Skip to main content

Posts

Showing posts from August, 2017

வறட்டு இருமலை வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டு விரட்டலாம்.

வறட்டு இருமல் என்றால் என்ன? வறட்டு இருமல் என்பது ஒரு வைரஸ் தொற்று. இது அதிகமாக குழந்தைகளை பாதிக்கிறது. இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சற்று அதிக சத்தத்துடன் இருமுவார்கள். இருமும் பொழுது தொண்டையில் எரிச்சல் அதிகமாக ஏற்படும். குறிப்பாக படுத்தவுடன் இருமல் அதிகமாக ஏற்படும். தொண்டை கட்டினாற்போல் பேசுவார்கள். வறட்டு இருமல் வரக்காரணம்??? வறட்டு இருமல் வர முக்கியமான காரணமாக கருதப்படுவது தூசு மற்றும் புகை. புகை பிடிப்பவகளை மட்டுமின்றி அவர்கள் அருகில் இருப்பவர்களையும் இது பாதிக்கிறது. அசுத்தமான தண்ணீரினால் கூட இந்த நோய் ஏற்படலாம். வறட்டு இருமலின் பெயருக்கு ஏற்றார் போல் இந்த வறட்டு இருமல் சளி இல்லாமல் நம்மை தாக்கும். இதன் மற்றொரு காரணமாக ஒவ்வாமை கூறப்படுகிறது. சிலருக்கு விலங்குகளின் முடியினாலும் வறட்டு இருமல் ஏற்படலாம். சினிமா தியேட்டரில் விற்கும் நாள்பட்ட ஐஸ்கிரீம் சாப்பிட்டாலும் வறட்டு இருமல் வரும். வறட்டு இருமலை வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டு விரட்டலாம். வறட்டு இருமலுக்கு கொள்ளுப்பொடி,மிளகு, சுக்கு, பூண்டு  கசாயம் மருந்து கொள்ளுப்பயிறு 50கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து கொண்டு...

மூக்கடைப்பு குணமாக

ஒருவருக்கு சளி ஏற்படும் போது கூடவே மூக்கடைப்பும் தொற்றிக் கொள்கிறது. மூக்கடைப்பு ஏற்படும் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அது எரிச்சலை உண்டாகும். சளியிலிருந்து விடுபட்டால் மூக்கடைப்பு தானாக சரியாகிவிடும். மூக்கடைப்பிற்கு வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே நிவாரணம் பெறலாம். மூக்கடைப்பு குணமாக வேப்ப இலை, தேன் மருந்து வேப்ப இலையை மையாக அரைத்துக் கொண்டு அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு சிறு உருண்டை உண்டு வர வேண்டும். இதனை உண்ட பின்பு ஒரு மணி நேரத்திற்கு வேறு எந்த உணவையும் எடுத்துக் கொள்ள கூடாது. வேப்ப இலை செரிக்க ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இதனை வாழ் நாள் முழுதும் பின்பற்றலாம். இதனால் மூக்கடைபை உண்டாகும் அலர்ஜி மட்டுமல்லாமல் எல்லா விதமான அலர்ஜியும் சரியாகி விடும். வயிற்றில் உள்ள கிருமிகளையும் நீக்கும். மூக்கடைப்பு நீங்க மிளகு, தேன் மருந்து 10 அல்லது 12 மிளகாய் இரவில் இரண்டு ஸ்பூன் தேனில் ஊற வைக்க வேண்டும். காலையில் அதை சாப்பிட வேண்டும். மிளகை நன்கு மென்று சாப்பிடுவது நலம். இதன் மூலம் மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் பெறலாம்.   மூக்கடைப்பு குணமாக இஞ...
தைராய்டு குணமாக முள் முருங்கை பத்து இலைகளை எடுத்து இலைகளின் பின்னே உள்ள நரம்புகளை நீக்கிவிடவும்.... 50மி.லி தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து சாறு எடுக்க வேண்டும்... இந்த சாறை காலையில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வந்தால் போதும் தைராய்டு குறையும்....

