Skip to main content

Posts

Showing posts from August, 2016

பரங்கிக்காயின் மருத்துவ குணங்கள்: - Medicinal benefits of Pumpkin

பரங்கிக்காயில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் “ஈ”, வைட்டமின் “பி” மற்றும் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், நியாஸின், ஃபோலிக் அமிலம், கொழுப்பற்ற அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளன. பரங்கிக்காய் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது. நீர்ப்பை கோளாறுகள், வயிற்று கோளாறுகள், குடல் புழுக்கள், சிறுநீர் கோளாறுகள், வாத நோய், தீக்காயங்கள் மற்றும் சிறுநீரக வீக்கம், சிறுநீர் எரிச்சல் ஆகிய கோளாறுகளை குறைக்கும். இவை உடலுக்கு ஊட்டம் மற்றும் சக்தியை அளிக்கிறது. உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

நாட்டுப் பூண்டின் நன்மைகள் - Goodness of Garlic

தினசரி சமையலில் பூண்டை அளவாக பயன்படுத்தினாலே போதும் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும் 1)நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது, 2)இரத்தத்தில் வெள்ளை அணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது, 3)உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது 4)இரத்தத்தை தூய்மை படுத்துகிறது, 5)மாரடைப்பு மற்றும் இதய நோயின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது, 6)உடல் பருமன் குறைக்க உறுத்துணை புரிகிறது( HDL = LDL ), 7)உடலில் நல்ல கொலாஸ்டிரல் HDL உருவாக பூண்டின் பங்கு மகத்தானது. 8)இரத்த குழாய்களில் LDL கொழுப்பு படிந்து அடைக்காமல் தடுக்கும் 9)சிறுநீர் தாராளமாக பிரிய வகைச்செய்கிறது, 10)வாயுத்தொல்லையை ஏற்படாமல் தடுக்கிறது, 11)அஜீரணக் கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது, 12)புளிப்பு சேருவதால் உண்டாகும் வயிற்று எரிச்சலைபோக்குகிறது, 13)வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. 14)நன்கு பசியைத் தூண்டும். 15)குடலில் உள்ள புழுக்களை அகற்றுகிறது 16)மலச்சிக்கலைப் போக்கி மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும். 17)வியர்வையை பெருக்கி கழிவுகளி வெளியேற்றுகிறது, 18)பித்தம் ஏற்படாம...

காது வலி நீங்க - Cure for Ear Pain

காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான ஒன்று. இந்த காது வலி பெரும்பாலும் சளி பிடிப்பதால் வரும்.  மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம். அப்படி காதுவலி வந்தால் உடனே காதுக்குள் எதையாவது போட்டு நுழைக்க கூடாது.  இதனால் காதுக்குள் கிருமித்தொற்று தான் ஏற்படுமே தவிர சரியாகாது. மேலும் இந்த காதுவலி இரவிலேயே வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் நேரத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய வீட்டு மருத்துவம் நமக்கு கைக்கொடுக்கும்.  காது வலி வந்தால் தேங்காய் எண்ணெயை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு மிதமான சூட்டில் காதில் விட்டால் காதில் இருக்கும் புண் ஆறி வலி குறையும்.  தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரைக்குடித்தால் காது வலி குறையும். தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி சாறு பிழிந்து அதில் சில துளிகளை காதில் விட்டால் காது வலி காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும். கொஞ்சம் நல் லெண்ணெயில் ஒரு கிராம்பை போட்டு சூடு செய்து பின் அந்த எணணெயை வலி உள்ள காதில் விட்டால் விரைவில் வலி கு றை...

