Skip to main content

Posts

Showing posts from July, 2018

கண் சிவப்பு/கண்களில் நீர் வடிதல் / கண் எரிச்சல் குணமாக

 கண் சிவப்பு/கண்களில் நீர் வடிதல் / கண் எரிச்சல் குணமாக :    1. வில்வ இலைகளை வெறும் இரும்புச் சட்டியில் போட்டு வதக்கி ஒரு கதர் / பருத்தி துணியில் போட்டு கண்களின் இமைகள் மேல் ஒத்தடம் தரவும்... ( *சூடு அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்*) 2. வெள்ளை நந்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும் 3. மழைநீரில் வெள்ளை நந்நியாவட்டையை ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரில் கண்களை கழுவினால் கண்கள் குளிர்ச்சி பெற்று உடலில் உள்ள உஷ்ணம் வெளியேறும் கண்கள் பொலிவடையும்.... 4. அடிக்கடி *நாட்டு மாடு பசு நெய் அல்லது வெண்ணெயை* உணவில் சேர்க்க கண்கள் தெளிவாகும்... உடலுக்கும் வன்மை தரும்... - அகத்தியம் www.chakraayudham.blogspot.com

பெண்களுக்கான பதிவு

கர்பப்பை பிரச்சனைகள் நீங்க :- மஞ்சள் கரிசாலை – 100 கிராம் வெள்ளைக் கரிசாலை – 100 கிராம்   குப்பைமேனி இலை – 100 கிராம் கொட்டைக்கரந்தை இலை– 100 கிராம்   அவுரி இலை– 100 கிராம் செருப்படை இலை – 100 கிராம் ஆகியவற்றின் இலைகளை சேகரித்து, நிழலில் காயவைத்து, தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில், ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரவும் பயன்கள் :-   பெண்களுக்கான முறையற்ற மாதவிடாய் சரியாகும்.  மேலும், வயிற்றுப்பூச்சிகள், கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகளும் விலகும்.  அதிகாலை, மாலை வேளைகளில் 45 நாட்கள் வரை தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.

இதயம் பலம் பெற இலகு வைத்தியம்

இதயம் பலமாக 200 செம்பரத்தம் பூ ( *தண்டு மற்றும் காம்பு நீக்கவும்*) எடுத்து துண்டு துண்டாய் நறுக்கி ஒரு பீங்கான் குடுவை அல்லது கண்ணாடி குடுவையிலிட்டு 50 எழுமிச்சை பழம் பிழிந்து அதில் சேர்த்து பிசைந்து வெயிலில் வைக்கவும்.... மாலையில் எடுத்து பிசைய ரத்தம் போல் சாறு வரும்... இதில் தேனை கலந்து காலை மாலை 2 அவுன்ஸ் எடுத்து தண்ணீரில் கலந்து சர்பத் போல குடிக்கவும்....   பயன்கள் : இருதயம் பலப்படும் இரத்தம் உற்பத்தி ஆகும் கல்லீரல் பலப்படும் உடல் வன்மை பெறும் - அகத்தியம்

சகல வாதங்களும் குணமாக

வாத எண்ணெய் (இரகசிய முறை): 1) எண்ணெய்கள்: நல்லெண்ணெய் - 100 மிலி வேப்ப எண்ணெய் - 100 மிலி விளக்கெண்ணெய் - 100 மிலி 2) புளித்த காடி நீர் அதாவது புளித்த (பழைய சோற்று நீர்) 3) கடை சரக்குகள் : சுக்கு மிளகு திப்பிலி பூண்டு ஓமம் பெருங்காயம் கிராம்பு வசம்பு சதகுப்பை வகைக்கு 1 பலம் 4) நாட்டுப் பசும்பால் செய்முறை : எல்லா சரக்குகளையும் ஒன்றாக சூரணித்து கலந்து வைக்கவும். இந்த சூரணத்தில்  நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து அதை புளித்த காடி ஊற்றி நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். சட்டியை அடுப்பிலேற்றி முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும் வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின் விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும். மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின் நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச் சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும் இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில் அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும் நன்கு கொதிக்க விடவும் ந...

