Skip to main content

Posts

Showing posts from May, 2020

யானை கால் வீக்கம் குறைய / Elephantiasis

இந்த பிரச்சனை வந்த உடனே மூன்று மாதங்களில் சிகிச்சை செய்து இருந்தால் பூரண குணமாகும்.... மூன்று வருடங்கள் வரை ஆகிவிட்டதால் கிருமிகள் அழிய பல மாதங்கள் ஆனாலும் தொடர்ந்து செய்து வந்தால் மாற்றம் தெரியும் குப்பைமேனி இலை - 9 மிளகு 6 இரண்டையும் மென்று ஒரு கோப்பை பாலை காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்... மதியம் கழற்சி சூரணத்தை 5கி எடுத்து 100மிலி மோரில் கலந்து குடிக்க வேண்டும் வில்வம் துளசி வேம்பு ஆகிய இலைகளை கைப்பிடி - சம அளவு எடுத்து 1லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி அது 200மிலியாக வற்றியதும் வடிகட்டி மாலை குடிக்கவும் இரவு 5கி திரிபலா சூரணத்தை கருப்பட்டி அல்லது வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்... முக்கியமான குறிப்பு உப்பில்லாமல் பச்சரிசி கஞ்சி சாப்பிட விரைவாக குணமாகும் வெளியில் பூச ஈர புற்று மண்ணை நன்கு கெட்டியாக சந்தனம் போல் கரைத்து காலில் பூசி நன்றாக காய்ந்த பின் நீர் விட்டு கழுவி விடவும்,  இது போல காவிக்கல், கறுப்புக்கொள்ளு, முட்டைவெண்கரு கொண்டுப் பற்று போடலாம் கழற்சி சூரணத்தை முட்டை வெள்ளை கருவில் கலந்து பூச யானைக்கால்...

வெரிக்கோஸ் வெயின் / நரம்பு சுருட்டல் குணமாக / Vericose Vein

கால்களில் நரம்பு சுற்றி கொள்வது என்பது ஒரு கொடிய நோய்களில் ஒன்று.... இந்த நோய் எந்த மருத்துவத்திற்கும் கட்டுப்படாது கீழ்கண்ட மருந்தை சாப்பிட்டால் ஓரளவு குணம் பெறலாம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம் வாங்கி நன்றாக இடித்து பொடி செய்து கொள்ளவும் அதனுடன் 100 கிராம் துளசி இலையை வைத்து அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக செய்து வைத்துக்கொள்ளவும் அதில் ஒரு மாத்திரை வீதம் காலை மாலை சாப்பிடவும் ஒரு மாத்திரையை தண்ணீரில் கரைத்து நரம்பு மேல் பூச வேண்டும்  இது போக  சைபிரஸ் ஆயில் என்று வண்டலூர் வனவிலங்கு உயிரியல் பூங்காவில் கிடைக்கும் இதை ஒரு பங்கு சைபிரஸ் ஆயில் எடுத்து அதில் மூன்று பங்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து நரம்பு சுருட்டல் மீது தடவி வர நல்ல குணம் கிடைக்கும்   அல்லது அத்தி மரத்தின் பாலை அந்த நரம்பு சுருட்டல் மீது தடவி வர காலை மாலை தடவி வர குணமாகும் - அகத்தியம்

நீரழிவு குணமாக

இந்த முறை Dr காளிமுத்து ஐயா திண்டுக்கல் பரம்பரை வைத்தியர் அருமைநாதன் அவர்கள் எனக்கு உபதேசித்த ரகசியமுறை உங்களுக்காக வெளிப்படுத்தி விட்டேன் அத்திப் பழத்தை காலை மாலை சாப்பிட்டு காலை எருக்கு இலையை உள்ளங்காலில் வைத்து சாக்ஸ் அணிந்து நடந்து 4 மணி நேரம் கழித்து கழற்றி எரிந்து விடவும் 3 மாதத்தில் நீரழிவு சம நிலைக்கு வந்து விடும். - அகத்தியம் 9841168598

வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற / மாதவிடாய் காலங்களில் சோர்வு குறைய / சிறுநீரக கற்கள் கரைய

மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும் . பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு ‌நீ‌ங்கு‌ம் . மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும் இவை அனைத்திற்கும் மேலாக, மணம் கமழும் மல்லிகையை ஒன்றிரண்டு தினமும் உட்கொண்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்  - அகத்தியம் 9841168598

பித்தப்பை கற்கள் குணமாக

மஞ்சள் கரிசாலை 15மிலி சுத்தமான தேன் 25மிலி இவை இரண்டையும் நன்றாக கலந்து காலை மாலை இரு வேளையும் தரவும்... இரவு தர வேண்டிய மருந்து விளக்கெண்ணெய் - 1லி வெள்ளை பூண்டு சாறு - 500மிலி இந்துப்பு - 30கி பெருங்காயம் - 10கி எல்லாவற்றையும் சேர்த்து தைல பதத்தில் காய்ச்சி வடிகட்டி கொண்டு 60மிலி பசும்பாலில் 30மிலி இந்த எண்ணெயை நன்றாக கலந்து இரவு படுக்கும் முன்பு கொடுக்க வேண்டும்... மலம் நன்றாக கழியும் இது போல் 40 நாட்கள் தொடர்ந்து செய்யவும்... பித்தப்பை கற்கள் உருவாகாமல் இருக்க மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் சித்தர்கள் கைகண்ட மருத்துவ முறைகள் என்ற  பழைய நூலில் தேடி இம்முறையை எடுத்தேன் - அகத்தியம் 9841168598

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...

இதயத்தின் உஷ்ணத்தை தணிக்கும் உணவுகள்

சாம்பல் பூசணியில் - வங்கசத்து நிறைந்து இருக்கிறது மோர் பழைய சாதம் நீராகாரம் இவைகளில் வெள்ளி சத்து நிறைந்து இருக்கிறது செம்பருத்தி பூவில் தங்க சத்து உள்ளது கேழ்வரகு கஞ்சியில் தாம்பிர சத்துள்ளது தங்கம், தாம்பரமும் இருதயத்தையும் மூளையும் பலப்படுத்தும் மேலே கூறிய அனைத்து உணவுகள் யாவும் இருதயத்தின் உஷ்ணத்தை மாற்றி நோயை போக்கும் - அகத்தியம் 9841168598

ஆனைக்கு ஒரு காலம் வந்தால்... பூனைக்கு ஒரு காலம் வரும்...

இது ஒரு பழமொழி என்று நாம் அனைவரும் அறிவோம்... உனக்கு ஒரு காலம் வந்தால் எனக்கு ஒரு காலம் வரும் அப்போ உன்னை பார்த்து கொள்கிறேன் என்று கோபத்தில் நாம் சபதம் செய்து இருப்போம் ஆனால் இது ஒரு மருத்துவக் குறிப்பு என்று உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் இதனின் ௨ட்பொருள். ஆனையைப் பிரித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு நாட்டு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை உருக்கி நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்புச் சத்து ௨டலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது... பூனைக்கு என்பதை, பூ + நெய் என்று பிரித்துப் பார்க்கும் போது, பூவிலிருருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யைச் சுருக்கி தேனைக் ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் செரிக்கக் கூடிய ௨ணவு மற்றும் மருத்துவ...