மாதவிடாய் வலியை போக்க எளிய வழிகள்

மாதவிடாய்  வலியை போக்க 1. வெந்தயத்தை முதல் நாள் ஊற வைத்து மறு நாள் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் மாதவிடாயின் போது இறுக்கமான தசைகள் தளர்வாகி வலி குறையும்... 2. இஞ்சி  கருமிளகு தேநீர் சிறிது அளவு தண்ணீர் கொதிக்க வைத்து அதனுடன் இஞ்சி  தட்டிபோட்டு மிளகு பொடியை போட்டு கொதிக்க வைத்து  வெறும் வயிற்றில் குடித்தால் வலி குறையும்.. 3. நல்லெண்ணெயை சூடுபடுத்தி மிதமான சூட்டில் அடிவயிற்றில் மசாஜ் போல தேய்த்தால் கர்ப்பபை சுற்றி இருக்கும் சூடு குறைந்து குளிர்ச்சியைத்தரும்.. 4. சீரகம் 20நிமிடம் கொதிக்க வைத்து அதையும் அருந்தாலாம்... 5.சீமைசாமந்தி தேநீர் அருந்தலாம்

காய்ச்சல் குணமாக

காய்ச்சலுக்கு நம் வீட்டிலேயே உள்ள பொருட்களைக் கொண்டு இயற்கை மருந்துகள் செய்து கொடுக்கலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும். காய்ச்சல் குணமாக மிளகு மருந்து காய்ச்சல் குணமாக மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதை வாணலியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு நன்கு வறுபட்டு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் இறக்கி மத்தை வைத்து முடிந்த அளவு கடைந்து மீண்டும் அடுப்பில் வைத்து அதில் இரண்டு டம்ளர் குடிநீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வற்றி பாதியானது இறக்கி விடலாம். இந்த மிளகு கஷாய நீரை ஆற வைத்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கால் டம்ளர் குடித்தால் காய்ச்சல் குணமாகும். ஒவ்வொரு முறை குடிக்கும் முன் லேசாக சுட வைத்து இளஞ்சூட்டில் குடித்தல் நல்லது. இந்த மருத்துவத்தை மொத்தமாக செய்து வைத்துக் குடிக்காமல் தினம் தினம் புதிதாக தயார் செய்து குடித்து வந்தால் நலம். இரண்டே நாட்களில் காய்ச்சல் குணமாகும். மிளகின் காரம் அதிகம் இருந்தால் அதில் சிறிது சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். காய்ச்சல் குணமாக சீரகம், மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை மருந்து காய்ச்சல் குணமாக சீரகம் அரைத் தேக்கரண்டி, மி...

எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடலாம்

உணவு நாம் தினமும் சாப்பிடுவது இயல்பான ஒன்று. நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவும் சாப்பிடுகிறோம். ஆனால் எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது? இப்படி ஒரு சுவாரசியமான விசியத்தை படித்தேன். உண்மையிலே  அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று. 1. ஞாயிறு ---  சூரியன் கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம், சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா, மாதுளை ஜூஸ்,   கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார். சிம்ம ராசியினருக்கு  நலம் உண்டாகும். 2. திங்கள் --- சந்திரன் பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி, பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல், தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம். கடக  ராசியினருக்கு  நலம் உண்டாகும். 3. செவ்வாய் --- செவ்வாய் துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை, பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம்,,தர்பூசணி ஜூஸ்,, தேன் கலந்த செவ்வாழை ,ஆப்பிள்,ஆரஞ்சு பழக்கலவை. மேஷ, விருச்சிக   ராசியினருக்கு  நலம் உண்டாகும். 4. புதன் ---  புதன் கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம், பாவக்காய் கொத்சு,  முருங்கைக் காய் சூப், பாசிப்பயறு ...

நாம் துளசி செடியை ஏன் சுற்றி வருகிறோம்????

