Skip to main content

Posts

Showing posts from September, 2017

ஒரு தோசையில் இவ்வளவு தத்துவமா*

அன்றாட உண்ணும் தோசையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மிகமும், ஜோதிடமும்... தோசை செய்ய உபயோகிக்கும் பொருட்களுள் நவ கிரகங்கள் அடக்கம். *அக்னி  = சூரியன்* *அரிசி    = சந்திரன்* *உளுந்து = ராகு-கேது* *வெந்தயம்  = புதன்* *தோசை கல் (இரும்பு) = சனி* *தோசையின் நிறம்  = செவ்வாய்* அதை உண்பவர்கள் *குரு (ஆண்)* *சுக்கிரன் (பெண்)* இதன் உருவம் (Galaxy) பிரபஞ்சமே தோசையை Clockwise சுட்டால் தான் வரும், பிரபஞ்சம் சுற்றுவதும் அப்படித்தானே. இந்த தோசையை ஒரு ஜோதிட பரிகாரமாக இருந்திருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் விஷேச நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படையலாக படைத்தது பின் உண்டு வந்தார்கள். ஏன் இன்றும் பெருமாளுக்கு தோசையை படையலாக படைத்து பிரசாதமாக கோவிலில் வழங்குகிறார். அப்போது இருந்த நம் முன்னோர்களுக்கு தோசை பலகார வகையாகத்தான் இருந்தது. பின் நாளில் மக்களுக்கு வசதி வந்த பிறகு அன்றாட உணவு வகையாக மாறி விட்டது. தோசை இந்தச் சொல் எப்படி வந்தது என்பதற்கு மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், (கல்லில்) தோய்த்துச் செய்வது என்னும் பொருளில் *தோய் + செய் என்னும் சொற்கள் இணைந்து உருவான இச்சொல்,* மக்க...

தமிழர்கள் அறிவு தான் கெத்து...

தலையாட்டி பொம்மையும்..!! தஞ்சை பெரியகோவிலும்..!! தலையாட்டி பொம்மைக்கும் தஞ்சை பெரியகோவிலுக்கும், தஞ்சாவூர்ல அந்த பொம்மை தயாரிக்கப்படுதுங்குறத விட வேற என்ன தொடர்பு ?? இருக்கு... இந்த சாதாரண தலையாட்டி பொம்மைக்குள்ள ஒரு தத்துவத்தையே ஒளிச்சு வச்சிருக்காங்க ! களிமண்ணை வைத்து செய்யப்படும் இந்த தஞ்சாவூர் பொம்மைகள் மிகவும் பாரம்பரியமானவை ! கொட்டங்கச்சி  எனப்படும் தேங்காயின் பாதி சிரட்டையின் மேல் களிமண்ணால் செய்யப்பட்ட ராஜா ராணியின் உருவ பொம்மைகளை வைத்து செய்யப்படுகிறது அந்த பொம்மையோட அடிப்பகுதி கொட்டாங்கச்சியால் செய்யப்பட்டு களிமண்ணால் நிரப்பியிருப்பார்கள் அப்படி செய்யப்பட்டுள்ள பொம்மையை தரையில் வைத்து எந்த பக்கம் சாய்த்தாலும் அது திரும்பவும் ஆடி ஆடி கடைசியாக நேராகிவிடும். ! இதுக்கும் பெரிய கோவிலுக்கும் என்ன சம்மந்தம் தெரியுமா.! நம்ம பெரிய கோவிலில் சமீபத்தில் தண்ணீர் பற்றாக்குறைக்காக போர் போடுவதற்க்க்காக ஆழ்துளை கிணறு தோண்டிருக்காங்க...!  தோண்ட தோண்ட களிமண்ணோ, செம்மண்னோ வரவில்லை ஒருவகையான மணல் வந்திருக்கிறது. அந்த மணல் காட்டாறுகளில் காணப்பட கூடிய மணல். சாதரண ஆற்று மணலுக்கும் அந்த மணல...

உடலில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்றும் - வாழை இலை குளியல்

