Skip to main content

Posts

Showing posts from February, 2021

தீபாக்கினி சூரணம்

                       சீரகம் திப்பிலி மிளகு இந்துப்பு இவைகள் வகைக்கு ஒருபலம் (35 கிராம்) பெருங்காயம் கருவேப்பிலை வகைக்கு அரை பலம் (17.500 கிராம்) பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும், இந்துப்பை தவிர மற்ற சரக்குகளை பொன்வறுவலாக வறுத்து ,பின்னர் அனைத்து சரக்குகளையும் இடித்து துணியில் சலித்து  வைத்துக்கொள்ளவும். ஒரு விராகன் எடை( 4 கிராம்)  சூரணத்தை முதலில் சாப்பிடும் சாப்பாட்டுடன் போட்டு காய்ச்சிய பசுநெய்விட்டு பிசைந்து இருவேளை சாப்பிட்டு வரவும். வயிற்றுவலி வயிற்று எரிச்சல் உஷ்ணவாயு பேதி அஜீரணம் ஆகிய நோய்கள் நீங்கும். இச்சா பத்தியம்

உடல் வீக்கம் / உடல் பருமன் குறைய

சிறுகீரை - 2 கைப்பிடி சீரகம் - 5 கிராம் பார்லி - ஒரு கைப்பிடி மஞ்சள் - மூன்று சிட்டிகை * செய்முறை * சிறுகீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து ஆய்ந்து இரண்டு கைப்பிடி எடுத்து ஒரு பாத்திரத்தில் 300மிலி தண்ணீரில் ஊற்றி அதில் சிறுகீரை பார்லி சீரகம் சேர்த்து சிறு தீயில் நன்கு கொதிக்க வைக்கவும்... நன்றாக கொதித்து 100 மிலி ஆனதும் அதில் மஞ்சள் தூள் சேர்த்து இறக்கி வடிகட்டி குடிக்கவும்... * பருகும் நேரம் * இந்த கஷாயத்தை அதிகாலை வெறும் வயிற்றில் குடிக்க நல்ல பலனை விரைவில் பெறலாம்.... * பலன்கள் * இந்த கஷாயத்தை உடல் வீக்கம் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு அருமருந்தாக செயல்படும் - *அகத்தியம்*    *9841168598*

குழந்தைகளுக்கு வரும் பேதி மாந்தம் குணமாவதற்கு

  இது சிறு குழந்தைகளுக்கு அசீரணத்தால் வரக்கூடியது...  *தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கணவனோடு உடலுறவு வைத்ததற்கு பிறகு குழந்தைக்கு பாலூட்டினால் அந்த தாய்ப்பால் காமப்பால் ஆகி குழந்தைக்கு தோஷத்தை உண்டாக்கி குழந்தைகளுக்கு வயிற்று உப்புசம் ஆகி பல நிறங்களில் பேதி உணாடாகும்...  நின்ற இடத்திலேயே பேதி பீய்ச்சி அடிக்கும்‌... இந்த நோய் எந்த ஒரு மருந்துக்கும் கட்டுப்படாது / குணமாகாது....  *இதனால் தான் ஒரு வருட காலம் பத்திய உணவோடு கணவன் மனைவியை அக்காலத்தில் பிரித்து வைத்தார்கள்* *இதற்கு தீர்வு* வசம்பை சுட்டு கறுக்கி மற்றும் ஓமத்தை கறுக வறுத்து பொடி செய்து சம அளவு எடுத்து அரைகிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து நாள் ஒன்றுக்கு மூன்று நேரம் தரவும் இவ்வாறு தர இரண்டே நாட்களில் குணமாகும்... - *அகத்தியம்*    *9841168598*

சிறுநீரில் புரதம் போவதை தடுக்க / Cure - Protein Leakage In Urine

புடலங்காய் சாறு - 100மிலி ஏலக்காய் - 2 சீரகம் தூள் - கால் தேக்கரண்டியளவு கருப்பட்டி - ஒரு தேக்கரண்டியளவு 100 மிலி புடலங்காய் சாறில் பொடித்த சீரகம் ஏலக்காய் கருப்பட்டி சேர்த்து நன்கு கலந்து குடிக்க கொடுக்கவும்.... இது போல் தொடர்ந்து நாளைக்கு ஒரு நேரம் பருகி வந்தால் சிறுநீரில் புரதம் போவதை குணமாக்கும்.... நன்றி - *அகத்தியம்*    *9841168598*

முடக்கு வாதம் குணமாக கஷாயம் - Rheumatoid Arthritis Cure

  *பவளமல்லி அல்லது பாரிஜாதம் இலை* 10 *மிளகு*  - ஒரு தேக்கரண்டியளவு  *சீரகம்*  ஒரு தேக்கரண்டியளவு *இஞ்சி* ஆள்காட்டி விரல் அளவு - *தோல் சீவி சிதைத்து விடவும்* *மஞ்சள்* தூள் சிறிது  இவை அனைத்தையும் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து சிறு தீயில் கொதிக்க வைத்து நன்றாக சுண்ட காய்ச்சி 200மிலி ஆன பிறகு வடிகட்டி காலை மாலை என 100 மிலி வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வர வலி இல்லா நல்ல மாற்றங்கள் உடலில் காண முடியும்  *இது அனுபவ உண்மை* நன்றி *அகத்தியம்*  *9841168598*

தலைசுற்றல் குணமாக

இஞ்சி தோல் சீவி சாறு எடுத்து அதை சிறிது நேரம் வைத்து இஞ்சி தெளிவு சாறு மட்டும் 50மிலி எடுத்து கொள்ளவும் அதோடு எழுமிச்சை பழ சாறு சம அளவில் கலந்து காலையில் உணவிற்கு பின் மூன்று நாட்கள் குடிக்கவும்