சாறு எடுத்து சம அளவு தாய்ப்பாலுடன் கலந்து குடிக்க வேண்டும் - அகத்தியம்

தொண்டைப்புண் குணமாக

அக்கரகாரம் 50கி அதிமதுரம் 50கி அக்கரகாரத்தை சட்டியிலிட்டு லேசாக வறுத்து பின்பு அதை அரைத்து பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்... பின்னர் தோல் சீவிய அதிமதுரத்தை அதே போல் பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்... இரண்டையும் ஒன்றாக கலந்து சேர்த்து கொள்ளவும்... இந்த சூரணத்தை காலை மாலை சுத்தமான தேனில் கலந்து நக்கி சுவைத்து சாப்பிட வேண்டும்... இதில் நல்ல பலன் உண்டு.. - அகத்தியம்

காது வலி நீங்க

வேப்பெண்ணெய் - 50 மிலி பூண்டு பல் - 5  பூண்டை லேசாக தட்டி போட்டு வேப்பெண்ணெயை சிறு தீயில் காய்ச்ச வேண்டும்... பூண்டு பொன் நிறமாக மாறியதும் தீயை அணைத்து விட்டு எண்ணெயை ஆற வைத்து விடவும்... பின்னர் தினமும் காதில் 5 சொட்டுக்கள் ஊற்ற காது வலி , சீழ் வடிதல் , அரிப்பு குணமாகும்... - அகத்தியம்

வலி குறைய

சுக்கு + கடுகு + பெருங்காயம் மூன்றும் சம அளவு எடுத்து அரைத்து பொடி செய்து சலித்து வைக்கவும் அதை சூடான பாலில் கலந்து பசை போல் ஆனதும் அதை வலி உள்ள இடத்தில் தடவி விடவும் - அகத்திய upம்

பேன்கள் ஒழிய

வேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லை குறையும். பஞ்சகற்ப குளியல் பொடியை பாலில் கலந்து காய்ச்சி பசை போல் ஆனதும் அதை இளஞ்சூடாக தலையில் தேய்த்து அரை மணி நேரத்திற்கு பிறகு வெந்நீரில் குளிக்க வேண்டும் வேப்பிலையை அரைத்து பூசி சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும் தூங்கும் போது தலையனை மீது வேப்பிலை மற்றும் துளசி இலைகள் பரப்பி அதன் மேல் ஒரு துணி போட்டு தூங்க வைக்கலாம். இதனால் பேன் தொல்லைகள் ஒழியும். குப்பை மேனி இலையை அரைத்து சாறு எடுத்து தலையில் அரைமணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க பேன், பொடுகுத் தொல்லை நீங்கும். செம்பருத்தி பூ இதழ் + இலைகளை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர பேன்கள்  ஒழியும் - அகத்தியம்

கண்களில் உள்ள சதை வளர்ச்சி கரைய

நேந்திரம் பூண்டு தைலம் தினமும் காலை மாலை ஒரு சொட்டு விட நல்ல குணம் தரவும் தினமும் ஒரு கிலோ வெங்காயத்தை பொடியாக நறுக்கி அந்த நெடி கண்ணில் படும்படியாக இருக்க வேண்டும் மழை நீரில் நந்தியாவட்டை பூவை இரவே ஊற வைத்து காலையில் அந்த நீரில் கண்களை கழுவினால் படிப்படியாக சதை வளர்ச்சி குறைந்து கண் ஒளி பெருகும்.... அதி ரகசிய முறை: அடுக்கு நந்தியாவட்டை பூக்களில் 50 பூக்களை 5 அவுன்ஸ் சுத்தமான மழை தண்ணீரில் அல்லது சுத்தமான தண்ணீரில் போட்டு மூடி வைக்கவும்... அடுக்கு நந்தியாவட்டை பூ கிடைக்காவிட்டால் சாதாரண நந்தியாவட்டம் பூக்கள் உபயோகிக்கலாம் பூக்கள் 3 நாட்கள் ஊறிய பின் 4வது நாள் காலை பூக்களை எறிந்து விட்டு தண்ணீரை புட்டியில் அடைத்து கொள்ளவும்...  அதை காலையிலும் மாலையிலும் மூன்று சொட்டுகள் கண்ணில் விடவும்...  இப்படி செய்து வந்தால் சதை கரைத்து விடும்... - அகத்தியம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

படிகார பற்பம் (அனுபவ முறை) படிகாரம் – ½ கிலோ  இளநீர்  – 2 லிட்டர் யானை நெரிஞ்சில் – தேவையான அளவு முதலில் படிகாரத்தை மழை தண்ணீரில் கரைத்து ஒரு முரட்டு துணியில்  வடிகட்டி கொதிக்கவைத்து உறையும் பக்குவத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் பார்க்க சுத்தமான படிகாரம் கிடைக்கும். இளநீரில் யானை நெரிஞ்சிளை போட்டு துழவிக் கொண்டு வர அந்த இளநீர்  குழகுழப்பகவும் மாறும்(இது வைத்தியர்கள் அறிந்ததே). அதை அப்படியே படிகாரத்தை கடாயிலிட்டு அதில் இந்த இளநீரை விட்டு கொதிக்க வைத்து சாறு சுண்டிய உடன் மேலும் எரிக்க படிகாரம் பற்பமாகும். இந்த படிகாரத்தை ஒன்று ரெண்டாக உடைத்து கடாயில் நன்றாக வறுத்து மீண்டும் நெகிழ அரைத்து பத்திரப் படுத்தவும். அளவு :  100மிலி கிராம் முதல் 3௦௦ மில்லி கிராம் வரை அனுபானம் : மோர் பால் வெண்ணை, நெய், வாழை பூ சாறு, நீர்முள்ளி கசாயம், முள்ளங்கி சாறு, நெரிஞ்சில் கசாயம், இளநீர்  மேலும் பல ...     பயன்கள் :  வெள்ளை, வெட்டை, குன்மம், சிறுநீரில் ரத்தம் வருதல், பித்த மயக்கம், உடல் எரிச்சல், நீர்க்கட்டு, நீர் கடுப்பு, சதையட...