Skip to main content

Posts

Showing posts from 2018

தாங்க முடியாத பல்வலிக்கு:

பல் வலி இருக்குமிடத்தில் இரவு படுக்கும்போது ஒரு துண்டு உப்பு நார்த்தங்காயை வைத்து சற்று அழுத்தி விட்டுக்கொண்டு அப்படியே தூங்கி விடலாம்.  காலையில் விழித்தெழும்போது பல் வலி சுத்தமாக நீங்கியிருக்கும்.  அந்த நார்த்தங்காய்த் துண்டை துப்பி விட்டு மிதமான வெந்நீர் விட்டு வலி இருந்த இடத்தைக் கொப்பளித்து சுத்தம் செய்து கொள்ளவும். அதன் பின் மறுபடியும் பல் வலி அந்த இடத்தில் அநேகமாக வராது - அகத்தியம் www.chakraayudham.blogspot.com

பெண்களுக்கான முக்கிய பதிவு

குழந்தை பாக்கியம் இல்லாமைக்கு காரணங்கள் : பூ , பூத்தால் காய்காய்த்து , பழம்  பழுத்துத்தான் ஆக வேண்டும். அதே போல் ஒரு பெண் பருவம் அடைந்து விட்டால் அவளுக்கு குழந்தை பாக்கியம் கட்டாயமாக இருந்து தான் ஆக வேண்டும்.   ஆனால் சில பெண்களுக்கு குழந்தை பாக்கியமே கிடைப்பதில்லையே ஏன்? ஒரு பெண் பருவம் ஆன அன்று இடது பக்கமாக அடி வயிறு வலித்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது. அப் பெண்ணுக்கு அடிவயிறு சுழன்று சுழன்று வலிக்க வேண்டும். அப்படி வலித்தால்  குழந்தை பாக்கியம் உண்டு. ஒரு பெண் பூத்த அன்று முதல் எந்த நாளும் தலைக்கு ஊற்றாமல் இருந்தால்  அந்த பெண்ணை மணம்  முடித்து வைத்தால் முதலிரவு அன்று உடலுறவு கொள்ளும் போது அளவுக்கு மீறி கர்ப்பப்பை வலிக்கும். யோணி (இனக்குறி) துவாரமும் வலிக்கும். அப்படி வலிக்கும் போது ஆண் மகனை எத்தி கீழே தள்ளி விடுவாள். அந்த பெண்ணுக்கு நாதம் பொங்காது. அந்த பெண் ஒரு ஆண்மகனை சந்தோசப்படுத்துவது கடினம். ஒரு பெண் பூத்ததில் இருந்து 2 மதத்திற்கு ஒரு முறை 3 மாதத்திற்கு ஒரு முறை தலைக்கு குளித்தாலோ அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை குளித்தாலோ அந்த பெண்ணுக்கு க...

வயிற்றில் உள்ள பூச்சிகள் செத்து வெளியேற

குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் எளிதில் இறந்து விடுகின்றன. சிறு குழந்தைகள் இனிபபு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள்  உண்டாகும்.  இதற்கு ஒரு எளிய வைத்தியம். :- தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக்  கொடுத்து மறுதினம் பாலில் சிறிது விளககெண்ணையைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள்  வெளியேறும். கொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட ,  துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக்  கலந்து குடித்து வரவும் தினமும் சில இலைகளை மென்று வந்தாலே புழுக்கள்  வெளியேறும். கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும்  வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க ,  குடல்  பூச்சிகள் மொத்தமும் அன்றே வெளிவரும்.  கடும் பத்தியம் கிடையாது குழந்தைகளின்  வயதுக்கேற்ப அளவைக் கூட்டியோ குறைத்தோ கொடுக்க...

முடிகள் உதிர

பெண் குழந்தைகள் அநாவசிய ரோமங்களை நீக்கிட இய‌ற்கை வைத்தியம். இன்றைய காலகட்டத்தில் பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் அபார வளர்ச்சி அடைகின்றனர். இதனால், உடலில் அநாவசிய ரோமங்கள் அதிகமாகி விடலாம். இந்த ரோமங்களை நீக்குவதோடு, மேலும் வளரவிடாமல் தடுக்க, விசேஷமான ஒரு குளியல் பொடி  பயத்தம் பருப்பு 500கி சம்பங்கி விதை 50 கிராம், செண்பகப்பூ 50 கிராம், பொன்ஆவாரம் பூ 50 கிராம், கோரைக்கிழங்கு 100 கிராம். இவற்றை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும், குளிக்கும் போது இந்தப் பொடியை குழைத்துப் பூசுங்கள். மெழுகு போல் சருமம் மிளிரும். - அகத்தியம் www.chakraayudham.blogspot.com

