Skip to main content

Posts

Showing posts from October, 2019

தாது புஷ்டிக்கு

ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை. இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

பெண்கள் வயதிற்கு வர

கரியபோளம்/சோற்றுக்கற்றாழை பிசினுடன், சம அளவு பொரித்த பெருங்காயம் கலந்து, பனங்கருப்பட்டி சேர்த்திடித்து, 5கிராம் தினமிருவேளை வெந்நீருடன் உண்டு வர வயதாகியும் பருவமடையாத பெண்கள் பருவமடைவர் சூதகவலியும் தீரும் நிலவாகை சூரணம் திரிகடி பசுமோரில் கொள்ள பூப்பெய்துவர் வேலிப்பருத்தி இலைச்சாறு 20மிலி, அதிகாலையில் 3நாள் சப்பிட்டுவர இளமையில் நின்றுபோன மாதவிலக்கு (amenorrhoea) மீண்டும் வெளிப்படும்.  புளி இல்லாப் பத்தியம்.                              வேலிப்பருத்திஇலை 7,மிளகு 11,சேர்த்தரைத்து 5நாள், காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு  * புளி இல்லாப் பத்தியமிருக்க * பூப்படையாத பெண்கள் பருவமடைவர். இல்லையெனில் 15நாள் கழித்து மீண்டும் 5நாள் சாப்பிடவும்.       -  அகத்தியம்