பெண் குழந்தைகள் அநாவசிய ரோமங்களை நீக்கிட இயற்கை வைத்தியம். இன்றைய காலகட்டத்தில் பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் அபார வளர்ச்சி அடைகின்றனர். இதனால், உடலில் அநாவசிய ரோமங்கள் அதிகமாகி விடலாம். இந்த ரோமங்களை நீக்குவதோடு, மேலும் வளரவிடாமல் தடுக்க, விசேஷமான ஒரு குளியல் பொடி பயத்தம் பருப்பு 500கி சம்பங்கி விதை 50 கிராம், செண்பகப்பூ 50 கிராம், பொன்ஆவாரம் பூ 50 கிராம், கோரைக்கிழங்கு 100 கிராம். இவற்றை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும், குளிக்கும் போது இந்தப் பொடியை குழைத்துப் பூசுங்கள். மெழுகு போல் சருமம் மிளிரும். - அகத்தியம் www.chakraayudham.blogspot.com