Skip to main content

யானை கால் வீக்கம் குறைய / Elephantiasis


இந்த பிரச்சனை வந்த உடனே மூன்று மாதங்களில் சிகிச்சை செய்து இருந்தால் பூரண குணமாகும்....

மூன்று வருடங்கள் வரை ஆகிவிட்டதால் கிருமிகள் அழிய பல மாதங்கள் ஆனாலும் தொடர்ந்து செய்து வந்தால் மாற்றம் தெரியும்

குப்பைமேனி இலை - 9
மிளகு 6 இரண்டையும் மென்று ஒரு கோப்பை பாலை காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்...


மதியம் கழற்சி சூரணத்தை 5கி எடுத்து 100மிலி மோரில் கலந்து குடிக்க வேண்டும்

வில்வம் துளசி வேம்பு ஆகிய இலைகளை கைப்பிடி - சம அளவு எடுத்து 1லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி அது 200மிலியாக வற்றியதும் வடிகட்டி மாலை குடிக்கவும்

இரவு 5கி திரிபலா சூரணத்தை கருப்பட்டி அல்லது வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்...


முக்கியமான குறிப்பு

உப்பில்லாமல் பச்சரிசி கஞ்சி சாப்பிட விரைவாக குணமாகும்


வெளியில் பூச

ஈர புற்று மண்ணை நன்கு கெட்டியாக சந்தனம் போல் கரைத்து காலில் பூசி நன்றாக காய்ந்த பின் நீர் விட்டு கழுவி விடவும், 

இது போல

காவிக்கல், கறுப்புக்கொள்ளு, முட்டைவெண்கரு கொண்டுப் பற்று போடலாம்

கழற்சி சூரணத்தை முட்டை வெள்ளை கருவில் கலந்து பூச யானைக்கால் வீக்கம் குணமாகும். 


திரிபலா சூரணத்துடன் நாட்டு மாடு பசுவின் சிறுநீர் சேர்த்து மேலுக்கு பற்றிடலாம்.

பப்பாளி இலை அரைத்து காலில் பூசி அரை மணி நேரத்திற்கு பிறகு கழுவி விடவும்

ஓணான்கொடியினை அனலில் வாட்டி அரைத்து யானைக்கால் வீக்கத்தின் மேல் வைத்துக் கட்ட வீக்கம் குறையும்.

கால் வீக்கத்தை கட்டுப்படுத்த காலைத் தொங்க வைத்து நெடுநேரம் அமர்தல் தவிர்க்க வேண்டும்.

அதிக தூரம் நடக்கக் கூடாது


- அகத்தியம்


Comments

  1. முகம் வாதம் வந்து / காது செவிடு ஆகி விட்டது. (4 years above)

    ReplyDelete
  2. குணப்படுத்த முடியும்.... சிறிது காலம் மருந்து எடுத்து கொள்ளவும்.... 9841168598

    ReplyDelete
  3. அய்யா யானைகால் வந்து 1/5வருடம் ஆகிறது எங்கு சென்றாலும் அறுவை சிகைச்சை செய்ய வேண்டும் என்று சொல்கிறாகள் எதிரிக்கு திர்வு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...

தூக்கணாங்குருவி கூடு...

ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஸ்யங்களின் பெட்டகம்.. அவைதான் தூக்கணங் குருவிகள்,.. தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம். இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,.. தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்கும், உள்ளே இருக்கும் அந்த வடிவமைப்பையும், மிருதுவையும் பார்க்கும் போது நாம் கூட்டிற்குள் போய் தூங்கி கொள்ளலாமா என ஆசை வருவது தவிர்க்கமுடியாது. கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை...