Skip to main content

Posts

Showing posts from June, 2018

நரை முடி கருக்க

* நெல்லிக்காய் தைலம்!* பச்சை நெல்லிச்சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு, கற்றாழைச்சாறு, சிறுகீரைச்சாறு, பசும்பால், செவ்விளநீர் ஆகியவற்றை வகைக்கு 300 மி.லி. எடுத்துக் கொள்ளவும். அதிமதுரம், கோஷ்டம், ஏலம், கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய், சாதிப்பத்திரி, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தான்றிக்காய், இலவங்கப்பத்திரி, இலவங்கப்பட்டை, சோம்பு, வால்மிளகு ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் எடுத்துத் தூள் செய்து, ஆவின்பால், செவ்விளநீர் விட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். இரண்டு லிட்டர் நல்லெண்ணெய்யுடன் மேற்சொன்ன சாற்றையும் அரைத்த விழுதினையும் கலந்து அடுப்பிலேற்றி, சிறு தீயாய் எரித்து, தைல பதத்தில் இறக்கிவிடவும். * இந்தத் தைலத்தை தினசரி தேய்த்து வர,* தலைமுடி கொட்டுதல், இளநரை போன்றவை மறையும். கண் நோய்கள் அனைத்தும் தீரும். வெட்டைச்சூடு, கை, கால் எரிச்சல், உடம் பெரிச்சல் போன்றவை தீரும். பித்தத்தினால் உண்டாகும் தலைவலியும் தீரும் .

தீப்புண் ஆற இளகு வைத்தியம்

* தீப்புண் விரைவில் ஆற* வெற்றிலை போட பயன்படுத்தப்படும் சுண்ணாம்பை இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து கலக்கி தெளியவைக்கவும் அதில் தெளிந்த நீரை மட்டும் தனியாக எடுத்து சமஅளவில் தேங்காய் எண்ணை சேர்க்க களிபோலாகும் அதை கோழியின் இறகால் காயம்பட்ட இடத்தில் போட எரிச்சல் மாறும் சூடுபட்ட காயம் விரைவில் குணமாகும். *அனுபவ மருந்து...* நன்றி - *அகத்தியம்* www.chakraayudham.blogspot.com

எச்சரிக்கை - பெருங்காய மோசடி

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி . .  பெருங்காயம் -பெருங்காயமே இல்லை அன்புள்ள மக்களே! பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும்  என்று நாம் கேள்விப் பட்டிருப்போம்.  ஆனால், *நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?*  அந்த கூட்டு பெருங்காயம் ...  இந்த கூட்டு பெருங்காயம் ...  அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம்  இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு.  ஆனால் இது அந்த கூட்டு அல்ல.  இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக்  கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும். இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை.   என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம்.  அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்? ஒரு வகையான அராபிய பிசின் 60%, மைதா 30%, பெருங்காய வாசனை தரும் ஒர...

நமது பாரம்பரியம் - ஔவை விரதம்.. பெண்களுக்கு மட்டும்

நல்ல வரன், குழந்தை பாக்கியம், குடும்ப நலன் அருளும் ஔவையார் விரதம்! தமிழர்களின் பாரம்பர்ய விழாக்கள், வழிபாடுகள் யாவும் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டே அமைந்தவை. தாங்கள் வாழும் நிலத்தைப் பொறுத்தே அவர்களின் வழிபாடுகளும், விரதங்களும் அமைந்துள்ளன. அப்படி உருவான ஒரு விரதம்தான் ஔவையார் விரதம். பெண்களின் முன்னேற்றத்துக்கும், அவர்களுடைய நலவாழ்வுக்கும் அடிப்படையாக அமைந்த இந்த வழிபாடு, பெண்கள் மட்டுமே ஒன்று சேர்ந்து கொண்டாடிய முதல் விழா என்று கூடச் சொல்லலாம். ஔவையார் விரதம் இருப்பது எப்படி? திருமணமாகாத பெண்களும், திருமணம் முடித்த சுமங்கலிப் பெண்களும் ஒன்று சேர்ந்து செய்யும் விரதம் ஔவையார் விரதம். தை, மாசி மற்றும் ஆடிமாத செவ்வாய்க் கிழமைகளில் இந்த விரதத்தினை மேற்கொள்வார்கள். இந்த விரதத்தைப் பற்றி கிராமத்துப் பெண்கள் கூறும்போது, 'மறந்தா மாசி, தட்டினா தை, அசந்தா ஆடி' என்று குறிப்பிடுவார்கள். தை மாதம் கடைப்பிடிக்கவேண்டிய இந்த விரதத்தை மறந்துவிட்டால் மாசி மாதத்திலும், மாசியிலும் மறந்து அசந்துவிட்டால் ஆடியிலும் கடைப்பிடிக்கவேண்டும் என்பது இதன் பொருள். ஆண்டுக்கு ஒருமுறையேனும் இந்த விரதத்தைக் கடை...

மூலம் குணமாக அகத்தியர் கூறும் வழிமுறை

மூலத்திற்க்கு கஷாயம்... அகத்தியர்.! தானென்ற மூலத்துக்கு உறுதி சொல்வேன் தயங்காத மூலமென்ற தெல்லாம் போகும் தேனென்ற புல்லறுகு துளிரவைத்து செழுமையுள்ள தண்ணீரில் குடித்தாயானால் ஊனென்ற மூலமெல்லாம் தீரும் தீரும் உத்தமனே ஈரஞ்சு நாளில் மைந்தா வீனென்ற மூலமெல்லாம் ஒழிந்து போகும் - அமுத கலைஞானம் 1200 பொருள் : எல்லா வகை மூல நோயும் நீங்குவதற்க்கு மருந்து சொல்கிறேன், அறுகம்புல்லை பிடிங்கி வந்து தூய்மையான தண்ணீரில் போட்டுகொதிக்க வைத்து நன்கு கொதித்ததும் அதை இறக்கி வடித்து அரை டம்ளர் வீதம் பத்து நாட்கள் காலை-மாலை உணவுக்கு முன்பு அருந்தினால் எல்லா வகை மூலமும் கண்டிப்பாக நீங்கி போகும் என்கிறார் அகத்தியர்.