அக்குள் கருமைக்கு தீர்வு - Remedy for Darkness in Armpits

தற்கால ஃபேஷன் ஆடைகள் எல்லாம் ஸ்லீவ்லெஸ் ஆகவே வருகின்றன. அக்குள் கருமையாக இருப்பவர்களால் இத்தகைய ஆடைகளை அணிய முடிவதில்லை. இவ்வுலகில் இயற்கை வைத்தியத்திற்கு இருக்கும் சக்தி வேறு எந்த ஒரு பொருளுக்கும் கிடையாது. இதோ உங்களுக்காக சில சூப்பர் டிப்ஸ்! 01. எலுமிச்சை அக்குளில் உள்ள கருமையைப் போக்குவதற்கு எலுமிச்சை ஒரு சிறந்த பொருள். ஏனெனில் அதில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், எலுமிச்சையைக் கொண்டு தினமும் அக்குளில் தேய்த்து, ஊற வைத்து கழுவினால், அக்குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, அக்குள் வெள்ளையாவதோடு, அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். 02. மஞ்சள், தயிர் மஞ்சள் மற்றும் தயிரில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே சருமத்தில் உள்ள கருமையைப் போக்க, மஞ்சளை தயிரில் கலந்து, அக்குளில் தேய்த்து ஊற வைத்து கழுவினால், அக்குள் கருமையை நிச்சயம் போக்கலாம். 03. தயிர், எலுமிச்சை தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடை...

தொண்டை பிரச்சனைகளும் அதற்கு தீர்வுகளும் - Throat Problems and remedies

குரல் மாற்றத்தை சரிசெய்ய: கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிகொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை முழுங்கி விடவும். தொண்டைப் புண் ஆற: வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டை புண் ஆறும். அல்லது கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் ஆறும். தொண்டை நோய்: மாதுளம் பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேனும் கலந்து சாப்பிட தொண்டை நோய் அகலும். தொண்டை கரகரப்பு குணமாக: சுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். அல்லது பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும். தொண்டைக் கட்டு குணமாக: மாவிலை, பச்சை இலையை நெருப்பில் போட்டு புகையை வாய் திறந்து பிடித்தால் தொண்டைக்கட்டு குணமாகும். அல்லது மாவிலையை தேன் விட்டு வதக்கி நீரில் கலந்து அருந்த தொண்டைக்கட்டு, குரல் கமறல் தீரும்.  தொண்டை சதை வளர்ச்சி குறைய: வில்வ இலை சாறு, துளசி இலை சாறு 100 வீதம் எடுத்து நல்லெண்ணை 500 மில்லியில் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி ப...

செரிமானக் கோளாறு - Indigestion

செரிமானக் கோளாறை போக்கும் ஓமம் ஓமம் (ajwain) உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.  இந்த செடியின் அனைத்து பாகங்களும் யுனானி, ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியமானதாக பெரிதும் பயன்படுகிறது.. ஓமத்தின் விதைகளை மசாலா பொருளாக சமைப்பதற்குபயன் படுத்துகின்றனர்.  மேலும் பிஸ்கட், சாஸ், ரசங்கள், குளிர்பானங்கள், ஊறுகாய் போன்றவற்றை தயார் செய்யும் போது இதனை பயன்படுத்துகின்றனர். இதன் விதைகளைக் கொண்டு தேநீர் செய்து குடிக்கின்றனர்.  ஓமத்தால் ஏற்படும் உடல் நல நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.  வாயு வெளியேற்றம்:  வாயு பிரச்சனையிலிருந்து விடுபட 125 கிராம் தயிர், 2 கிராம் ஓமம், 1/2 கிராம் கருப்பு உப்பு, சேர்த்து சாப்பிட்டால் வாயு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் எளிதில் நீக்கி விடும் தன்மை கொண்டது. இதை மதிய உணவிற்கு பிறகு 10 முதல் 15 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விக்கல், குமட்டல், உளறுதல் மற்றும் அஜீரணம் ஆகிய பிரச்சனைகளை தீர்க்கும் செரிமானக் கோளாறு:  சரியான முறையில் செரிமானம் ஆகாததால் செரிமானக்கோளாறு ஏற்பட்டு குடலில் புண் ...