*உடலுக்கு புத்துணர்வையும் புதுப்பொலிவையும் தரும் வாழை இலை குளியல் !!* வாழைமரம் மட்டுமே கரியமிலா வாயுவை உட்கொண்டு சுத்தமான பிராணவாயுவை மட்டுமே வெளிவிடுகிறது. மற்ற தாவரங்களிலிருந்து பெறப்படும் ஆக்ஸிஜனில் இருப்பதை விட பலமடங்கு பிராணசக்தி வாழையிலையில் நிறைந்துள்ளது. அதனால்தான் உடலில் பல்வேறு வழிகளில் தேங்கியுள்ள கரியமிலா வாய்வை வெளியேற்றி உடலில் உள்ள கெட்ட காற்றையும் நீரையும் வெளியேற்ற வாழையிலை குளியல் ஒரு உபாயமாக இருக்கிறது. *வாழை இலை குளியலின் பலன்கள் :* 1. உடலில் தேவையற்ற எடையை குறைக்கும். 2. உடல் வீக்கம், கை, கால்வீக்கத்தைப்போக்கும். 3. சிறுநீரக செயலிழப்பை தடுக்கும். 4.அலர்ஜி, மற்றும் தோல்வியாதிகள் குணமாகும். 5.வியர்வை சுரபிகளில் ஏற்பட்டுள்ள தடையை போக்கும். 6.உடலில் பல்வேறு உறுப்புகளில் தேங்கியுள்ள கெட்ட காற்றை வெளியேற்றும். 7. உடலுக்கு புத்துணர்வையும், புதுப்பொலிவையும் தரும். 8. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும். 9.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்பட்டுள்ள மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும். 10. அழகான தோற்றத்தை தரும். *வாழை இலை குளியல் செய்வது எப்படி ?* 1.வாழை குளியலுக்கு முதல் நாள் நிறைய நீர்...

வெண்புள்ளிக்கு தீர்வு

வெண்புள்ளிக்கு சித்த மருத்துவம்!!! நம் உடலைப் போர்த்தியிருக்கும் சருமத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயல்பான நிறம் மாறி, வெள்ளை நிறம் தோன்றுவதை வெண்புள்ளி என்கிறோம். இது மெலனின் என்ற நிறமிக் குறைபாட்டால் ஏற்படுகிறது. வெவ்வேறு அளவுகள், வடிவங்களில் இருக்கும். இந்தப் புள்ளிகள் முதலில் ஓர் இடத்தில் தோன்றி, உடல் முழுவதும் பரவும்.  நிச்சயமாக, இது தொற்று நோய் அல்ல. காரணங்கள் : உணவில் புரதம் மற்றும் வைட்டமின் குறைபாடு வயிற்றில் உள்ள கிருமிகள் நாட்பட்ட வயிற்றுக் கோளாறுகள் ஹார்மோன் பாதிப்பு மன அழுத்தம் நோய்வாய்ப்பட்ட நிலை அமீபியாசிஸ் சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்: கார்போக அரிசியைப் பொடித்து, கால் ஸ்பூன் எடுத்து உண்ணலாம். காட்டுச் சீரகப் பொடி, மிளகுத் தூள் சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிடலாம். நுணா இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் சாப்பிடலாம். அரை ஸ்பூன் கடுக்காய்ப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம். அதிமதுரப் பொடி, மிளகுப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம். வல்லாரை இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு காலையில் உண்ணலாம். அரை ஸ்பூன் செங்கொ...

ஹீமோகிளோபின் அதிகரிக்க - ரத்தம் ஊற

ரத்தம் அதிகரிக்க - To increase Hemoglobin Count அத்திப்பழம் 250கி கருப்பு பேரீச்சம்பழம் 250கி தேன் 500கி அத்தியையும் பேரீச்சையையும் ஓன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்... அதில் அரைக் கிலோ தேனை ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்... இந்த கலவையை காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் ரத்தம் அதிகரிக்கும்.... 2. நாட்டு கொத்தமல்லியை நாட்டு பசு நெயில் வதக்கி சுடு சோற்றில் பிசைந்து சாப்பிடவும் 3. அன்னபேதி செந்தூரம் அல்லது பாவனக் கடுக்காய் மாத்திரை உணவிற்கு பின் சாப்பிட்டாலும் ரத்தம் ஊறும்.... தேவைப்பட்டால் தொடர்புக்கு: 9841168598

தமிழனின் அறிவுத்திறன் கண்டு உலகமே வியக்கும்!!!

மழை பற்றிய சகுனங்கள்...!!! *******************************************************   மலைக்க வைக்கும்  நம் முன்னோர்களின் சாதனை!!! கீழ்கண்ட சகுனங்கள் தோன்றினால் மழை வரும். 1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை 2. தட்டான் தாழப் பறந்தால் மழை 3. அந்தி ஈசல் அடை மழை 4. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால்     மழை. 5. தவளை கத்தினால் மழை 6. மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை 7. கொக்கு மேடேறினால் மழை 8. பகற்பொழுதில் சேவல் கூவி வானத்தைப்     பார்த்தால் மழை 9. கழுதை காதை உயர்த்தினால் மழை 10. ஈசல் பறந்தால் மழை 11. புற்றிலே ஈசல் பறந்தாலும், மண்ணிலே கரையான் கூடினாலும் மழை 12. பாம்புகள் மரத்தில் ஏறினாலோ அல்லது        திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டாலோ மழை 13. பசு மாடுகள் கன்றைத் தேடி வீட்டிற்கு ஓடினால் மழை. 14. பூனைகள் நிலத்தை பிராண்டினால் மழை 15. குழந்தைகள் அணைக்கட்டி விளையாடினால் மழை 16. மலைகள் நீல நிறமாக காட்சியளித்தால் மழை 17. குகைகள் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தால் மழை 18. ஓணான்கள் வானத்தைப் பார்த்தால், மரத்தில் ஏறி வி...