கண் சிவப்பு/கண்களில் நீர் வடிதல் / கண் எரிச்சல் குணமாக

 கண் சிவப்பு/கண்களில் நீர் வடிதல் / கண் எரிச்சல் குணமாக :    1. வில்வ இலைகளை வெறும் இரும்புச் சட்டியில் போட்டு வதக்கி ஒரு கதர் / பருத்தி துணியில் போட்டு கண்களின் இமைகள் மேல் ஒத்தடம் தரவும்... ( *சூடு அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்*) 2. வெள்ளை நந்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும் 3. மழைநீரில் வெள்ளை நந்நியாவட்டையை ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரில் கண்களை கழுவினால் கண்கள் குளிர்ச்சி பெற்று உடலில் உள்ள உஷ்ணம் வெளியேறும் கண்கள் பொலிவடையும்.... 4. அடிக்கடி *நாட்டு மாடு பசு நெய் அல்லது வெண்ணெயை* உணவில் சேர்க்க கண்கள் தெளிவாகும்... உடலுக்கும் வன்மை தரும்... - அகத்தியம் www.chakraayudham.blogspot.com

பெண்களுக்கான பதிவு

கர்பப்பை பிரச்சனைகள் நீங்க :- மஞ்சள் கரிசாலை – 100 கிராம் வெள்ளைக் கரிசாலை – 100 கிராம்   குப்பைமேனி இலை – 100 கிராம் கொட்டைக்கரந்தை இலை– 100 கிராம்   அவுரி இலை– 100 கிராம் செருப்படை இலை – 100 கிராம் ஆகியவற்றின் இலைகளை சேகரித்து, நிழலில் காயவைத்து, தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில், ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரவும் பயன்கள் :-   பெண்களுக்கான முறையற்ற மாதவிடாய் சரியாகும்.  மேலும், வயிற்றுப்பூச்சிகள், கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகளும் விலகும்.  அதிகாலை, மாலை வேளைகளில் 45 நாட்கள் வரை தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.

இதயம் பலம் பெற இலகு வைத்தியம்

இதயம் பலமாக 200 செம்பரத்தம் பூ ( *தண்டு மற்றும் காம்பு நீக்கவும்*) எடுத்து துண்டு துண்டாய் நறுக்கி ஒரு பீங்கான் குடுவை அல்லது கண்ணாடி குடுவையிலிட்டு 50 எழுமிச்சை பழம் பிழிந்து அதில் சேர்த்து பிசைந்து வெயிலில் வைக்கவும்.... மாலையில் எடுத்து பிசைய ரத்தம் போல் சாறு வரும்... இதில் தேனை கலந்து காலை மாலை 2 அவுன்ஸ் எடுத்து தண்ணீரில் கலந்து சர்பத் போல குடிக்கவும்....   பயன்கள் : இருதயம் பலப்படும் இரத்தம் உற்பத்தி ஆகும் கல்லீரல் பலப்படும் உடல் வன்மை பெறும் - அகத்தியம்

சகல வாதங்களும் குணமாக

வாத எண்ணெய் (இரகசிய முறை): 1) எண்ணெய்கள்: நல்லெண்ணெய் - 100 மிலி வேப்ப எண்ணெய் - 100 மிலி விளக்கெண்ணெய் - 100 மிலி 2) புளித்த காடி நீர் அதாவது புளித்த (பழைய சோற்று நீர்) 3) கடை சரக்குகள் : சுக்கு மிளகு திப்பிலி பூண்டு ஓமம் பெருங்காயம் கிராம்பு வசம்பு சதகுப்பை வகைக்கு 1 பலம் 4) நாட்டுப் பசும்பால் செய்முறை : எல்லா சரக்குகளையும் ஒன்றாக சூரணித்து கலந்து வைக்கவும். இந்த சூரணத்தில்  நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து அதை புளித்த காடி ஊற்றி நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். சட்டியை அடுப்பிலேற்றி முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும் வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின் விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும். மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின் நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச் சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும் இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில் அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும் நன்கு கொதிக்க விடவும் ந...

