Skip to main content

Posts

Showing posts from 2019

வெட்பாலை தைலம் செய்முறை

வெப்பாலை இலைகளை போதிய அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நான்கைந்து நாட்கள் நல்ல சூரிய ஒளி படும்படி  வைத்து சூரிய புடமிட்டு வைக்க எண்ணெய் நன்கு நீல நிற வண்ணம் பெறும்.  இந்த எண்ணெயை வடித்து பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு மேற்பூச்சாகப் பூசிவர உடலில் செதில் செதிலாகக் கொட்டி அரிப்பும், துர்நாற்றமும்  மன உளைச்சலும் உண்டாக்கக்கூடிய தோல் நோயான சொரியாஸிஸ் குணமாகும். - அகத்தியம்

எளிய தைல முறைகளை இங்கு பதிவிடுகிறேன்:-

மூலிகைச் சரக்குகளைக் கற்கமாக்கியோ அல்லது சாறுகளை எண்ணெயுடன் கலந்து காய்ச்சியோ எடுத்து கொள்ளவது தைலம் எனப்படும்.  இவ்வாறு தயார் செய்யப்படும் தைலத்தை ஆறு மாதங்களுக்கு வரை பயன்படுத்தலாம். அருகன் தைலம் அருகம்புல்லை கருக்களையும் நீக்கி இடித்துச் சாறு பிழிந்து அத்துடன் சிறிது அதிமதுரம் சேர்த்து சாற்றுக்குச் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிக் தைலப் பக்குவத்தில் எடுத்துக் கொள்ளவும். மேற்கொண்டவாறு தயார் செய்யப்படும் அருகன் தைலத்தை வெளிப்பூச்சாக தடவி வர  அனைத்துத் தோல் நோய்கள், தலைமுடி உதிர்தல், புழுவெட்டு ஆகியன தீரும். நாளை பிண்ட தைலம் செய்முறை பார்ப்போம் - அகத்தியம்

தாது புஷ்டிக்கு

ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை. இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

பெண்கள் வயதிற்கு வர

கரியபோளம்/சோற்றுக்கற்றாழை பிசினுடன், சம அளவு பொரித்த பெருங்காயம் கலந்து, பனங்கருப்பட்டி சேர்த்திடித்து, 5கிராம் தினமிருவேளை வெந்நீருடன் உண்டு வர வயதாகியும் பருவமடையாத பெண்கள் பருவமடைவர் சூதகவலியும் தீரும் நிலவாகை சூரணம் திரிகடி பசுமோரில் கொள்ள பூப்பெய்துவர் வேலிப்பருத்தி இலைச்சாறு 20மிலி, அதிகாலையில் 3நாள் சப்பிட்டுவர இளமையில் நின்றுபோன மாதவிலக்கு (amenorrhoea) மீண்டும் வெளிப்படும்.  புளி இல்லாப் பத்தியம்.                              வேலிப்பருத்திஇலை 7,மிளகு 11,சேர்த்தரைத்து 5நாள், காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு  * புளி இல்லாப் பத்தியமிருக்க * பூப்படையாத பெண்கள் பருவமடைவர். இல்லையெனில் 15நாள் கழித்து மீண்டும் 5நாள் சாப்பிடவும்.       -  அகத்தியம்