நாம் இந்தியாவில் பாரம்பரியமாக செய்து வரும் சில தெய்வ சடங்குகள் அதிக நன்மைகளை தருவதாக இருக்கின்றன. இவை நமது ஒழுக்கத்தை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கின்றன. இதில் நாம் காலம் காலமாக துளசி செடியை சுற்றி வந்து வணங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அதற்கு என்ன காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?    இந்த பகுதியில் நாம் துளசி செடியை ஏன் சுற்றி வருகிறோம் என்பதற்கான காரணங்களையும், அதன் பின் உள்ள அறிவியல் உண்மைகளையும் பற்றி தெரிந்து கொள்வோம். மருத்துவ குணம் : செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோவில் பூசைகளில்அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் பெருமாள் கோயில்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசி செடி பலரது வீடுகளில் துளசி செடி வளர்க்கப்படுகிறது. துளசி செடிக்கு விளக்கேற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யும் வழக்கம் உள்ளது. வீடுகள் மற்றும் கோவில்களின் முற்றங்களில் துளசி செடி வளர்க்கப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா என கேட...

பத்து மிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும் பயமின்றி உண்ணலாம்....

மிளகு. ஒரு மிளகை சேர்த்தால் போதும். உண்ணும் உணவு சுவையாகிப்போகும். இரண்டு மிளகோடு இரண்டொரு ஆடாதோடை இலையைச் சேர்த்தால் போதும். இருமல் சளி இருக்கும் இடம் தெரியாமல் போகும். மூன்று மிளகோடு வெங்காயம் சேர்த்தால் முசு முசு வென முடியும் முளைக்குமே. நான்கு மிளகோடு சுக்கு சேர்த்தால் நெஞ்சுவலி கொஞ்சமும் இல்லாமல் போகும். ஐந்து மிளகோடு சுக்கும் திப்பிலியும் சேர்ந்தால் நாள்பட்ட கோளையும் அகன்றிடுமே. ஆறு மிளகோடு பெருஞ்சீரகம் சேர்த்தால் ஆறிடும் பலநாள் மூலமும்.  ஏழு மிளகைத் தூள் செய்து உண்டால் தொண்டைப்புண்ணும் ஆறிடுமே. பசிக்காத வயிறும் பசிக்கும். எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்தால் எடுக்கும் வாந்தியும் உடனே நிற்கும். ஒன்பது மிளகோடு துளசி சேர்ந்தால் ஒவ்வாமை உடனே அகன்றிடுமே. பத்து மிளகு சேர்த்த உணவை பகைவன் வீட்டிலும் பயமின்றி உண்ணலாம்.

மண்ணுளி பாம்பு நமது நண்பன்....

மண்ணுளி பாம்பு நம்மை நாக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப் பட்டது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால் தான் நமது மக்கள் அந்த பாம்பினை தொட மாட்டார்கள் என்பதற்காக நமது முன்னோர்கள் காரணத்துடன் சொல்லி வைத்த பொய் அதுவாகும். SAND BOA என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நிலங்களில் மட்டுமே வாழும் சூழ்நிலை உள்ளன.  இவை பாம்பு இனமா என்று பார்த்தால், அது பாம்பே அல்ல, அது மண்புழு குடும்பத்தை சேர்ந்த ஒரு பெரிய அளவிலான புழு மட்டுமே. மண்ணில் வாழும் இது பாம்பு அல்ல என்கிறது அறிவியல். எனவே இனிமேல் மண்ணுளி புழு என்றழைப்போம். இந்த மண்ணுளி மிகுந்த கூச்ச சுபாவம் மற்றும் பயந்த சுபாவம் கொண்டதாகும். இந்த பாம்பினால் மரணம் நிகழ்த்தாக இதுவரை எந்த பதிவும் இல்லை. திடீரென இந்த பாம்புகளை லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது? இந்தக் கேள்விக்கான பதில் எங்கும் கிடைக்காது.  ஏனெனில் இதற்கான உண்மையான பதில் திட்டமிட்டு மறைக்கப் படுகிறது என்பது தான் உண்மை....