ரசாயனம் தவிர்....

ரசாயனம் தவிர் ஷாம்பு   ஒரு காலத்தில் பணக்காரரின் அழகுச் சாதனம். ஒரு ரூபாய் பாக்கெட்டில் விற்கப்படத் தொடங்கியதும் ஷாம்புவின் பயன்பாடு இப்போது தினசரி பல லட்சம் லிட்டர்கள். `அடிக்கடி ஷாம்பு போடாதேன்னா, அப்போ தலைக்கு என்ன போடுறது?' எனக் கேட்கும் அளவுக்கு ஷாம்பு பல வீடுகளில் தினசரி சங்கதியாகிவிட்டது. `நல்லா புசுபுசுனு நுரைக்கிற மாதிரி நம் ஊர் சங்கதி வேற எதுவும் இல்லையா?' என்போருக்கு ஒரு செய்தி. பூவந்திக்கொட்டை - சோப்புக்காய் என வெகுஜன மொழியில் பேசப்படும் மூலிகைக்கொட்டை. நகைகளைக் கழுவ இதைப் பயன்படுத்தும் பழக்கம் உண்டு. சீகைக்காய், பாசிப்பயறுடன் இந்தக் கொட்டையைச் சேர்த்து அரைத்துவைத்துக்கொண்டு ஷாம்புக்குப் பதில் பயன்படுத்தலாம். கொஞ்சமாக நுரைக்கும் இந்த மூலிகை, அழுக்கை நீககி முடியை பலமாக்கும். கண்டிஷனர் என சந்தையில் கிடைக்கும் அத்தனையும் எண்ணெயோடு சேர்த்து பல ரசாயனங்களின் கலவையே. தலைக்கு அடிக்கடி தினசரி தேங்காய் எண்ணெய் தேய்த்தாலே போதும், கண்டிஷனர் அவசியம் இல்லை. வாரம் ஒருமுறை மட்டும் எண்ணெய்க் குளியலுக்கு என நல்லெண்ணெய் தேய்க்கலாம். ரசாயனம் இல்லா முகப்பேணலுக்கு இன்னும் வழி உண்டு....

குழந்தைகளுக்கு சளி, கபம், இருமல், தீர எளிய சித்த மருத்துவம்

குழந்தைகளுக்கு சளி, கபம், இருமல், தீர எளிய சித்த மருத்துவம் எனக்கு இரண்டு குழந்தைகள் . அவர்கள் இருவருக்கும்  அடிக்கடி சளி மற்றும் இருமல் வருகிறது . வயது 4 & 2. இங்கிலீஷ் மருந்து என் 2 , வயது பெண்ணுக்கு கேக்கவில்லை. நாங்கள் துளசி & கற்பூரவள்ளி இரண்டும் சேர்த்து கொடுத்தால் சளி போகிறது . இதை அடிக்கடி கொடுக்கலாமா . இல்லை வேற எதாவது இருந்தால் கூறவும். மேற்கண்ட கேள்விக்கான விளக்கம் : பொதுவாக சளி ,கபம் என்பது உடலில் மூன்று நிலைகளில் நோய் களாக தாக்குகின்றது . 1 - மூக்கு மற்றும் நெற்றி பகுதிகள் 2 - தொண்டை பகுதிகள் 3 - நுரையீரல் பகுதிகள் முதலில் மூக்கு மற்றும் வாய் பகுதிகளில் தான் வைரஸ் கிருமிகள் தாக்கும். பின்பு பரவி சில நாட்களில் நெஞ்சு மற்றும் நுரையீரல் பகுதி களில் பரவி விடும். சித்த மருத்துவ முறையினில் மேற்கண்ட மூன்று நிலைகளிலும் உள்ள சளி ,கபம் நோய்களுக்கு தனித்தனியாக மருந்துகள் உள்ளன. மூக்கு பகுதிகளின் சளியினைப் போக்க சிறு குழந்தைகளுக்கு துளசி , மற்றும் கற்பூர வள்ளி இலைச் சாறுகள் ஒரு சங்கு அளவு எடுத்து முறித்து தேன் சேர்த்து காலை,மாலை என இரண்டு வேளை கொடுக் கலாம். ...