கண் சிவப்பு / கண் புகைச்சல் / எரிச்சல் / அரிப்பு குணமாக

கல் உப்பை தண்ணீரில் போட்டு கரைத்து அந்த நீரில் கண்களை கழுவினால் நல்ல பலனை தரும் புளியாரை + வெங்காயம் + சீரகம் இவற்றை சிதைத்து ஒரு துணியில் கட்டி அதை கண்ணில் பிழியவும் - 5 சொட்டுக்கள்... புளியமரத்தின் இலைகளை தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து பின் ஆற வைத்து அந்த தண்ணீரில் கண்களை கழுவினால் கண்கள் அரிப்பு குணமாகும் - அகத்தியம் 9841168598

உடல் மற்றும் தலையில் ஏற்படும் அனைத்து அரிப்பும் குணமாக

கடைகளில் கிடைக்கும் படிகாரம் என்ற‌ பெரிய கல்லாக வாங்கி கொண்டு அதை தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் குளிக்க வேண்டும்... பச்சைபயிறு - 10கி ஆவாரம் பூ - 10கி இவை இரண்டையும் நீர்விட்டு அரைத்து தலை / உடலில் பூசி அரைமணிநேரம் கழித்து மேலே கூறிய படிகார வெந்நீரில் குளிக்க வேண்டும்.... சோப் பயன்படுத்தி குளிக்க கூடாது - அகத்தியம் 9841168598

இடுப்பு வலி குணமாக

கசகசா பார்லி பச்சரிசி ஜவ்வரிசி இவை அனைத்தும் 15 கிராம் அளவு எடுத்து 100மிலி தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஒவ்வொன்றாக எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சவும்... எல்லாம் நன்றாக வெந்ததும் கஞ்சி பதம் வரும் போது இறக்கி விடவும்... இந்த கஞ்சியை வாரம் இருமுறை குடித்து வர இடுப்பு வலி, கை கால் வலி, முதுகு வலியை குணப்படுத்தி உடலுக்கு நல்ல பலத்தை தரும் கஞ்சி பானம் - அகத்தியம் 9841168598

வியர்க்குரு / வேனிற் கட்டி குணமாக

சீரகம் - 5கி தேங்காய் பால் - 100மிலி சீரகத்தை தேங்காய் பால் விட்டு நன்றாக அரைத்து உடல் முழுவதும் தேய்த்து 2  மணி நேரத்திற்கு ஊற வைத்து பின் குளிக்க வியர்குரு / வேனிற்கட்டிகள் குணமாகும்... - அகத்தியம் 9841168598

காது வலி குணமாக

துளசி சாறு + தேன் + மூன்று கல் உப்பு சேர்த்து கலக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டியளவு குடிக்க காது வலி குணமாகும் - அகத்தியம் 9841168598

சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் முறை

இரண்டுமே உட்கார்ந்தே கழிக்க வேண்டும் சிறுநீர் கழிக்கும் போது இடது கை வலது இடுப்பை பிடித்தபடியும் மலம் கழிக்கும் போது வலது கை இடது இடுப்பை பிடித்தபடியும் இருத்தல் அவசியம் எந்த நாளுமே காலையில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து மலம் கழித்தல் கூடாது மாலையில் வடக்கு திசை நோக்கி அமர்த்து மலம் கழித்தல் கூடாது. என்பது விதி முறை என்று சாஸ்திரம் கூறுகிறது மலம் மற்றும் சிறுநீர் கழித்த பின் வாய் கொப்பளிப்பது அவசியம் மலம் கழித்த பின் குளிப்பது மிக முக்கியமானது.. . மலம் கழிக்கும் போது தலையை மூடிக் கொண்டு, தண்ணீர் இடது பக்கம் இருக்க வேண்டும் மலம் கழித்த பின் அது தண்ணீரில் மிதந்தால் உணவை நீங்கள் நன்றாக மென்று சாப்பிட்டு உடலும் சத்தாக மாற்றியுள்ளது என்று அர்த்தம்... மலம் மிதக்காவிடில் சத்து உடலில் சேராமல் மலத்துடன் செல்கிறதுஎன்று அர்த்தம் இது போல பல உள்ளன நம் முன்னோர்கள் வகுத்த முறைகளில் நமது பாரம்பரிய முறையில் குத்த வைத்து உக்கார்ந்து மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது மலமும் சிறுநீரும் முழுமையாக வெளியாகும் Western Toilet பயன்படுத்தி வருவதால் மலம் மற்றும் சிறுநீர் முழுவதுமாக வ...