நரைமுடி கருப்பாகவும் உதிர்வது குறையவும்!! கருப்பன் தைலம்

1.கறுப்புவரட்பூலான்பழம் - 50 கிராம்.            2.மருதாணியிலை         50கிராம்.      3.கடுக்காய்த்தோல்      50கிராம்          4.தாமரைத்தண்டு 50கிராம்      5.தான்றிக்காய்த்தோல் 50கிராம்        6.மருதம்பட்டை 50கிராம்  7.மஞ்சள் கரிசாலை 100கிராம்.     8.இரும்புஅரப்பொடி 30கிராம்       9.காய்ச்சுக்கட்டி 30.கிராம் 10. எலுமிச்சம்பழச்சாறு 30மில்லி.   11.நல்லெண்ணெய் 2லிட்டர்!!  .1-9-கடைச்சரக்குகளை .இடித்துபொடித்துக்கொண்டு!! எண்ணெய்யில் பொடியும் எலுச்சம்சாறும் கலந்து  தைலபதத்தில் காய்ச்சிவடித்து வைக்கவும் . இந்தஎண்ணெய்யினை தடவி வருவதால் இளநரை மாறிடும் நரைமாறி கருப்பாகும் முடிஉதிவர்வது குறையும் முடிசெழித்து வளரும்!!  உள்மருந்தாக   கரிசாலைக்கற்பம் 100கிராமில் அயபிரு...

தொப்பை குறைய

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும். 2. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும். 3. ஊற‌வைத்த‌ அவ‌லை காலையிலும், இர‌விலும் சாப்பிட்டுவ‌ர‌உட‌ல் எடை குறையும். 4. தினமும் 300 கிராம் கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து சாப்பிட உடல் எடை குறையும். 5. நத்தைச் சூரியின் விதைகளை பொன் வறுவலாக வறுத்து தண்ணீர் விட்டு சுண்ட வைத்து வடிகட்டி 100 மில்லியளவு எடுத்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர உடலில் எடை குறையும். 6. பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றை சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான ‌கொழுப்பு குறையும். 7. காசினிக் கீரையை உலர்த்தி பொடிய...

உடலின் கழிவுகளை வெளியேற்ற சில குறிப்புகள்

12 தவறான பொருட்களை உணவாக உண்டதால் ஒரு மனிதனுக்கு செரிமானக்குறைவு ஏற்படுகிறது. அவைகளை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது   உடலின் கழிவுகளை அகற்ற 1. உப்பு 2. புளி 3. வெள்ளை சர்க்கரை 4. வெங்காயம், பூண்டு 5. ஆங்கில மருந்து 6. கெமிக்கல் உணவு 7. உருளைக்கிழங்கு 8. அசைவ கொழுப்பு 9. பால் பதார்த்தங்கள் 10. பச்சை, வர மிளகாய் 11. ரீபைண்டு ஆயில் 12. மைதா, முட்டை மேலே கொடுக்கப்பட்டவைகள் வெகு நாட்கள் கழிவுகளாக உடலிலேயே தேங்குவதால் தான் நோய் என்று மனிதனுக்கு ஒன்று ஆரம்பமாகிறது. சரி, அந்த கழிவுகளை உடலிருந்து வெளியேற்ற முடியாதா ? என்றால் நிச்சயம் முடியும். காய்கறிக்கு அந்த மகத்துவம் உண்டு. *⚡எந்த கழிவை எந்த காய்கறியின் மூலம் நீக்க முடியும் என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உண்டு பயன் பெறவும்⚡* *உப்பை வெளியேற்றும் விதி⚡* தீர்வு : காலை, பிற்பகல், இரவு மூன்று முறை பச்சையாக நான்கு வெண்டைக்காயை உணவுக்கு முன் நன்கு மென்று அரைத்து வாயிலேயே கூழாக்கி பருகவும். *⚡புளி அதிகம் எடுப்பதால் உடல் தளர்ச்சி வேகமாக நடைபெறுகிறது. அதனை வெளியேற்றும் விதி⚡* தீர்வு : ஒரு வாழைக்காயை தோலை நீக்கிவிட்டு பச்சையாக நன்றா...

வெள்ளைப்படுதல் குணமாக

வெள்ளைப்படுதல் குறைய பூசணிக்காயை எடுத்து தோல் சீவி அதன் சதையை அரைத்து நன்கு பிழிந்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குறையும். அருகம்புல்லை எடுத்து நன்றாக வெட்டி நீர் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி அதில் சிறிது மிளகுத்தூள் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும். தினமும் காலை மாலை அண்ணாச்சி பழத்தை சாப்பிட்டு வந்தால் குணமாகும்... ( *திரிபலா சூரணம்*) கடுக்காய் நெல்லிமுள்ளி தான்றிக்காய் இவை மூன்றும் முறையாக சுத்தி செய்து அதை பொடி செய்து, அந்த பொடியை இரண்டு தேக்கரண்டி இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து சூடு ஆறிய பின் பிறப்பு உறுப்பை கழுவி வந்தால் குணமாகும்... இதே பொடியை தேனில் அல்லது வெந்நீரில் கலந்து பருகினால் வெள்ளைப்படுதல் குணமாகும்...