புற்று நோய்க்கு அருமையான தீர்வு: - Cure for Cancer

புற்று நோய்க்கு நம் நாட்டு சித்த மருத்துவத்தில் மருந்துகள் உண்டு... இம் மருந்துகள் புற்று நோயை முற்றிலும் குணமாக்கும்... தேவையானவை: துளசி இலை - 21 மிளகு - 3 இவற்றை மோர்விட்டு அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்... வில்வ இலை - 5 மிளகு - 3 இவை இரண்டையும் நாட்டு பசும்பால் விட்டு அரைத்து ஒரு டம்ளர் நாட்டு பசும் பாலில் கலக்கி காய்ச்சி குடிக்கவும் அருகம்புல் ஒருகைபிடி மிளகு - 5 இவை இரண்டையும் நாட்டு பசும்பால் விட்டு அரைத்து ஒரு டம்ளர் நாட்டு பசும் பாலில் கலக்கி காய்ச்சி வடிகட்டி குடிக்கவும் இந்த மருந்துகளில் குணமாகவிட்டாலும்... உபாதைகள் இல்லாமல் பல வருடங்களுக்கு வலி அல்லது தூக்க மாத்திரைகள் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.... (மேற்கண்ட மருந்துகள் குடித்து 30 நிமிடங்கள் கழித்து தான் உணவோ, டீ, காபி உண்ணலாம்) கண்டிப்பாக புகைபிடித்தல், மது அறவே கூடாது....

மஞ்ச காமாலைக்கு மருந்து பரவையில்: - Jaundice

நாகப்பட்டினத்தில் இருந்து வேளாங்கண்ணி போகும் வழியில் இருக்கிறது பரவை. காலை நேரத்தில் வெளியூர்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் எல்லாப் பேருந்துகளும் பரவை யில் நின்று செல்கின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வருகிறார்கள். ஊருக்குள் நுழைந்தால், தெருவுக்கு ஒரு வீட்டிலாவது  'காமாலை மருந்து கொடுக்கப்படும்’ என்று போர்டு இருக்கிறது.  குறைந்தது 10 நோயாளிகளாவது மருந்து சாப்பிட்டுக்கொண்டு நிற்கிறார்கள். காலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை மாயகிருஷ்ணனின் வீடு, நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. வந்தவர்களை அழைத்து முதலில் கையை நீட்டச் சொல்லி விரலைப் பிடித்து அழுத்திப் பார்க்கிறார். ''ஒண்ணுக்கு போகும்போது எரிச்சல் ஆக இருக்கிறதா? மஞ்ச ளாகப் போகிறதா?'' என்று ஓரிரு கேள்விகளைக் கேட்கிறார். காமாலையின் ரகத்தை முடிவு செய்வது இந்தக் கேள்விகள்தானாம்.

கொசுவை விரட்ட எளிய வழிகள்:

கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஸ்ப்ரே செய்யலாம். பசுஞ் சாணம், நொச்சி, வேம்பு, பச்சை கற்பூரம் இவற்றை அரைத்து வரட்டியாகத் தட்டி உலர்த்தி, ஊதுவத்தி போல மாலை நேரங்களில் எரிய விடலாம். மாலைவேளையில் உலர் பசுஞ் சாணத்தில் நெய் விட்டு விளக்கு ஏற்றலாம். பசு சாணத்திலிருந்து வெளிப்படும் ஆக்சிஜன் வாயு உடலுக்கும் நல்லது. வீட்டில் நொச்சி, வேப்பிலை, காட்டு துளசி, பேய் துளசி, அசோலா (கம்மல் பாசி), ரோஸ்மெரி, லெமன் க்ராஸ், கற்பூரவல்லி, கற்றாழை போன்ற மூலிகைச் செடிகளை வளர்த்து வருவதும் நல்லது. இதனால், கொசுக்கள் வீட்டுக்குள் வருவது குறையும். வேப்பிலை எண்ணெய், யூக்லிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றை தெளிக்கலாம்.

