உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கிறதா? சிலரது உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல தெரியும் தண்ணீர் தினமும் 3- 4 லிட்டர் குடிங்க. குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாம். சாதாரண நீரே போதும் சீரகத்தை நீரிலிட்டுகொதிக்க வைத்து, அந்த சீரக நீரைக், குடித்தால் உடல் சூடு தணியும். மருதாணி தேய்த்து குளிப்பதனால் நல்ல குளிர்ச்சி ஏற்பட்டு உடல் சூட்டை தணித்து குளு குளுன்னு வைக்கும் வெள்ளரியை அறுத்து கண்களில் வைங்க..நிறைய பழங்கள் சாப்பிடுங்க.. வாரத்திற்கு இரண்டு நாள் நல்லா நல்லெண்ணைய் தேய்த்து தலைக்கு குளிங்க. நிறைய மோர் குடிங்க. வெந்தயத்தை இரவே ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். தினமும் தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள். மாங்காய், மாம்பழம் சேர்க்க வேண்டாம். இளநீர் அதிகம் அருந்துங்கள். குளிர் பானங்கள் அருந்த வேண்டாம் வாரத்தில் ஒரு நாள் வெந்தயக்களி சாப்பிடலாம். நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம். ஒரு கைப்பிடியளவு முருங்கைப் பூக்களை 2 தேக்கரண்டி அளவு பசு நெய் விட்டு வதக்கி, அதோடு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்ற...