நாகப்பட்டினத்தில் இருந்து வேளாங்கண்ணி போகும் வழியில் இருக்கிறது பரவை.
காலை நேரத்தில் வெளியூர்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் எல்லாப் பேருந்துகளும் பரவை யில் நின்று செல்கின்றன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வருகிறார்கள். ஊருக்குள் நுழைந்தால், தெருவுக்கு ஒரு வீட்டிலாவது
'காமாலை மருந்து கொடுக்கப்படும்’ என்று போர்டு இருக்கிறது.
குறைந்தது 10 நோயாளிகளாவது மருந்து சாப்பிட்டுக்கொண்டு நிற்கிறார்கள்.
காலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை மாயகிருஷ்ணனின் வீடு, நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.
வந்தவர்களை அழைத்து முதலில் கையை நீட்டச் சொல்லி விரலைப் பிடித்து அழுத்திப் பார்க்கிறார்.
''ஒண்ணுக்கு போகும்போது எரிச்சல் ஆக இருக்கிறதா? மஞ்ச ளாகப் போகிறதா?'' என்று ஓரிரு கேள்விகளைக் கேட்கிறார்.
காமாலையின் ரகத்தை முடிவு செய்வது இந்தக் கேள்விகள்தானாம்.
Comments
Post a Comment