அத்திக்காயின் அற்புதங்கள்

அத்திக்காய் உடம்பு சூட்டுக்கு மிகவும் நல்லது. இதனையும், பருப்பையும் சேர்த்து சமைத்து சாப்பிடுவது நலம். முற்றின காயாக இருந்தால் மலத்தைப் போக்கும். ஆனால் பிஞ்சுக் காயாக இருந்தால் மலத்தை கட்டி விடும். இதனால் மேகம், வாதம், உடல் வெப்பம், புண் ஆகியவை போகும். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. சில நேரங்களில் புதினாக் கீரையை இதனுடன் சேர்த்து சமைக்கும் வழக்கமும் இருக்கிறது. இந்தக் காயின் சுபாவம் குளிர்ச்சி. அத்திப் பிஞ்சினால் மூல வாயு, மூலக் கிராணி, ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு, ஆகிய அனைத்து விதமான பிரச்சினைகளும் குணமாகும். மேலும் இது பத்தியத்திற்கு ஏற்றது ஆகும். பத்தே நாளில் வீரியம் தரும் சுவரொட்டிகளுக்கு மத்தியில், இப்பழம் உண்மையிலேயே ஆண்மையைத் தட்டியெழுப்புகிறது.  மூலநோய்க்கும், மூளைச் சோர்வுக்கும் இது அருமருந்து.  முதுமையிலும் வேகமாக நடந்த காந்திஜி இளமையில் சாப்பிட்டது இதைத்தான். *சீமை அத்திப்பழம்* மூட்டு வலியைப் போக்கி ரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது.  தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும்....

தொண்டை வலி - Throat Pain

சித்த மருந்துக் கடையில், தாளிசாதி வடகம் என்ற மருந்து கிடைக்கும். இதை வாயில் போட்டு, உமிழ்நீருடன் மென்று, தொண்டையில் படும்படி விழுங்கினால், தொண்டைப் பாதிப்பு குறையும். மூக்கு எரிச்சல், மூக்கில் நீர் வடிதல் மற்றும் மூக்கடைப்பு இருப்பவர்கள், சிறிது ஓமம், சிறு துண்டு பச்சைக் கற்பூரம், ஒரு சிட்டிகை சுத்தமான மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் நசுக்கி, ஒரு தூய வெள்ளைத் துணியில் முடிந்து, அவ்வப்போது மூக்கில்வைத்து முகர்ந்துகொண்டே இருந்தால், மேலே சொன்ன மூக்குப் பிரச்னைகள் அண்டாது. சுவாசப் பாதையில் நோய்க் கிருமிகள் தொற்றாமல், கவசம் போல காக்கும். (Inhaler பயன்பாட்டை நிறுத்தி இதை ஒரு முறை பயன்படுத்தி பார்க்கலாமே.... No Side Effects...)

வாகை மரத்தின் பயன்கள்:

