வெப்பாலை இலைகளை போதிய அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நான்கைந்து நாட்கள் நல்ல சூரிய ஒளி படும்படி வைத்து சூரிய புடமிட்டு வைக்க எண்ணெய் நன்கு நீல நிற வண்ணம் பெறும். இந்த எண்ணெயை வடித்து பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு மேற்பூச்சாகப் பூசிவர உடலில் செதில் செதிலாகக் கொட்டி அரிப்பும், துர்நாற்றமும் மன உளைச்சலும் உண்டாக்கக்கூடிய தோல் நோயான சொரியாஸிஸ் குணமாகும். - அகத்தியம்