தைவேளை மூலிகையின் மகத்துவம் - தலைவலி குணமாக

தலைவலியைப் போக்கும் - தைவேளை   தேவையானவை :- தைவேளை இலை -3 நாட்டு வெங்காயம் - 1  கல்உப்பு - 1 தைவேளை எடுத்து அரைத்து ஒரு வெள்ளைத்துணியில் வைத்து வடிகட்டி சாறு எடுத்து இடது பக்கத் தலைவலிக்கு வலது பக்கக் காதில் மூன்று சொட்டு சாறும் வலது பக்கத் தலவலிக்கு இடது பக்கக் காதில் மூன்று சொட்டு சாறும் ஊற்ற வேண்டும்.  இரண்டு பக்கத் தலைவலியானால் இரண்டு காதிலும் ஊற்ற வேண்டும்.  தலைவலி ஐந்து நிமிடத்தில் போய்விடும்.  நீண்ட நாட்களாக தலைவலியாக இருந்தால் அதே தைவேளை இலையை அதிகமாக அரைத்து சாற்றை பிழிந்து கீழே விட்டு விட்டு சக்கையை மட்டும் தலையில் முழுலதும் வைத்து ஒரு வெள்ளைத் துணியை வைத்து கட்டி அரைமணி நேரம் கழித்து அந்த சக்கையை மீண்டும் பிழிந்தால் தலையில் உள்ள நீர் சக்கையின் மூலமாக உருஞ்சி வந்து விடும் தலை வலியும் போய்விடும்.     மேலும் தைவேளையின் பூக்களைப் பறித்து பொடியாக நறுக்கி வெங்காயம், மிளகு, சீரகம், தக்காளி, தேங்காய், உப்பு சேர்த்து நெய்யில் கொத்து கீரையாக பொரித்து சாப்பிட தொண்டையில் சளி கட்டி பேசுவதற்கு கூடசிரமப்படுதல், தலைவலி காய்ச்சல்...
இரத்தம் ஊற அத்திபழம் + கருப்பு பேரீச்சம்பழம் இரண்டையும் அரைத்து அதில் சம அளவு சுத்தமான தேன் விட்டு கலக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட இரத்தம் ஊறும் நாட்டு கொத்தமல்லி இலைகளை வாங்கி நெய்யில் வதக்கி அரைத்து சுடு சாதத்துடன் கலந்து சாப்பிட இரத்தம் ஊறும்... பாவண கடுக்காய் மாத்திரை காலை மாலை 1 சாப்பிடவும்... *மருந்து வேண்டும் என்றாலும் தொடர்பு கொள்ளவும்* நன்றி - அகத்தியம் www.chakraayudham . blogspot.com

கட்டிகள் கரைய

கட்டிகள் கரைய அல்லது உடைய 2 சின்ன வெங்காயத்தை நெய்யில் நன்றாக வதக்கி எடுக்கவும்... பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிசையவும்... இளஞ்சூடாக கட்டிகள் மீது வைத்து கட்டவும்... - *அகத்தியம்* www.chakraayudham.blogspot.com

உதடு கருமை நீங்க

உதடுகளில் உள்ள கருமை போக எளிய வைத்தியம் தினமும் காலை இளநீர் பருகவும்... தினமும் இரவு எழுமிச்சை சாறு நாட்டு சக்கரை கலந்து பருகவும்... இரவு தூங்கும் முன் எழுமிச்சை சாறை உதடுகளில் தடவி வர வேண்டும்.... நிறம் மாறியதும் வைத்தியத்தை நிறுத்தி விடலாம்... நன்றி - *அகத்தியம்* www.chakraayudham.blogspot.com

நரை முடி கருக்க

* நெல்லிக்காய் தைலம்!* பச்சை நெல்லிச்சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு, கற்றாழைச்சாறு, சிறுகீரைச்சாறு, பசும்பால், செவ்விளநீர் ஆகியவற்றை வகைக்கு 300 மி.லி. எடுத்துக் கொள்ளவும். அதிமதுரம், கோஷ்டம், ஏலம், கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய், சாதிப்பத்திரி, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தான்றிக்காய், இலவங்கப்பத்திரி, இலவங்கப்பட்டை, சோம்பு, வால்மிளகு ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் எடுத்துத் தூள் செய்து, ஆவின்பால், செவ்விளநீர் விட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். இரண்டு லிட்டர் நல்லெண்ணெய்யுடன் மேற்சொன்ன சாற்றையும் அரைத்த விழுதினையும் கலந்து அடுப்பிலேற்றி, சிறு தீயாய் எரித்து, தைல பதத்தில் இறக்கிவிடவும். * இந்தத் தைலத்தை தினசரி தேய்த்து வர,* தலைமுடி கொட்டுதல், இளநரை போன்றவை மறையும். கண் நோய்கள் அனைத்தும் தீரும். வெட்டைச்சூடு, கை, கால் எரிச்சல், உடம் பெரிச்சல் போன்றவை தீரும். பித்தத்தினால் உண்டாகும் தலைவலியும் தீரும் .