வாகை மர‌த்‌தி‌ன் ‌பி‌சி‌ன், மர‌ப் ப‌ட்டை, பூ, ‌விதை, இலை என அனை‌த்‌தி‌ற்கு‌ம் மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன. * வாகை‌யி‌ல் புரத‌ச் ச‌த்து, கா‌ல்‌சிய‌ம், பா‌ஸ்பர‌ஸ், சோடிய‌ம், பொ‌ட்டா‌சிய‌ம், மெ‌‌க்‌னீ‌சிய‌ம் ஆ‌கிய ச‌த்து‌க்க‌ள் ‌நிறை‌ந்து காண‌ப்படு‌கி‌ன்றன. * வாகை மர‌ப்ப‌ட்டையை ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி பொடி செ‌ய்து பா‌லி‌ல் கல‌ந்து குடி‌த்து வர ப‌சியை உ‌ண்டா‌க்கு‌ம். வா‌ய்‌ப்பு‌ண் குணமாகு‌ம். * வாகை‌ப் பூவை சேக‌ரி‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி பா‌தியளவாக வ‌ற்‌றியது‌ம் வடிக‌ட்டி குடி‌த்து வர வாத நோ‌ய்களை குணமா‌க்கு‌ம். ‌விஷ‌ங்களை மு‌றி‌க்கு‌ம். * வாகை இலையை அரை‌த்து க‌ண் இமைக‌ளி‌ன் ‌மீது வை‌த்து க‌ட்டி வர க‌ண் ‌சி‌வ‌ப்பு க‌ண் எ‌ரி‌ச்ச‌ல் குணமாகு‌ம். * வாகை‌ப் ப‌ட்டையை பொடி செ‌ய்து அரை ‌கிரா‌ம் முத‌ல் ஒரு ‌கிரா‌ம் அளவு வரை வெ‌‌ண்ணெ‌யி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர உ‌ள்மூல‌ம் ர‌த்த மூல‌ம் குணமாகு‌ம். * வாகை மர‌ப்ப‌ட்டையை தூளா‌க்‌கி மோ‌ரி‌ல் கல‌ந்து குடி‌‌த்து வர பெரு‌ங்க‌ழி‌ச்ச‌ல் குணமாகு‌ம். * வாகை மர‌த்‌தி‌ன் ‌விதை‌யி‌ல் இரு‌ந்து பெ‌ற‌ப்படு‌கி‌ன்ற எ‌ண்ணெ‌ய், கு‌ஷ்ட நோ‌‌ய் பு...

வீட்டில் லட்சுமி வாசம் செய்ய:

புதுமனை கட்டி, காம்பவுண்டு சுவர் எடுத்து, வாசல் பக்கத்து சுவற்றில் சலவைக் கல்லில், "லட்சுமி நிவாஸ்' என்று எழுதிய பெயர் பலகை பதிக்கப்பட்டு விட்டது.  அதாவது, அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று அதற்கு அர்த்தம். ஆனால், மகாலட்சுமி தான் வசிக்கும் இடங்களையும், வசிக்காத இடங்களையும் பற்றி ருக்மணியிடம் சொன்னதாக ஒரு கதை உள்ளது. அந்த கதையை நாமும் தெரிந்து கொள்வோமே! லட்சுமிதேவி கூறுகிறாள்: அழகும், தைரியமும், வேலைத் திறமையுள்ளோர், வேலை செய்து கொண்டிருப்போர், கோபமில்லாதவர், தெய்வ பக்தி உள்ளோர், நன்றி மறவாதோர், புலன்களை அடக்கியோர், சத்வ குணமுள்ளோரிடமும் நான் வசிக்கிறேன். பயனை கருதாமல், தர்மத்தை அனுஷ்டிப்போர், தர்மம் தெரிந்து, அதன்படி நடப்போர், காலத்தை வீணாக்காதோர், தியானம், தத்துவ ஞானத்தை விரும்புவோர் மற்றும் பசுக்கள், வேத பிராமணர்களிடம், அன்பும், ஆதரவுமாக உள்ளவர்களிடமும் நான் வசிக்கிறேன்.  பக்தியுள்ளவர்கள் வீடுகளிலும், வீட்டையும், வீட்டிலுள்ள பாத்திரங்களையும் சுத்தமாக வைத்து, பசுக்களைப் போஷித்து, தான்யங்களை சிதறாமல் வைத்துக் கொள்ளும் வீடுகளிலும் நான் வசிக்கிறேன். ...

எது? உலக அதிசயம்???

எது? உலக அதிசயம். நான் தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தேன். பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா. ஏன்? இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். நெல்லையப்பர் கோவிலில் கல் தூணை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம். திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான Positions ல இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம். ...