தைவேளை மூலிகையின் மகத்துவம் - தலைவலி குணமாக

தலைவலியைப் போக்கும் - தைவேளை   தேவையானவை :- தைவேளை இலை -3 நாட்டு வெங்காயம் - 1  கல்உப்பு - 1 தைவேளை எடுத்து அரைத்து ஒரு வெள்ளைத்துணியில் வைத்து வடிகட்டி சாறு எடுத்து இடது பக்கத் தலைவலிக்கு வலது பக்கக் காதில் மூன்று சொட்டு சாறும் வலது பக்கத் தலவலிக்கு இடது பக்கக் காதில் மூன்று சொட்டு சாறும் ஊற்ற வேண்டும்.  இரண்டு பக்கத் தலைவலியானால் இரண்டு காதிலும் ஊற்ற வேண்டும்.  தலைவலி ஐந்து நிமிடத்தில் போய்விடும்.  நீண்ட நாட்களாக தலைவலியாக இருந்தால் அதே தைவேளை இலையை அதிகமாக அரைத்து சாற்றை பிழிந்து கீழே விட்டு விட்டு சக்கையை மட்டும் தலையில் முழுலதும் வைத்து ஒரு வெள்ளைத் துணியை வைத்து கட்டி அரைமணி நேரம் கழித்து அந்த சக்கையை மீண்டும் பிழிந்தால் தலையில் உள்ள நீர் சக்கையின் மூலமாக உருஞ்சி வந்து விடும் தலை வலியும் போய்விடும்.     மேலும் தைவேளையின் பூக்களைப் பறித்து பொடியாக நறுக்கி வெங்காயம், மிளகு, சீரகம், தக்காளி, தேங்காய், உப்பு சேர்த்து நெய்யில் கொத்து கீரையாக பொரித்து சாப்பிட தொண்டையில் சளி கட்டி பேசுவதற்கு கூடசிரமப்படுதல், தலைவலி காய்ச்சல்...
இரத்தம் ஊற அத்திபழம் + கருப்பு பேரீச்சம்பழம் இரண்டையும் அரைத்து அதில் சம அளவு சுத்தமான தேன் விட்டு கலக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட இரத்தம் ஊறும் நாட்டு கொத்தமல்லி இலைகளை வாங்கி நெய்யில் வதக்கி அரைத்து சுடு சாதத்துடன் கலந்து சாப்பிட இரத்தம் ஊறும்... பாவண கடுக்காய் மாத்திரை காலை மாலை 1 சாப்பிடவும்... *மருந்து வேண்டும் என்றாலும் தொடர்பு கொள்ளவும்* நன்றி - அகத்தியம் www.chakraayudham . blogspot.com

கட்டிகள் கரைய

கட்டிகள் கரைய அல்லது உடைய 2 சின்ன வெங்காயத்தை நெய்யில் நன்றாக வதக்கி எடுக்கவும்... பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிசையவும்... இளஞ்சூடாக கட்டிகள் மீது வைத்து கட்டவும்... - *அகத்தியம்* www.chakraayudham.blogspot.com

உதடு கருமை நீங்க

உதடுகளில் உள்ள கருமை போக எளிய வைத்தியம் தினமும் காலை இளநீர் பருகவும்... தினமும் இரவு எழுமிச்சை சாறு நாட்டு சக்கரை கலந்து பருகவும்... இரவு தூங்கும் முன் எழுமிச்சை சாறை உதடுகளில் தடவி வர வேண்டும்.... நிறம் மாறியதும் வைத்தியத்தை நிறுத்தி விடலாம்... நன்றி - *அகத்தியம்* www.chakraayudham.blogspot.com