தீப்புண் ஆற இளகு வைத்தியம்

* தீப்புண் விரைவில் ஆற* வெற்றிலை போட பயன்படுத்தப்படும் சுண்ணாம்பை இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து கலக்கி தெளியவைக்கவும் அதில் தெளிந்த நீரை மட்டும் தனியாக எடுத்து சமஅளவில் தேங்காய் எண்ணை சேர்க்க களிபோலாகும் அதை கோழியின் இறகால் காயம்பட்ட இடத்தில் போட எரிச்சல் மாறும் சூடுபட்ட காயம் விரைவில் குணமாகும். *அனுபவ மருந்து...* நன்றி - *அகத்தியம்* www.chakraayudham.blogspot.com

எச்சரிக்கை - பெருங்காய மோசடி

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி . .  பெருங்காயம் -பெருங்காயமே இல்லை அன்புள்ள மக்களே! பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும்  என்று நாம் கேள்விப் பட்டிருப்போம்.  ஆனால், *நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?*  அந்த கூட்டு பெருங்காயம் ...  இந்த கூட்டு பெருங்காயம் ...  அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம்  இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு.  ஆனால் இது அந்த கூட்டு அல்ல.  இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக்  கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும். இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை.   என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம்.  அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்? ஒரு வகையான அராபிய பிசின் 60%, மைதா 30%, பெருங்காய வாசனை தரும் ஒர...

நமது பாரம்பரியம் - ஔவை விரதம்.. பெண்களுக்கு மட்டும்

நல்ல வரன், குழந்தை பாக்கியம், குடும்ப நலன் அருளும் ஔவையார் விரதம்! தமிழர்களின் பாரம்பர்ய விழாக்கள், வழிபாடுகள் யாவும் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டே அமைந்தவை. தாங்கள் வாழும் நிலத்தைப் பொறுத்தே அவர்களின் வழிபாடுகளும், விரதங்களும் அமைந்துள்ளன. அப்படி உருவான ஒரு விரதம்தான் ஔவையார் விரதம். பெண்களின் முன்னேற்றத்துக்கும், அவர்களுடைய நலவாழ்வுக்கும் அடிப்படையாக அமைந்த இந்த வழிபாடு, பெண்கள் மட்டுமே ஒன்று சேர்ந்து கொண்டாடிய முதல் விழா என்று கூடச் சொல்லலாம். ஔவையார் விரதம் இருப்பது எப்படி? திருமணமாகாத பெண்களும், திருமணம் முடித்த சுமங்கலிப் பெண்களும் ஒன்று சேர்ந்து செய்யும் விரதம் ஔவையார் விரதம். தை, மாசி மற்றும் ஆடிமாத செவ்வாய்க் கிழமைகளில் இந்த விரதத்தினை மேற்கொள்வார்கள். இந்த விரதத்தைப் பற்றி கிராமத்துப் பெண்கள் கூறும்போது, 'மறந்தா மாசி, தட்டினா தை, அசந்தா ஆடி' என்று குறிப்பிடுவார்கள். தை மாதம் கடைப்பிடிக்கவேண்டிய இந்த விரதத்தை மறந்துவிட்டால் மாசி மாதத்திலும், மாசியிலும் மறந்து அசந்துவிட்டால் ஆடியிலும் கடைப்பிடிக்கவேண்டும் என்பது இதன் பொருள். ஆண்டுக்கு ஒருமுறையேனும் இந்த விரதத்தைக் கடை...