நந்தியாவட்டப்பூ செடியின் பயன்கள்:

நந்தியாவட்டப்பூ பெருஞ்செடி வகுப்பைச் சேர்ந்தது. பூக்கள் வெண்மையாய் ஒற்றை அல்லது இரட்டையாயிருக்கும். ஒற்றை அடுக்கு பூவே சிறந்தது. இது பாலுள்ள செடியாகும். இதன் பூ, வேர், பால் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.  இதனை நந்திபத்திரி, நத்தியாவர்த்தம், பட்டிடை, வலம்புரி, சுயோதனன் மாலை என பல பெயர்களில் அழைக்கின்றனர் நந்தியாவட்டப்பூ சித்தமருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் அதிகம் பயன் படுகிறது. கண் நோய்கள் நீங்க உடலின் முக்கிய உறுப்புகளில் கண்கள் முதலிடம் வகிக்கின்றது.  ஐம்புலன்களில் ஒன்றான கண்களை பேணிக் காப்பது மிகவும் அவசியம். கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. அனைத்து வேலைகளும் கணினி மூலம் செய்யப்படுவதால் கண்களுக்கு அதிக பளு உண்டாகிறது. மேலும் இரவை பகலாக்கும் மின்சார விளக்குகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல வகைகளில் கண்களை பாதிக்கும் மீடியாக்கள் தற்போது பரவி வருகின்றன. இதனாலும் இரவு உறக்கமின்றி வேலை செய்வதாலும் கண் நரம்புகள் சூடாகிவிடுகின்றன.  இதுபோல் ஈரல் பாதிப் படைந்தாலும் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இன்று பலருக்கு 40 வயதிலேயே வெள்ளெழுத்து என்கின...

முசுமுசுக்கையின் பயன்கள்

முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். இது நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.  ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும். முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும். கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது. அமைதியின்மை போக்கும் இக்கீரையை நன்றாக ஆய...

கீழாநெல்லியின் சிறப்பு:

நீர் நிறைந்த சதுப்பு நிலங்களிலும், வயல் மற்றும் கால்வாய் ஓரங்களில் வளரும் இக்கீரை எளிதில் கிடைக்கும். கீழாநெல்லி, கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இக்கீரையில் கிட்டத்தட்ட அனைத்துச் சுவைகளும் அடங்கியுள்ளன. புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளும் உண்டு. இக்கீரை குளிர்ச்சித் தன்மை உடையது. இக்கீரையின் தளிர்களை அரைலிட்டர் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் சீதபேதி உடனே மாறும். இரத்த சோகையால் உடல் வெளுத்துக் காணப்படுபவர், மேகநோயால் அவதிப்படுபவர் இதை நன்றாக அரைத்து பசுவின் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும். மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த இக்கீரையைத் தவிர வேறு மருந்து கிடையாது. கீழாநெல்லிக்காய்களே ஆங்கில மருத்துவத்திலும் மஞ்சள் காமாலைக்குப் பயன்படுத்தப் படுகிறது. கீழாநெல்லி, தும்பை இலை, கரிசலாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, காலை, மாலை சுமார் பத்து நாட்கள் உண்டு வந்தால் காமாலை நோய் பூரணமாகக் குணமாகும். பெரியவர்கள் நெல்லிக்காய் அளவும், சிறியவர்கள் சுண...

