Skip to main content

Posts

Showing posts from January, 2019

மாதவிடாய் காலங்களில் இந்த அற்புத பானத்தை குடிச்சாலே போதும்

பொதுவாக, மாதவிடாய்க் காலங்களில் வலியும், சோர்வும் வருவது இயற்கையே என்றாலும், இன்றைய உலகில் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளும், பணிக்குச் செல்லும் பெண்களுமே, அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காய கற்ப மூலிகைகளில் சித்தர்கள் முதலில் குறிப்பிடுவது கடுக்காய் ஆகும். இது பெண்களுக்கு ஏற்படும் மாதாவிலக்கு வலியை குறைக்க உதவுகின்றது. தற்போது மாத விடாய்க் கோளாறை கடுக்காயை வைத்து எப்படி சரி செய்வது எவ்வாறு எனப் பார்க்கலாம் தேவையானவை கடுக்காய் இலவங்கப்பட்டை தண்ணீர் செய்முறை கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். அத்துடன் சிறிது இலவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர, மாதாந்திர வலிகள் எல்லாம் ஓடி விடும். அகத்தியம்

வயிற்று எரிச்சல் கை கால் பாத எரிச்சல் குன்மம் பித்தம் தீர

மாசிக்காய் சீரகம் அதிமதுரம் திராட்சை விதை இவைகளை சம அளவு எடுத்து சூரணம் செய்து 5 கிராம் அளவு பசு வெண்ணெயில் குழைத்து காலை இரவு உணவுக்கு முன் சாப்பிடவும்

பூச்சிவெட்டு குணமடையும் அற்புதம்.

சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும். மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு [ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடி முளைக்கும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும். பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது பழமொழி.* 

சளி தொடர் இருமல் குணமாக இலகு வைத்தியம்

அரிசி திப்பிலியை நன்கு பொடி செய்து சலித்து அதில் சிறிதளவு எடுத்து தேனும், வெற்றிலைச் சாறும் கலந்து சாப்பிட்டால் தொடர் இருமல், காய்ச்சல், சளி, போன்றவை சரியாகும் திப்பிலி நுரையீரல் போன்ற பகுதிகளில் உள்ள சளியை போக்குவதால் இதை கோழையகற்றி என்றும் சொல்லுவார்கள்.

மூலிகை ஆவி பிடித்தால்

பல இடங்களுக்கு பயணம் செய்தும் பலதரபட்ட தண்ணில் குளித்தும் நீர் அருந்தியும் பின் இதனால் ஏற்பட்ட காய்ச்சல் தலைபாரம் சலதேஷம் . சளி இருமல் இவைகளுக்கு உடன் தீர்வுக்கு மூலிகை ஆவி பிடித்தால் உடனே நிவர்த்தி கிடைக்கும் முறை 1/2 லிட்டர் தண்ணிரை நல்ல சூடக்கி கொள்ளவும் * எல்லா மூலிகையும் * * ஒரு கைபிடி அளவு * ஆடாதேடை நொச்சி   நிலவோம்பு நல்வேளை.     முடக்கத்தான் சிறிது நல்லமிளகு  சிறிது மஞ்சள் பொடி மூலிகையை சிறிதாக வெட்டி கொதித்த தண்ணிரில் போட்டு அதில் மஞ்சள் பொடி நல்ல மிளகும் சேர்த்து நன்கு கொதித்த பின் இறக்கி ஆவி வெளியே போகாது தலையை மூடி ஆவியை சுவாசிக்க வேண்டும் சிறிது நேரம் பின்பு பாருங்கள் உங்களுடைய பிணிகள் தீரும் பின்பு மூலிகை தழையை சிறிது துணியில் கட்டி முதுகிலும் நெஞ்சு பகுதியில் ஒத்தடம் கொடுக்க மார்பு சளி கரைந்து விடும் இது ஓலைச்சுவடி அனுபவமுறை