மூலம் குணமாக அகத்தியர் கூறும் வழிமுறை

மூலத்திற்க்கு கஷாயம்... அகத்தியர்.! தானென்ற மூலத்துக்கு உறுதி சொல்வேன் தயங்காத மூலமென்ற தெல்லாம் போகும் தேனென்ற புல்லறுகு துளிரவைத்து செழுமையுள்ள தண்ணீரில் குடித்தாயானால் ஊனென்ற மூலமெல்லாம் தீரும் தீரும் உத்தமனே ஈரஞ்சு நாளில் மைந்தா வீனென்ற மூலமெல்லாம் ஒழிந்து போகும் - அமுத கலைஞானம் 1200 பொருள் : எல்லா வகை மூல நோயும் நீங்குவதற்க்கு மருந்து சொல்கிறேன், அறுகம்புல்லை பிடிங்கி வந்து தூய்மையான தண்ணீரில் போட்டுகொதிக்க வைத்து நன்கு கொதித்ததும் அதை இறக்கி வடித்து அரை டம்ளர் வீதம் பத்து நாட்கள் காலை-மாலை உணவுக்கு முன்பு அருந்தினால் எல்லா வகை மூலமும் கண்டிப்பாக நீங்கி போகும் என்கிறார் அகத்தியர்.

நரைமுடி கருப்பாகவும் உதிர்வது குறையவும்!! கருப்பன் தைலம்

1.கறுப்புவரட்பூலான்பழம் - 50 கிராம்.            2.மருதாணியிலை         50கிராம்.      3.கடுக்காய்த்தோல்      50கிராம்          4.தாமரைத்தண்டு 50கிராம்      5.தான்றிக்காய்த்தோல் 50கிராம்        6.மருதம்பட்டை 50கிராம்  7.மஞ்சள் கரிசாலை 100கிராம்.     8.இரும்புஅரப்பொடி 30கிராம்       9.காய்ச்சுக்கட்டி 30.கிராம் 10. எலுமிச்சம்பழச்சாறு 30மில்லி.   11.நல்லெண்ணெய் 2லிட்டர்!!  .1-9-கடைச்சரக்குகளை .இடித்துபொடித்துக்கொண்டு!! எண்ணெய்யில் பொடியும் எலுச்சம்சாறும் கலந்து  தைலபதத்தில் காய்ச்சிவடித்து வைக்கவும் . இந்தஎண்ணெய்யினை தடவி வருவதால் இளநரை மாறிடும் நரைமாறி கருப்பாகும் முடிஉதிவர்வது குறையும் முடிசெழித்து வளரும்!!  உள்மருந்தாக   கரிசாலைக்கற்பம் 100கிராமில் அயபிரு...

தொப்பை குறைய

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும். 2. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும். 3. ஊற‌வைத்த‌ அவ‌லை காலையிலும், இர‌விலும் சாப்பிட்டுவ‌ர‌உட‌ல் எடை குறையும். 4. தினமும் 300 கிராம் கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து சாப்பிட உடல் எடை குறையும். 5. நத்தைச் சூரியின் விதைகளை பொன் வறுவலாக வறுத்து தண்ணீர் விட்டு சுண்ட வைத்து வடிகட்டி 100 மில்லியளவு எடுத்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர உடலில் எடை குறையும். 6. பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றை சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான ‌கொழுப்பு குறையும். 7. காசினிக் கீரையை உலர்த்தி பொடிய...

உடலின் கழிவுகளை வெளியேற்ற சில குறிப்புகள்

12 தவறான பொருட்களை உணவாக உண்டதால் ஒரு மனிதனுக்கு செரிமானக்குறைவு ஏற்படுகிறது. அவைகளை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது   உடலின் கழிவுகளை அகற்ற 1. உப்பு 2. புளி 3. வெள்ளை சர்க்கரை 4. வெங்காயம், பூண்டு 5. ஆங்கில மருந்து 6. கெமிக்கல் உணவு 7. உருளைக்கிழங்கு 8. அசைவ கொழுப்பு 9. பால் பதார்த்தங்கள் 10. பச்சை, வர மிளகாய் 11. ரீபைண்டு ஆயில் 12. மைதா, முட்டை மேலே கொடுக்கப்பட்டவைகள் வெகு நாட்கள் கழிவுகளாக உடலிலேயே தேங்குவதால் தான் நோய் என்று மனிதனுக்கு ஒன்று ஆரம்பமாகிறது. சரி, அந்த கழிவுகளை உடலிருந்து வெளியேற்ற முடியாதா ? என்றால் நிச்சயம் முடியும். காய்கறிக்கு அந்த மகத்துவம் உண்டு. *⚡எந்த கழிவை எந்த காய்கறியின் மூலம் நீக்க முடியும் என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உண்டு பயன் பெறவும்⚡* *உப்பை வெளியேற்றும் விதி⚡* தீர்வு : காலை, பிற்பகல், இரவு மூன்று முறை பச்சையாக நான்கு வெண்டைக்காயை உணவுக்கு முன் நன்கு மென்று அரைத்து வாயிலேயே கூழாக்கி பருகவும். *⚡புளி அதிகம் எடுப்பதால் உடல் தளர்ச்சி வேகமாக நடைபெறுகிறது. அதனை வெளியேற்றும் விதி⚡* தீர்வு : ஒரு வாழைக்காயை தோலை நீக்கிவிட்டு பச்சையாக நன்றா...