பிறந்த குழந்தை அதிகமாக பால்குடித்து வயிறு உப்பி விட்டால்

  இரண்டு இளம்பெரிய வெற்றிலைகளை எடுத்து விளக்கெண்ணெயை ஒரு பக்கம் தடவி மிகவும் லேசாக சூடாக்கி வயிற்றின் மீது போல போட்டால் உப்புசம் குறையும்.  சிறு குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்பட்டால் காய்ந்த திரா‌ட்சை 10 கொதிக்க வைத்து கசக்கிப் பிழிந்து வடிகட்டி கொடுத்தால் உப்புசம் தானே இறங்கும்.  குளிர் காலத்தில் வீட்டுத் தரை ஜில்லென்று இருக்கும் இதனால் குழந்தைகள் நடந்தால் சளி ஏற்படும், இதனை‌த் தடுக்க சாக்ஸ ்  இருந்தால் குழந்தைகள் காலில் மாட்டி விடுங்கள். சூட்டினால் வயிறு வலித்து அடிக்கடி மலம் கழிக்கும் குழந்தைகளுக்கு வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட்டால் உடனே நின்று விடும்.  3 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனைக் கொடுக்கலாம்.  வயிறு உப்புசம் ஏற்பட்ட குழந்தைகளுக்கு சுக்கு வெ‌‌ந்‌நீரில் சர்க்கரை கலந்து கொடுத்தால் மலம் கழித்து உப்புசம் குறையும்.  தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஏற்புடையதா என்பதை அறிய அதனை நீரில் சிறிதளவு விட்டுப் பார்க்கவும். நீருடன் கலக்காமல் பால் தனித்திருந்தால் தாய்க்கு உடல் நிலை சரியில்லையென்று அர்த்தம் . ...

தாய்பால் நன்றாக சுரக்க

பேரிச்சை - 2 (கருநிறமுள்ளது)  மலைப்பூண்டு தோலோடு - 2 பல் மலைப்பூண்டை கம்பியில் குத்தி அடுப்பில் சுட்டு தோல் நீக்கி அதை பேரிச்சையில் வைத்து காலையிலும் (2) மாலையிலும் (2) இரண்டு சாப்பிடவும். மற்றும் திப்பிலி - 1 ஸ்பூன் அதிமதுரம்-4 துண்டு ஏலக்காய் - 6 சுக்கு _ சிறு துண்டு பனங் கருப்பட்டி - 6 ஸ்பூன் மேற்சொன்ன பொருட்களை பொடி செய்து வெதுவெதுப்பான பாலில் 1 /2 ஸ்பூன் கலந்து குடிக்கலாம்ங்க. முருங்கை கீரை,பிஞ்சு நூல்கோல், ராகிமால்ட்,பூங்கார் அரிசி,பால் குடவாழை அரிசி,குழியடிச்சான் அரிசி,ஈரல்,கருவாடு, ஆட்டுக் கால் இந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டாலும் பால் சுரப்பு அதிகமாகும்.

மூக்கடைப்பு சரியாக...

ஓமம் (Carum roxburgianum) ஓமத்தை இலேசாக வறுத்துப் பொடி செய்து 2 கிராம் எடுத்து அத்துடன் 1 கிராம் பச்சைக் கற்பூரம் சேர்த்து வெள்ளைத் துணியில் கட்டி நுகர, மூக்கடைப்பு, மூக்குநீர் பாய்தல், பீனிசம் ஆகியன தீரும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து) - அகத்தியம்

ஆண்மை அதிகரிக்க சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்

நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பால், சர்க்கரை கலந்து உண்டுவரலாம். பூனைக்காலி விதை, நெல்லிவற்றல் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, ஒரு ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம். அமுக்கரா கிழங்குப் பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் சாப்பிடலாம். நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ணலாம். ஓரிதழ் தாமரையை அரைத்துப் பாக்கு அளவு எடுத்துப் பாலில் கலந்து அருந்தலாம். தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிடலாம். சம அளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொடித்து, ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம். துவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டையும் கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம். முள்முருங்கை இலையை நெய், அரிசி மாவு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். வில்வப் பிசின், வாதுமைப் பிசின் சம அளவு எடுத்துப் பொடித்து அதில் கால் ஸ்பூன் எடுத்துப் பால் சேர்த்து குடிக்கலாம். நாவல் வேர்ப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற...

சிறு மருத்துவ குறிப்புகள்...

