கரியபோளம்/சோற்றுக்கற்றாழை பிசினுடன், சம அளவு பொரித்த பெருங்காயம் கலந்து, பனங்கருப்பட்டி சேர்த்திடித்து, 5கிராம் தினமிருவேளை வெந்நீருடன் உண்டு வர வயதாகியும் பருவமடையாத பெண்கள் பருவமடைவர்
சூதகவலியும் தீரும்
நிலவாகை சூரணம் திரிகடி பசுமோரில் கொள்ள பூப்பெய்துவர்
வேலிப்பருத்தி இலைச்சாறு 20மிலி, அதிகாலையில் 3நாள் சப்பிட்டுவர இளமையில் நின்றுபோன மாதவிலக்கு (amenorrhoea) மீண்டும் வெளிப்படும்.
புளி இல்லாப் பத்தியம்.
வேலிப்பருத்திஇலை 7,மிளகு 11,சேர்த்தரைத்து 5நாள், காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு *புளி இல்லாப் பத்தியமிருக்க* பூப்படையாத பெண்கள் பருவமடைவர். இல்லையெனில் 15நாள் கழித்து மீண்டும் 5நாள் சாப்பிடவும்.
- அகத்தியம்
Comments
Post a Comment