வெள்ளைப்படுதல் குணமாக

வெள்ளைப்படுதல் குறைய பூசணிக்காயை எடுத்து தோல் சீவி அதன் சதையை அரைத்து நன்கு பிழிந்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குறையும். அருகம்புல்லை எடுத்து நன்றாக வெட்டி நீர் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி அதில் சிறிது மிளகுத்தூள் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும். தினமும் காலை மாலை அண்ணாச்சி பழத்தை சாப்பிட்டு வந்தால் குணமாகும்... ( *திரிபலா சூரணம்*) கடுக்காய் நெல்லிமுள்ளி தான்றிக்காய் இவை மூன்றும் முறையாக சுத்தி செய்து அதை பொடி செய்து, அந்த பொடியை இரண்டு தேக்கரண்டி இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து சூடு ஆறிய பின் பிறப்பு உறுப்பை கழுவி வந்தால் குணமாகும்... இதே பொடியை தேனில் அல்லது வெந்நீரில் கலந்து பருகினால் வெள்ளைப்படுதல் குணமாகும்...

சோரியாஸிஸ் எளிய மருத்துவம் !!!

சோரியாஸிஸ் எளிய மருத்துவம் !!! கீழ்கண்ட மருந்து பொருட்களை முறையாக  சுத்தி செய்து பயன்படுத்தினால் . கூடுதல் மற்றும் விரைவான பலன்... கார்போக அரிசி-50கிராம் வெள்ளை மிளகு-10கிராம் பரங்கி பட்டை சூரணம்-25கிராம் வேப்பில்லை பொடி-50கிராம் அனைத்தையும் பொடியாக்கி ஒன்றாக சேர்த்து காலை இரவு சிறிது(கேப்சூல்)அளவு சாப்பிடவும். தனியாக திரிபலா சூரணம் சாப்பாட்டிற்க்கு முன் தேனில் கலந்து சாப்பிடவும்.

பல் வலி குணமாக

*பல் வலி குணமாக* சுத்தமான தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி கிராம்பு பொடி – அரை தேக்கரண்டி *செய்முறை :* முதலில் வெதுப்வெதுப்பான நீரினால் வாயை கொப்பளித்துக் கொள்ளுங்கள். பின்னர் தேங்காய் எண்ணெயில் கிராம்பு பொடியை நன்றாக பேஸ்ட் போல கலக்குங்கள். இந்த பேஸ்டை வலி உள்ள பகுதியில் மெதுவாக தடவவும். 10 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். வலி குறைந்திருக்கும். இயற்கையாகவே கிராம்பு வலியை மரத்துப் போகச் செய்யும். தேங்காய் எண்ணெய் கிருமிகளை அழிக்கும். அதோடு ஈறுகளுக்கு வலிமை தரும். புண்களை ஆற்றும்.

படர்தாமரை குணமாக

பூவரசம் மரத்தின் காயை நறுக்கினால் மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் திரவத்தை படர்தாமரை மீது காலை, மாலை தடவி  இழுப்பை அரப்பு போட்டு கழுவி வந்தால் குணமாகும், அரிப்பும் நீங்கும்.