மாதவிடாய் சுழற்சி சீராக

கருஞ்சீரகம் – 50 கிராம் வெந்தயம் – 50 கிராம் முருங்கை இலை (காய்ந்தது) – 50 கிராம் வேப்பம்பூ – 50 கிராம் சுக்கு – 25 கிராம் மிளகு – 25 கிராம் திப்பிலி – 25 கிராம் ஏலக்காய் – 25 கிராம் தேன் – ¾ கிலோ நெய் – 50 கிராம்       முதலில் தேன் தவிர மற்ற சரக்குகளை ஒன்றாக்கி, தூள் செய்து கொள்ளவும். பின்னர் தேனை பாத்திரத்திலிட்டு சூடு செய்து நுரை நீக்கவும். பின் பொடித்து வைத்துள்ள தூளை சிறிதாகக் கொட்டி நன்கு கிண்டி இறக்கவும்.  சூடு ஆறிய பிறகு நெய் உருக்கி கலந்து லேகியத்தைப் பத்திரப்படுத்தவும் . இதில் காலை – மாலை இரண்டு கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வர, உடல் பருமன், தொப்பை தீரும். பெண்களுக்கு மாதவிடாய் தடையேற்பட்டு உண்டாகும் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும். - அகத்தியம் 9841168598

உப்பு சத்து குறைய

நாட்டு சோளத்தில் உள்ள சிகப்பு முடி போல நார் இருக்கும் அதை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து 200மிலி தண்ணீரில் இட்டு சிறு தீயில் எரித்து கொதிக்க வைத்து 100மிலி ஆக வற்றியதும் வடிகட்டி குடிக்க வேண்டும்... இதே போல் தர்பை புல்லையும் கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடலில் உள்ள உப்பு சத்து குறையும்... - அகத்தியம்

ருது ஆகாத பெண்கள் வயதிற்கு வர

செம்பருத்தி இலை செம்பருத்தி பூ இதழ்கள் தேங்காய்  இவைகளை சம அளவு எடுத்து அரைத்து எலுமிச்சை அளவு காலை மாலை வெறும் வயிற்றில் 7 நாட்களுக்கு கொடுக்கவும்... ருது ஆகவில்லை என்றால் மீண்டும் ஒரு வாரம் கழித்து 7 நாட்களுக்கு தரவும் - அகத்தியம்

உடல் எடை குறைய

200கி கொள்ளு எடுத்து பொன் நிறமாக வறுத்து 400கி சக்கரை கலந்து அரைத்து மாவாக்கி சலித்து எடுத்து கொள்ளவும்... இதில் வேளைக்கு ஒரு தேக்கரண்டியளவு காலை மற்றும் இரவு உணவிற்கு முன் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்... 2. உணவில் உப்பு - காரம் குறைக்க வேண்டும்.. . 3. 100மிலி வெந்நீரில் 1 தேக்கரண்டியளவு இலவங்க பொடி போட்டு இரண்டு தேக்கரண்டியளவு சுத்தமான தேன் சேர்த்து தினமும் காலை இரவு வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் 4. நாட்டு பொன்னாங்கண்ணி கீரையை துவரம் பருப்பு, மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மூன்று மாதங்களில் எடை குறையும்... 5. ஆவாரம் பூ, ரோஜா பூ, வெண்தாமரை பூ , கருவேலம் பிசின் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து சலித்து வைத்துக் கொண்டு இதில் அரைத் தேக்கரண்டியளவு காலை மாலை என இரண்டு வேளையும் வெந்நீரில் கலந்து குடித்து வர உடல் எடை குறையும் -  அகத்தியம் 9841168598