மூலிகை பொடிகளும் அதன் பயன்களும் - Herbal powder & Uses

அருகம்புல் பொடி: தினமும் அதிகாலையில் ஐந்து கிராம் அளவுள்ள அருகம்புல் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும். குணமாகும் நோய்கள்: பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், இரத்தப்புற்று நோய், இருமல், வயிற்று வலி, மூட்டு வலி ஆகியவை குணமாகும். மேலும் ஆரோக்கிய டானிக்காக செயல்படும் அருகம்புல் பொடியானது அலர்ஜி, நரம்பு தளர்ச்சி, உடல் கனம் ஆகியவற்றை குறைக்கும்.வாய்வு கோளாறு, தோல்நோய் போன்றவற்றை நீக்கும். ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.இரத்தம் சுத்தம் செய்யப்படுவதால் எந்த விதமான நோயும் அணுகாது. வல்லாரைப் பொடி: தினமும் காலை, மதியம் சாப்பாட்டுக்கு பின் ஐந்து கிராம் அளவுள்ள வல்லாரைப் பொடியை நீர் மற்றும் தேனில் கலந்து காப்பிக்கு பதிலாக சாப்பிடலாம். குணமாகும் நோய்கள்: ஞாபக சக்தி, மூளை வளர்ச்சி, நரம்பு தளர்ச்சி, புற்றுநோய், மஞ்சள் காமாலை, தொழுநோய், வாதநோய், நீரழிவு, சளி, சிறுநீர் பிரச்சனை, மாதவிடாய், யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணமாக்க வல்லது. வில்வப்பொடி: தினமும் காலை உணவுக்கு பின் இரண்டு கிராம் அளவுள்ள வில்வப்பொடியை தேன் மற்றும்...

அக்கிநோய் குணமாக :

அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்! வெயில் காலங்களில் தாக்கும் நோய்களில் ஒன்றுதான் அக்கி நோய் ஆகும்.இதுவும் அம்மை நோயினைப் போன்று வைரஸ் கிருமிகளால் வருவதுதான். ஆனால் அக்கிநோய் என்பது புதிதாக வருவதல்ல அம்மை நோய் முன்பு தாக்கியவர்களிடம்தான் இந்நோய் வருகின்றது.அம்மை நோய் வந்து போன பிறகு இந்த வைரஸ் கிருமிகள் முழுமையாக நீங்கி விடுவதில்லை. சில அம்மை வைரஸ் கிருமிகள் உடலில் தங்கி விடும்.இவை பல வருடங்க ளுக்குப் பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது வெளி வந்து அக்கி நோய் ஆக தோன்றும். இந்த நோய்க்கு கிராமங்களில் மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் செல்வார்கள்.அவர்கள் காவி மண்ணினால் அக்கி நோய் கண்டவரின் காளி அம்மன் போன்று உருவம் உடலில் வரைந்து மந்திரம் செபித்து அனுப்பி விடுவார்கள். வலியும்,வேதனையும் நீங்கி குணமடைவர்.  அக்கி நோய்க்கு சித்த மருத்துவ முறையில் அனுபவ முறை தீர்வுகள்.  மருந்து - 1 நாட்டு மருந்து கடைகளில் பூங்காவி எனக் கேட்டால் கொடுப்பார்கள். அதனுடன் பன்னீர் வாங்கி வந்து பூங்காவி பொடியை துணியில் வைத்து சளித்து எடுத்து பன்னீர் சேர்த்து குழைத்து அக்கி உள்ள இடங...

ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க!

ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க! நோயை விலை கொடுத்து வாங்காதிங்க ! நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாத எண்ணெய். ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா? மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள். பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள். இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது. திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் ” சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் ” என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாய...

மாதா பிதா குரு தெய்வம்

தாய் தந்தையர் பாதம் வணங்கி.... குருவின் திருவடிகள் வணங்கி..... இறைவனின் பொற்பாதங்கள் வணங்கி.... அன்னையின் அழியா அன்பு  தந்தையின் ஆழ்ந்த அக்கறை குருவின் நல்ல வழிகாட்டுதல் இறைவனின் ஆசீர்வாதம் இவை அனைத்தையும் போல இந்த வலைதளம் மக்களாகிய உங்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடுன் ஆரம்பித்துள்ளேன்.... இந்த வளைதளம் பின்பற்றுவோர் உங்கள் நிறை குறைகளையும், நான் தவறாக ஏதும் பதிவு செய்தால் அதையும் எனக்கு தெரியப்படுத்தலாம்.... உங்களின் ஆதரவை எதிர்நோக்கும்..... உங்களில் ஒருவன்...