இந்த பிரச்சனை வந்த உடனே மூன்று மாதங்களில் சிகிச்சை செய்து இருந்தால் பூரண குணமாகும்.... மூன்று வருடங்கள் வரை ஆகிவிட்டதால் கிருமிகள் அழிய பல மாதங்கள் ஆனாலும் தொடர்ந்து செய்து வந்தால் மாற்றம் தெரியும் குப்பைமேனி இலை - 9 மிளகு 6 இரண்டையும் மென்று ஒரு கோப்பை பாலை காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்... மதியம் கழற்சி சூரணத்தை 5கி எடுத்து 100மிலி மோரில் கலந்து குடிக்க வேண்டும் வில்வம் துளசி வேம்பு ஆகிய இலைகளை கைப்பிடி - சம அளவு எடுத்து 1லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி அது 200மிலியாக வற்றியதும் வடிகட்டி மாலை குடிக்கவும் இரவு 5கி திரிபலா சூரணத்தை கருப்பட்டி அல்லது வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்... முக்கியமான குறிப்பு உப்பில்லாமல் பச்சரிசி கஞ்சி சாப்பிட விரைவாக குணமாகும் வெளியில் பூச ஈர புற்று மண்ணை நன்கு கெட்டியாக சந்தனம் போல் கரைத்து காலில் பூசி நன்றாக காய்ந்த பின் நீர் விட்டு கழுவி விடவும், இது போல காவிக்கல், கறுப்புக்கொள்ளு, முட்டைவெண்கரு கொண்டுப் பற்று போடலாம் கழற்சி சூரணத்தை முட்டை வெள்ளை கருவில் கலந்து பூச யானைக்கால்...