விதையில்லா பழங்கள் காய்கறிகளை புறக்கணிக்க வேண்டிய அவசியம்*

தாவரங்கள் மற்றும்  கோழிகளின்  வாழ்நாளை பாதியாக குறைத்து  வீரிய ரகங்களை  உருவாக்கும் போது அதன்வாழ் நாளில் உருவாக வேண்டிய நோய்கள்  தாவரத்தில் உருவாவதற்கு முன்பே நாம் அதை சாப்பிட்டு விடுவதால் இதற்கு ஏற்பட வேண்டிய புற்றுநோய் மரபணு சார்ந்த குறைபாடுகள் நமது  உடலில் ஏற்படுகிறது  Hybridசெய்யபட்ட  விதைகள் மிக மிக  வலிமையான மூலக்கூறை கொண்டது நமது  உடலின் Mettabollissom systemபாதிக்கபட்டு இவை நமது ஜீனோம்  கூட்டமைப்பில் உட்புகுந்து  நமது மரபுவழி  பண்புகளை சிதைத்து விடுகிறதுரத்ததில் உள்ள நோய் எதிர்பாற்றலை  சிதைத்துவிடுவதால்  எலும்பு  மற்றும் மூட்டுகளில்  பெரிய அளவில் குறைபாடுகளை  உண்டாக்குகிறது  இதனால் தான் குழந்தைகள் பூப்பெய்தல் ,  பெண்களுக்கு மார்பகம் வழக்கத்தைவிட பெரிதாக இருப்பது பெண்களுக்கு முகத்தில் முடி, புற்றுநோய் ஆர்டீசம் என எல்லாவற்றி...

மாதவிடாய் தள்ளிப் போகவும் / உடனே வரவும் எளிய வழிமுறைகள்

*மாதவிடாய் தள்ளி போக* இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, இரவு கால் டம்ளர் தயிரில் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும். * வந்தது நிக்கறதுக்கு மருந்தை பார்த்தோம். இப்போது வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு.* இதற்கும் இதே சப்ஜா விதை தான். இந்த சப்ஜா விதை - தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிக்க வேண்டும். கண்டிப்பாக அன்றைக்கு மாதவிலக்கு ஆகாது! * மாதவிடாயை தள்ளிப் போட, இன்னொரு ஆரோக்கியமான வழி இருக்கு!* காலையில வெறும் வயித்துல கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் காப்பியோ, டீயோ எதுவானாலும் குடிக்கணும். அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். உடம்பை பாதிக்காத எளிய வழி! கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்! * சில சமயம் ‘சீக்கிரமே மாதவி...

காயகற்பம்

காயகற்பம் என்பது பல்லாயிரம் ஆண்டுக்காலம் உடலினை வாழ வைக்கும் முறையாகும். காயம் என்ற சொல் உடல் என்பதை குறிக்கிறது. அழுகணிச் சித்தர் பாடல்களில் இந்த காயகற்பம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பாடல்தொகுப்பு வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள். தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ மேனி என்பது குப்பைமேனி தும்பி என்பது தும்பைச்செடி கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை) பாதம் என்பது செருப்படை மேலே குறிப்பிடப்பட்டிருக...

எனக்கு வாயு பிரச்சனை உள்ளது. அதனால் முட்டி வலி பாதம் வலி எடுக்கிறது..இதற்கு ஒரு நல்ல மருத்துவம் சொல்லுங்களேன் ?

பொதுவாக மூட்டுவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதில் மலச்சிக்கல் மற்றும் வாய்வு பிரச்சனை ஒரு காரணமாக உள்ளது. இதனைக் குணப்படுத்தும் மருந்துகள் சித்த மருத்துவ முறையினில் ஏராளமாக உள்ளது. மருந்துகள் : 1 -முடக்கத்தான் கீரை இலை -2 கைபிடி அளவு எடுத்து இதனுடன் பூண்டு -2 பல்,மிளகு ,சீரகம் சிறிது,தக்காளி ஒன்று,தண்ணீர் -2-டம்ளர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து சாப்பிடவும்.   இது போல் வாரம் மூன்று முறை சாப்பிட்டு வர ஆரம்ப நிலையில் உள்ள மூட்டு வலி எளிதில் குணமாகும். 2 - வாயு சூரணம் :     சுக்கு   -50 -கிராம்     மிளகு -50 -கிராம்     திப்பிலி -50 -கிராம்     சீரகம் -50 -கிராம்     ஏல அரிசி -25-கிராம் இவைகளை லேசாக வறுத்து இடித்து பொடி செய்து கொள்ளவும். இதில் காலை, மாலை -உணவிற்கு முன் கால் டீஸ்பூன் அளவு எடுத்து வாயிலிட்டு வெந்நீர் சாப்பிடவும்.     உடலில் சகல வாயுப் பிரச்சனைகளும் தீரும்.பசி நன்கு எடுக்கும்.மூட்டு வலி ,குதிக்கால் வலி தீரும். இதற்கு மேற் பிரயோகமாக முந்தய பதிவில் குறிப்பிட்ட "வா...