கண் சிவப்பு/கண்களில் நீர் வடிதல் / கண் எரிச்சல் குணமாக :
1. வில்வ இலைகளை வெறும் இரும்புச் சட்டியில் போட்டு வதக்கி ஒரு கதர் / பருத்தி துணியில் போட்டு கண்களின் இமைகள் மேல் ஒத்தடம் தரவும்...
( *சூடு அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்*)
2. வெள்ளை நந்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும்
3. மழைநீரில் வெள்ளை நந்நியாவட்டையை ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரில் கண்களை கழுவினால் கண்கள் குளிர்ச்சி பெற்று உடலில் உள்ள உஷ்ணம் வெளியேறும் கண்கள் பொலிவடையும்....
4. அடிக்கடி *நாட்டு மாடு பசு நெய் அல்லது வெண்ணெயை* உணவில் சேர்க்க கண்கள் தெளிவாகும்...
உடலுக்கும் வன்மை தரும்...
- அகத்தியம்
www.chakraayudham.blogspot.com
Comments
Post a Comment