கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஸ்ப்ரே செய்யலாம்.
பசுஞ் சாணம், நொச்சி, வேம்பு, பச்சை கற்பூரம் இவற்றை அரைத்து வரட்டியாகத் தட்டி உலர்த்தி, ஊதுவத்தி போல மாலை நேரங்களில் எரிய விடலாம்.
மாலைவேளையில் உலர் பசுஞ் சாணத்தில் நெய் விட்டு விளக்கு ஏற்றலாம். பசு சாணத்திலிருந்து வெளிப்படும் ஆக்சிஜன் வாயு உடலுக்கும் நல்லது.
வீட்டில் நொச்சி, வேப்பிலை, காட்டு துளசி, பேய் துளசி, அசோலா (கம்மல் பாசி), ரோஸ்மெரி, லெமன் க்ராஸ், கற்பூரவல்லி, கற்றாழை போன்ற மூலிகைச் செடிகளை வளர்த்து வருவதும் நல்லது. இதனால், கொசுக்கள் வீட்டுக்குள் வருவது குறையும்.
வேப்பிலை எண்ணெய், யூக்லிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றை தெளிக்கலாம்.
Comments
Post a Comment