Skip to main content

Posts

Showing posts from December, 2017

பெரும்பாடு நீங்க

பெரும்பாடு என்று சொல்லக்கூடிய அதாவது தொடர்ந்து அதிகமாக ரத்தம் வெளியேறினால்  முருங்கைப் பட்டை, மருதம் பட்டை சம அளவு எடுத்து இடித்து கஷாயமாக காலை,மாலை அரை டம்ளர் கஷாயமாகக் கொடுக்கவும்.  ஒவ்வொரு மாதமும் அதிக ரத்தப்போக்கு இருக்குமானால்  அச் சமயத்தில் இக் கஷாயத்தை மூன்று நாட்கள் சாப்பிட நிரந்தரமாக இப்பிரச்சனை நிவர்த்தியாகும்.

மூட்டு வலி முழுமையான நிவாரணம் வேண்டுமா ?

மூட்டு வலி முழுமையான நிவாரணம் வேண்டுமா ?   இதை முயற்சி செய்து பாருங்கள்.   முடக்கற்றான் இலை ஒரு கைப்பிடி கொத்தமல்லி 50 கிராம் கருஞ்சீரகம் 30கிராம் சுக்கு 10கிராம் சித்தரத்தை 10கிராம் மிளகு 10 கிராம் கொடம்புளி இரண்டு துண்டுகள் பெருங்காயம் சிறிதளவு பூனைக்காலி விதை - பத்து எல்லாவற்றையும் நன்றாக தட்டி ஒரு பானையிலிட்டு 8 கோப்பை நீர்விட்டு  பாதியாக வற்றவைத்து காலை மாலை விதம்  ஒரு கோப்பை சாப்பிட்டுவர இழந்த சக்திகள திரும்ப பெற்று கை கால் அசதி,மூட்டுவலி,உடல் பலவினம்,பாலியல் பலவினம்,உடல்நடுக்கம் போன்றைவை  குணமாகி வலிமையும் இளமையும் உண்டாகும்.... இந்த பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

அதிக உதிரப்போக்கு குணமாக

*அத்திப்பட்டை* *நாவற்பட்டை* *நறுவிலி பட்டை* *கருவேலம் பட்டை* இவற்றை சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து கஷாயம் அல்லது தேனில் குழைத்து சாப்பிட அதிக உதிரப்போக்கு குணமாகும்.... தொடர்ந்து அருந்தி வர கருப்பை நன்கு வலு பெறும்... இந்த கஷாயம் துவர்ப்பு சுவை உடையது *தேவை என்றால் செய்து தரப்படும்...* உங்கள் நலனில் அக்கறையுடன் - *அகத்தியம்*

உதடுகளின் கருமை நிறத்தை சிகப்பாக மாற்ற

கேள்வி: உதடு கருமை நீங்க ஏதேனும் இயற்கை மருத்துவம் உள்ளதா (புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது)  அவர் வயது 25 பதில் : 1. ஆண்கள் ஒரு துண்டு பீட்ரூட்டை எடுத்து, அதனைக் கொண்டு உதடுகளில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், உதடுகளில் உள்ள கருமை மறைந்து, உதடுகள் இயற்கையான நிறத்தைப் பெறும் 2. கற்றாழை உள்ளே உள்ள ஜெல்லை உதடுகள் மீது தடவி மசாஜ் செய்து காலையில் வெந்நீரில் கழுவ வேண்டும் 3. சுத்தமான தேன் ( *பாட்டிலில் விற்கப்படும் சக்கரை பாகு அல்ல*) உதட்டில் தடவினால் கருமை மாறும் 4. சுத்தமான செக்கில் ஆட்டிய விளக்கெண்ணெயை இரவு உதடுகள் மீதும் தடவலாம்... *தேன் மற்றும் சுத்தமான விளக்கெண்ணெய் கிடைக்கும்* Www.chakraayudham.blogspot.com

மருக்கள் அல்லது பாலுண்ணிகள் குணமாக

1. அம்மான் பச்சரிசி செடியை உடைத்தால் பால் வரும் அதை மருவின் மீது தடவலாம்.... 2. புற்று மணலை வெந்நீரில் குழைத்து போடவும்... 3. சுண்ணாம்பு மற்றும் நவச்சாரம் கலந்து மரு மீது தடவினால் விழும் *இஞ்சி* தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும். *அன்னாசி* இது மருக்களைப் போக்க உதவும் மற்றொரு வழியாகும். அதற்கு அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை பரு உள்ள இடத்தில் தேய்த்து 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். *வெங்காய சாறு* வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்தாலும் மருக்கள் மறையும். அதிலும் இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். வேண்டுமானால் இந்த கலவையை இரவில் படுக்கும் போது தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கலாம். *எலுமிச்சை சாறு* எலுமிச்சை சாற்றினைக் கொண்டு மரு உள்ள இட...