இருமல் குணமாக இஞ்சிச்சாறும் ஈரவெங்காயச்சாறும் எலுமிச்சைச்சாறும் சமனாகக் கலந்து குடிக்க இருமல் நீங்கும். கட்டி கரைய : ஊமத்தை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கட்டிகளின் மேல் வைத்துக்கட்ட கட்டி கரையும். பெருத்த கட்டிகள் உடைந்து வற்றி விடும். - அகத்தியம்

மாதவிடாய் காலங்களில் இந்த அற்புத பானத்தை குடிச்சாலே போதும்

பொதுவாக, மாதவிடாய்க் காலங்களில் வலியும், சோர்வும் வருவது இயற்கையே என்றாலும், இன்றைய உலகில் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளும், பணிக்குச் செல்லும் பெண்களுமே, அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காய கற்ப மூலிகைகளில் சித்தர்கள் முதலில் குறிப்பிடுவது கடுக்காய் ஆகும். இது பெண்களுக்கு ஏற்படும் மாதாவிலக்கு வலியை குறைக்க உதவுகின்றது. தற்போது மாத விடாய்க் கோளாறை கடுக்காயை வைத்து எப்படி சரி செய்வது எவ்வாறு எனப் பார்க்கலாம் தேவையானவை கடுக்காய் இலவங்கப்பட்டை தண்ணீர் செய்முறை கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். அத்துடன் சிறிது இலவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர, மாதாந்திர வலிகள் எல்லாம் ஓடி விடும். அகத்தியம்

வயிற்று எரிச்சல் கை கால் பாத எரிச்சல் குன்மம் பித்தம் தீர

மாசிக்காய் சீரகம் அதிமதுரம் திராட்சை விதை இவைகளை சம அளவு எடுத்து சூரணம் செய்து 5 கிராம் அளவு பசு வெண்ணெயில் குழைத்து காலை இரவு உணவுக்கு முன் சாப்பிடவும்

பூச்சிவெட்டு குணமடையும் அற்புதம்.

சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும். மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு [ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடி முளைக்கும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும். பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது பழமொழி.* 

சளி தொடர் இருமல் குணமாக இலகு வைத்தியம்

அரிசி திப்பிலியை நன்கு பொடி செய்து சலித்து அதில் சிறிதளவு எடுத்து தேனும், வெற்றிலைச் சாறும் கலந்து சாப்பிட்டால் தொடர் இருமல், காய்ச்சல், சளி, போன்றவை சரியாகும் திப்பிலி நுரையீரல் போன்ற பகுதிகளில் உள்ள சளியை போக்குவதால் இதை கோழையகற்றி என்றும் சொல்லுவார்கள்.

மூலிகை ஆவி பிடித்தால்

பல இடங்களுக்கு பயணம் செய்தும் பலதரபட்ட தண்ணில் குளித்தும் நீர் அருந்தியும் பின் இதனால் ஏற்பட்ட காய்ச்சல் தலைபாரம் சலதேஷம் . சளி இருமல் இவைகளுக்கு உடன் தீர்வுக்கு மூலிகை ஆவி பிடித்தால் உடனே நிவர்த்தி கிடைக்கும் முறை 1/2 லிட்டர் தண்ணிரை நல்ல சூடக்கி கொள்ளவும் * எல்லா மூலிகையும் * * ஒரு கைபிடி அளவு * ஆடாதேடை நொச்சி   நிலவோம்பு நல்வேளை.     முடக்கத்தான் சிறிது நல்லமிளகு  சிறிது மஞ்சள் பொடி மூலிகையை சிறிதாக வெட்டி கொதித்த தண்ணிரில் போட்டு அதில் மஞ்சள் பொடி நல்ல மிளகும் சேர்த்து நன்கு கொதித்த பின் இறக்கி ஆவி வெளியே போகாது தலையை மூடி ஆவியை சுவாசிக்க வேண்டும் சிறிது நேரம் பின்பு பாருங்கள் உங்களுடைய பிணிகள் தீரும் பின்பு மூலிகை தழையை சிறிது துணியில் கட்டி முதுகிலும் நெஞ்சு பகுதியில் ஒத்தடம் கொடுக்க மார்பு சளி கரைந்து விடும் இது ஓலைச்சுவடி அனுபவமுறை