துளசி ரசம் - Basil leaves Rasam

* துளசி ரசம்* * தேவையான பொருட்கள் :* துளசி இலை - ஒரு கப், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம், துவரம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. * செய்முறை :* முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம்பருப்பை ஊற வைக்கவும். துளசியை தனியாக அரைத்து கொள்ளவும். புளியை நன்றாக கரைத்து உப்பு, பெருங்காயத்தூள் போட்டு கொதிக்கவிடவும். ஊற வைத்த பொருட்களை மிக்சியில் போட்டு கொதிக்கும் கரைசலில் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் அரைத்த துளசியை சேர்த்து, நுரைத்ததும் இறக்கவும்... கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சூப்பரான துளசி ரசம் தயார் * மருத்துவ குணம்* சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு துளசி ரசம் அருமையான மருந்தாகும்.

குடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்!!!

தொடர்ந்து மது அருந்தும் பழக்கத்தால் கல்லீரலின் மெல்லிய செல்கள் அழிய ஆரம்பிக்கின்றன. கல்லீரலில் அழற்சி தோன்ற ஆரம்பிக்கிறது ஆனாலும் அதன் அறிகுறிகள் உடனே தொிவதில்லை, மதுவை தண்ணீரையோ அல்லது சோடாவையோ ஊற்றி அதை “டைலூய்ட்”  செய்யாமல் ஒரே மூச்சில் குடிப்பதால் கல்லீரல் அழற்சி வேகமாகிறது. இதனால் கல்லீரலின் திறன் குறைகிறது உடன் சிறுநீரக பாதிப்பும் ஏற்படுகிறது. மெல்ல மெல்ல இரத்தத்தில் மதுவின் ஆதிக்கம் அதிகமாகிறது, ஆல்கஹால் லெவல் அதிகமானால் இரத்தம் தன் வேலையை ஒழுங்காய் செய்யாது.                  கல்லீரலின் மேல் பாகத்தில் உள்ள நுண்ணிய செல்கள் வயிற்றுக்குள் வரும் விஷங்களை தடுத்து அழிக்க வல்லது, மது இந்த நுண்ணிய தடுப்புச்சுவரை மெதுவாக கரைத்துவிடுவதால் கல்லீரல் திசுக்களை பல்வேறு விஷப்பொருள்கள் நேரடியாகத் தாக்க ஆரம்பிக்கின்றன. மதுப்பழக்கமுடையவா்கள் சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட முடியாது, அதனால் மஞ்சள் காமாலை, கல்லீரல் பெருக்க நோய், வயிற்று வலி, பசியின்மை, உடல் எடை குறைதல்,ஆண்மை குறைவு முதலிய நோய்கள் தாக்க ஆரம்பிக்கின்றன...

அக்கி நோய்

*அக்கி நோய் குணமாக சித்த மருத்துவம்!* வெயில் காலங்களில் தாக்கும் நோய்களில் ஒன்றுதான் அக்கி நோய் ஆகும்.இதுவும் அம்மை நோயினைப் போன்று வைரஸ் கிருமிகளால் வருவதுதான். ஆனால் அக்கிநோய் என்பது புதிதாக வருவதல்ல அம்மை நோய் முன்பு தாக்கியவர்களிடம்தான் இந்நோய் வருகின்றது. அம்மை நோய் வந்து போன பிறகு இந்த வைரஸ் கிருமிகள் முழுமையாக நீங்கி விடுவதில்லை. சில அம்மை வைரஸ் கிருமிகள் உடலில் தங்கி விடும். இவை பல வருடங்க ளுக்குப் பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது வெளி வந்து அக்கி நோய் ஆக தோன்றும். இந்த நோய்க்கு கிராமங்களில் மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் செல்வார்கள். அவர்கள் காவி மண்ணினால் அக்கி நோய் கண்டவரின் காளி அம்மன் போன்று உருவம் உடலில் வரைந்து மந்திரம் செபித்து அனுப்பி விடுவார்கள். வலியும்,வேதனையும் நீங்கி குணமடைவர். அக்கி நோய்க்கு சித்த மருத்துவ முறையில் அனுபவ முறை தீர்வுகள். மருந்து - 1 நாட்டு மருந்து கடைகளில் பூங்காவி எனக் கேட்டால் கொடுப்பார்கள். அதனுடன் பன்னீர் வாங்கி வந்து பூங்காவி பொடியை துணியில் வைத்து சளித்து எடுத்து பன்னீர் சேர்த்து குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூசவும். எரிச...